இந்தியா

இன்சூரன்ஸ் பணத்துக்காக தன்னை போலவே உள்ள நபரை கொலை செய்த அரசு ஊழியர்.. தெலுங்கானாவில் அதிர்ச்சி !

தன்னை போலவே உள்ள நபரை குடும்பத்தோடு சேர்ந்து கொலை செய்து இன்சூரன்ஸ் பணத்தை பெற திட்டமிட்ட நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்சூரன்ஸ் பணத்துக்காக தன்னை போலவே உள்ள நபரை கொலை செய்த அரசு ஊழியர்.. தெலுங்கானாவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தெலங்கானா மாநிலம் வேங்கடபூர் கிராமத்தை சேர்ந்தவர் பத்லோத் தர்மா (வயது 44). இவர் தலைமைச் செயலக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவரின் கார் அந்த பகுதியில் இருந்த சாக்கடையில் இருந்ததையும், அதில் அவர் எரிந்த நிலையில் உயிரிழந்ததையும் இரண்டு தூய்மைப் பணியாளர்கள் கண்டு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

அதன்பின்னர் போலிஸார் வந்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதலில் அங்கு உயிரிழந்தவர் பத்லோத் தர்மா என்று நினைத்த போலீஸாருக்கு பின்னர் அது குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இது குறித்து பத்லோத் தர்மாவின் மனைவியின் போன் கால், மற்றும் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்த போலிஸாருக்கு அதிர்ச்சி உண்மை தெரியவந்துள்ளது.

இன்சூரன்ஸ் பணத்துக்காக தன்னை போலவே உள்ள நபரை கொலை செய்த அரசு ஊழியர்.. தெலுங்கானாவில் அதிர்ச்சி !

விசாரணையில் பத்லோத் தர்மா பங்குசந்தையில் முதலீடு செய்து அதில் பணத்தை இறந்துள்ளார். இதனால் அந்த இழப்பை ஈடுசெய்ய தான் இன்சூரன்ஸ் செய்திருந்த ரூ.7.5 கோடியைப் பெற திட்டமிட்டுள்ளார். அதனால் தான் இறந்ததை போல செட்டப் செய்ய தனது மனைவி நீலா உறவினர்கள் ஸ்ரீநிவாஸ், சுந்தா ஆகியோருடன் இணைந்து திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி பத்லோத் தர்மா உடலமைப்போடு இருந்த ஒரு நபரை பிடித்து வீட்டில் வேலைக்கு ஆள் வேண்டும் என்று கூட்டி வந்துள்ளார். ஆனால், அவர் பாதியில் காணாமல் போகவே பாபு என்ற நபரை பிடித்து அவரை வேலைக்கு வருமாறு அழைத்து வந்துள்ளனர். பின்னர் அவருக்கு பத்லோத் தர்மாவின் உடலை அணியச்செய்து காரில் அமரவைத்துள்ளனர்.

இன்சூரன்ஸ் பணத்துக்காக தன்னை போலவே உள்ள நபரை கொலை செய்த அரசு ஊழியர்.. தெலுங்கானாவில் அதிர்ச்சி !

ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்த நிலையில், அவரை அடித்து கொலைசெய்து காரில் அமரவைத்து பின்னர் காரை பெட்ரோல் ஊற்றி எரித்து பத்லோத் தர்மா இறந்துவிட்டதாக ஊரை நம்பவைத்துள்ளனர். அதன்பின்னர் இன்சூரன்ஸ் செய்த பணத்தை பெற அதற்கான வேலையில் இறங்கியுள்ளனர்.

இதனை விசாரணையின் மூலம் அறிந்த போலிஸார் பத்லோத் தர்மா, அவர் மனைவி, உறவினர்கள் ஸ்ரீநிவாஸ், சுந்தா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories