இந்தியா

இப்படி செய்தால் அதிக பணம் கிடைக்கும்.. சிறுவனை மூளைச்சலவை செய்த இளைஞர்கள்.. இறுதியில் நடந்த சோகம் !

16 வயது சிறுவனை நிர்வாணமாக நிற்கவைத்து பூஜை செய்து அதை சமூகவலைத்தளங்களில் வெளியிட்ட கும்பலை போலிஸார் கைது செய்தனர்.

இப்படி செய்தால் அதிக பணம் கிடைக்கும்.. சிறுவனை மூளைச்சலவை செய்த இளைஞர்கள்.. இறுதியில் நடந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடக மாநிலத்தில் கொப்பல் தாலுகாவில் ஹசகல் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் ஏழ்மை நிலையால் கஷ்டப்பட்டு வந்துள்ளது. மேலும்,அவனது குடும்பத்துக்கு கடன் பிரச்சனையும் இருந்துள்ளது.

இந்த சிறுவனும் இந்த நிலையை பயன்படுத்திக்கொள்ள ஒரு கும்பல் முடிவு செய்துள்ளது. அதன் படி அந்த சிறுவனை சந்தித்த அந்த கும்பல் நிர்வாண பூஜை செய்தால் சிறுவனின் குடும்பத்திலுள்ள வறுமையும், கடன் பிரச்சினைகளும் தீரும் என்று கூறியுள்ளனர்.

இப்படி செய்தால் அதிக பணம் கிடைக்கும்.. சிறுவனை மூளைச்சலவை செய்த இளைஞர்கள்.. இறுதியில் நடந்த சோகம் !

மேலும், கடவுளின் அருளால் வறுமை நீங்கி அதிக பணம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர். இதனை நம்பிய அந்த சிறுவன் அந்த கும்பலின் முயற்சிக்கு சம்மதித்துள்ளார். அதன்படி, அவர்கள் அந்த சிறுவனை ஒரு இடத்துக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

அங்கு அந்த சிறுவனை நிர்வாணமாக நிற்கவைத்து பூஜை செய்துள்ளனர். அதோடு நிற்காமல் இதனை வீடீயோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ குறித்த தகவல் அந்த சிறுவனின் குடும்பத்துக்கு தெரியவந்துள்ளது.

இப்படி செய்தால் அதிக பணம் கிடைக்கும்.. சிறுவனை மூளைச்சலவை செய்த இளைஞர்கள்.. இறுதியில் நடந்த சோகம் !

இதன்பின்னர் சிறுவனின் பெற்றோர் இதுகுறித்து போலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் இந்த செயலில் ஈடுபட்ட ணப்பா தளவரா, சரணப்பா, விருபான கவுடா மூன்று இளைஞர்களை கைதுசெய்தனர்.

banner

Related Stories

Related Stories