இந்தியா

மீண்டும் இந்தியாவை வம்புக்கு இழுத்த சீனா.. அருணாச்சல பிரதேச எல்லையில் அத்துமீறி ஊடுருவிய ராணுவம்!

அருணாச்சல பிரதேச எல்லை அருகே சீன ராணுவம் அத்துமீறி ஊடுருவியதாகத் தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் இந்தியாவை வம்புக்கு இழுத்த சீனா.. அருணாச்சல பிரதேச எல்லையில் அத்துமீறி ஊடுருவிய ராணுவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவின் எல்லைப்பகுதியைச் சீனா தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு செய்ய முயன்று வருகிறது. இதனால் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே எப்போதும் பதட்டமான சூழ்நிலையே இருந்து வருகிறது.

இந்நிலையில், அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் பகுதி அருகே உள்ள எல்லையில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி ஊடுருவி வேலி அமைத்தாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த இந்திய ராணுவ வீரர்கள், சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியைத் தடுத்துள்ளனர்.

மீண்டும் இந்தியாவை வம்புக்கு இழுத்த சீனா.. அருணாச்சல பிரதேச எல்லையில் அத்துமீறி ஊடுருவிய ராணுவம்!

இதனால், இருநாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 6 இந்திய வீரர்கள் காயமடைந்ததாகவும் சீன தரப்பில் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் கடந்த 9ம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை அடுத்து தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

மீண்டும் இந்தியாவை வம்புக்கு இழுத்த சீனா.. அருணாச்சல பிரதேச எல்லையில் அத்துமீறி ஊடுருவிய ராணுவம்!

தொடர்ச்சியாகவே இந்திய எல்லையில் சீன ராணுவம் ஊடுருவும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. ஆனால் மோடி தலைமையிலான அரசாங்கம் அதை வேடிக்கை பார்த்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கடந்த ஜூன் 15ம் தேதி கூட கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அருணாச்சல பிரதேச எல்லைப்பகுதியில் சீன ராணும் ஊடுருவியுள்ளது.

banner

Related Stories

Related Stories