இந்தியா

மந்தி பிரியாணி சாப்பிட்ட பெண் செவிலியருக்கு நேர்ந்த துயரம்.. அதிர்ச்சியில் உணவு பிரியர்கள்!

கேரளாவில் மந்தி பிரியாணி சாப்பிட்ட பெண் செவிலியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் உணவு பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மந்தி பிரியாணி சாப்பிட்ட பெண் செவிலியருக்கு நேர்ந்த துயரம்.. அதிர்ச்சியில் உணவு பிரியர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் ரஷ்மி. இவர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கோட்டயத்தில் உள்ள ஒரு உணவகத்தில் அல்ஃபாமா சிக்கன் மற்றும் மந்தி பிரியாணி சாப்பிட்டுள்ளார்.

இதையடுத்து அவருக்கு சில மணி நேரத்திலேயே வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளது. உடனே அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். இருந்தும் அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்தே வந்தது.

மந்தி பிரியாணி சாப்பிட்ட பெண் செவிலியருக்கு நேர்ந்த துயரம்.. அதிர்ச்சியில் உணவு பிரியர்கள்!

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ரஷ்மி உயிரிழந்தார். அதோடு இதே உணவகத்தில் சாப்பிட்ட 20 பேருக்கு மேல் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செவிலியர் இறந்ததை அடுத்து அவர் பிரியாணி சாப்பிட்ட உணவகத்திற்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கடைக்கு சீல் வைத்துள்ளனர். அதோடு உணவு விஷமானதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மந்தி பிரியாணி சாப்பிட்ட பெண் செவிலியருக்கு நேர்ந்த துயரம்.. அதிர்ச்சியில் உணவு பிரியர்கள்!

இந்த சம்பவத்தை அடுத்து கோட்டயத்தில் உள்ள அனைத்து உணவகத்திலும் சோதனை நடத்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். மந்தி பிரியாணி சாப்பிட்டு செவிலியர் உயிரிழந்த சம்பவம் உணவு பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் கேரளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories