இந்தியா

அதிகாலையில் நடந்த கோர விபத்து.. 2 குழந்தை உட்பட 9 பேர் உடல் நசுங்கி பலி: 14 பேர் கவலைக்கிடம்!

கர்நாடகாவில் சாலை விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாலையில் நடந்த கோர விபத்து.. 2 குழந்தை உட்பட 9 பேர் உடல் நசுங்கி பலி: 14 பேர் கவலைக்கிடம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலம், பாழேன ஹள்ளி என்ற கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் லாரி ஒன்று ஜீப் மீது மோதியுள்ளது. இதில் ஜீப் வாகனத்தில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். மேலும் காயம் அடைந்த 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அதிகாலையில் நடந்த கோர விபத்து.. 2 குழந்தை உட்பட 9 பேர் உடல் நசுங்கி பலி: 14 பேர் கவலைக்கிடம்!

ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 24 பேர் பெங்களூருவிற்கு ஜீப்பில் பயணம் செய்துள்ளனர். இவர்களது வாகனம் பாழேன ஹள்ளி அருகே வந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. உயிரிழந்த 9 பேரில் 3 பெண்கள், 2 குழந்தைகள் அடங்குவர்.

மேலும், காயமடைந்த 14 பேரும் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நான்கு பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவருகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

அதிகாலையில் நடந்த கோர விபத்து.. 2 குழந்தை உட்பட 9 பேர் உடல் நசுங்கி பலி: 14 பேர் கவலைக்கிடம்!

அதேபோல் குரூசர் வாகனத்திலிருந்தவர்கள் அனைவரும் பெங்களூருவில் கூலி வேலை செய்து வருபவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

banner

Related Stories

Related Stories