இந்தியா

4 ஆண்டுகள் பெண் தேடியும் திருமணம் நடக்காததால் விரக்தி.. வாலிபர் எடுத்த விபரீத முடிவு!

திருமணத்திற்குப் பெண் கிடைக்காததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

4 ஆண்டுகள் பெண் தேடியும் திருமணம் நடக்காததால் விரக்தி.. வாலிபர் எடுத்த விபரீத முடிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகா மாநிலம், கொரட்டகெரே தாலுக்காவிற்குட்பட்ட ஜோனிகரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமந்த். இவர் தூவினகெரே பகுதியில் சொந்தமாக செல்போன் விற்பனை கடை ஒன்றை நடத்தி வந்தார்.

இவருக்கு அவரது பெற்றோர்கள் கடந்த 4 வருடமாகப் திருமணத்திற்காக பெண் பார்த்து வந்துள்ளனர். இருப்பினும் அவருக்குப் பெண் கிடைக்கவில்லை. இதனால் ஹேமந்த் சில நாட்களாக 'எனக்குத் திருமணம் நடக்கவே நடக்காது' என நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கூறிவந்துள்ளார்.

4 ஆண்டுகள் பெண் தேடியும் திருமணம் நடக்காததால் விரக்தி.. வாலிபர் எடுத்த விபரீத முடிவு!

இந்நிலையில் கடும் மன அழுத்தத்தில் இருந்து ஹேமந்த் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்துத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

4 ஆண்டுகள் பெண் தேடியும் திருமணம் நடக்காததால் விரக்தி.. வாலிபர் எடுத்த விபரீத முடிவு!

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் 4 ஆண்டுகள் பெண் தேடியும் திருமணம் நடைபெறாததால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
banner

Related Stories

Related Stories