இந்தியா

செல்போன் வாங்கித் தருவதாகக் கூறி 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

கர்நாடகாவில் செல்போன் வாங்கி தருவதாகக் கூறி 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் வாங்கித் தருவதாகக் கூறி 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்குத் தெரிந்த ஆண் நண்பர் ஒருவர் அவருக்கு செல்போன் வாங்கி தருவதாகக் கூறியுள்ளார். இதை நம்பிய சிறுமி அவர் சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அந்த நபர் சிறுமியை இருசக்கர வாகனத்தில் யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த ஆண் நண்பர் உட்பட 4 பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

செல்போன் வாங்கித் தருவதாகக் கூறி 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

மேலும் இதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். பிறகு அவரை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அடித்து நடந்தவற்றை வெளியே சொன்னால் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர். பின்னர் சிறுமை ஊருக்கு வெளியே கொண்டு சென்று விட்டுள்ளனர். பிறகு அங்கிருந்து வீட்டிற்கு சென்று சிறுமி நடந்தவற்றைத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

செல்போன் வாங்கித் தருவதாகக் கூறி 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் சிறுமி வன்கொடுமை செய்த நான்கு பேரையும் அடையாளம் காட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து நான்கு பேரையும் போலிஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories