இந்தியா

80 வயது தாயை கொலை செய்ய முயன்ற 60 வயது மகன்.. சொத்துக்காக சொந்தத்தை மறந்த சோகம் !

சொத்துக்காக 80 வயது தாயை கொலை செய்ய முயன்ற 60 வயது மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

80 வயது தாயை கொலை செய்ய முயன்ற 60 வயது மகன்.. சொத்துக்காக சொந்தத்தை மறந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பெங்களூர் ஆர்.டி.நகர் 2-வது பிளாக்கில் கேத்தரின் டி குரூஸ் (வயது 80) என்ற மூதாட்டி தனது மகளுடன் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகன்கள் ஒரு மகள் இருக்கும் நிலையில், அவர்களில் இரண்டு மகன்கள் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டனர்.

மூதாட்டியின் சொத்துக்கள் அனைத்தும் அவரது பிள்ளைகளுக்கு பிரித்துகொடுத்துவிட்ட நிலையில், மூத்த மகனுக்கு வழங்கப்பட்ட வீட்டில் மூதாட்டி குடியிருந்து வருகிறார். மூதாட்டிக்கு மூச்சுத் திணறல் இருப்பதால் ஆக்ஸிஜன் உதவியில் இருந்து வந்துள்ளார்.

80 வயது தாயை கொலை செய்ய முயன்ற 60 வயது மகன்.. சொத்துக்காக சொந்தத்தை மறந்த சோகம் !

தனது வீட்டில் தன் தாயார் இருப்பதால் அந்த வீட்டை எதுவும் செய்யமுடியாத நிலையில், அவரை கொலை செய்ய அவரின் 60 வயது மூத்த மகன் திட்டமிட்டுள்ளார். அதன்படி தாயார் இருக்கும் வீட்டுக்கு சென்ற அவர் மூதாட்டியை பார்த்துக்கொள்ளும் பெண்ணை வெளியே அனுப்பிவிட்டு மூதாட்டிக்கு பொருத்தப்பட்டிருந்த ஆக்ஸிஜனை துண்டித்திருக்கிறார்.

இதில் மூதாட்டி அலறித்துடித்த நிலையில், அங்கு வந்த அந்த உதவி பெண் இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் வந்து மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் மூத்த மகனை கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories