இந்தியா

சாலையில் நடந்து சென்ற 2 பேரை இடித்துத் தூக்கி வீசிய கார்.. பதைபதைக்க வைக்கும் CCTV காட்சி!

கேரளாவில் சாலையில் நடந்து சென்ற 2 பேர் மீது கார் மோதும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் நடந்து சென்ற 2 பேரை இடித்துத் தூக்கி வீசிய கார்.. பதைபதைக்க வைக்கும் CCTV காட்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள கூரன்முக்கு பகுதியில் சாலையோரம் இரண்டு வாலிபர்கள் பேசிக் கொண்டு நடந்து சென்றனர். அப்போது அவர்களுக்குப் பின்னால் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இருவர் மீது மோதியுள்ளது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு கார் சாலையோரம் இருந்த புதரில் கவிழ்ந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே கார் ஓட்டுநர் மற்றும் இளைஞர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சாலையில் நடந்து சென்ற 2 பேரை இடித்துத் தூக்கி வீசிய கார்.. பதைபதைக்க வைக்கும் CCTV காட்சி!

இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் கார் மோதியதில் பலத்த காயம் அடைந்த இரண்டு இளைஞர்களையும் மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்கள் ஆபத்தா நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாலையில் நடந்து சென்ற 2 பேரை இடித்துத் தூக்கி வீசிய கார்.. பதைபதைக்க வைக்கும் CCTV காட்சி!

இந்த சம்பம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories