இந்தியா

சமூக வலைதளம் மூலம் மருத்துவருடன் பழக்கம்.. ஆசிரியருக்கு நேர்ந்த கொடுமை.. உ.பி-யில் பயங்கரம் !

சமூக வலைதளம் மூலம் பழகி பெண் ஆசிரியர் ஒருவரை மருத்துவர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளம் மூலம் மருத்துவருடன் பழக்கம்.. ஆசிரியருக்கு நேர்ந்த கொடுமை.. உ.பி-யில் பயங்கரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி என்ற பகுதியில் பெண் ஒருவர் தனியார் கல்வி நிறுவனத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சமூக வலைதளங்களை அதிகமாக உபயோகிக்கும் இவருக்கு, அதன்மூலம் மருத்துவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த பெண்ணும் அவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதன்படி அந்த பெண்ணும் அவரை சந்தித்து இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

சமூக வலைதளம் மூலம் மருத்துவருடன் பழக்கம்.. ஆசிரியருக்கு நேர்ந்த கொடுமை.. உ.பி-யில் பயங்கரம் !

இந்த நிலையில் அவர் அந்த பெண்ணை தனது வீட்டிற்கு வரும்படி கேட்டுள்ளார். முதலில் அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண், பிறகு சம்மதித்துள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கே அந்த மருத்துவரின் நண்பர்கள் இரண்டு பேர் இருந்துள்ளனர்.

சமூக வலைதளம் மூலம் மருத்துவருடன் பழக்கம்.. ஆசிரியருக்கு நேர்ந்த கொடுமை.. உ.பி-யில் பயங்கரம் !

இதையடுத்து அந்த பெண்ணை மிரட்டி ஒரு அறையில் அடைத்து வைத்து மூவரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியும் உள்ளனர்.

பின்னர் பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், அவர்கள் மருத்துவர் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்டோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories