இந்தியா

பஞ்சு திருடியதற்காக இளைஞரை நிர்வாணப்படுத்தி கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல்.. ம.பி-யில் அதிர்ச்சி!

மத்திய பிரதேசத்தில் பஞ்சு திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரைக் கட்டிவைத்து அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சு திருடியதற்காக இளைஞரை நிர்வாணப்படுத்தி கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல்.. ம.பி-யில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சகாராம். விவசாயியான இவரது வயலில் பஞ்சு விளைத்துள்ளார் .இதை நூர் சங் என்பவர் திருடியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சகாராம் மற்றும் அவரது மகன்கள் நஹார் சிங், காஷிராம் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கொண்டு நூர் சங்கை கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர் அவரது ஆடைகளைக் கிழத்து நிர்வாணப்படுத்தியுள்ளனர்.

பஞ்சு திருடியதற்காக இளைஞரை நிர்வாணப்படுத்தி கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல்.. ம.பி-யில் அதிர்ச்சி!

பின்னர் நூர் சங்கை போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக 7 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட நூர் சங்கிடம் இருந்து 10 கிலோ பஞ்சு பறிமுதல் செய்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக அண்மையில் இந்தூரில் இதேபோன்று கோவிலில் பூஜை சரியாக செய்யாததால் பூசாரி ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தற்போது மீண்டும் இதேபோன்று இளைஞர் ஒருவர் கட்டிவைத்துத் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories