இந்தியா

சாலையில் சென்றபோது திடீரென வெடித்த பேட்டரி.. பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: உடல் கருகி வியாபாரி பலி!

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் பேட்டரி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் நெல் வியாபாரி உடல் கருகி உயிரிழந்தார்.

சாலையில் சென்றபோது திடீரென வெடித்த பேட்டரி.. பற்றி எரிந்த இருசக்கர வாகனம்:  உடல் கருகி வியாபாரி பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரியை அடுத்த கரிக்கலாம் பாக்கம் மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால். நெல் வியாபாரம் செய்து வரும் இவர் கடந்த 31ம் தேதி இரவு தவளகுப்பத்தை அடுத்த அபிஷேகப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவரது வாகனம் தீப்பற்றி எரிந்தது. இதனைச் சற்றும் எதிர்பாராத வேணுகோபால் மீதும் தீ பிடித்துள்ளது. இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

சாலையில் சென்றபோது திடீரென வெடித்த பேட்டரி.. பற்றி எரிந்த இருசக்கர வாகனம்:  உடல் கருகி வியாபாரி பலி!

இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

சாலையில் சென்றபோது திடீரென வெடித்த பேட்டரி.. பற்றி எரிந்த இருசக்கர வாகனம்:  உடல் கருகி வியாபாரி பலி!

இதில், வேணுகோபால் நெல் வியாபாரம் செய்வதால் அடிக்கடி பணத்தை இருசச்கர வாகனத்தில் எடுத்துச் செல்வது வழக்கம். இரவு நேரத்தில் வாகனத்தில் வெளிச்சம் இருப்பதற்காக எல்.ஈ.டி விளக்குகள் பொருத்தியுள்ளார். இதற்காகக் கூடுதலாக வாகனத்தில் பேட்டரிகளை பொருத்தியுள்ளார். இந்நிலையில்தான் சம்பவத்தன்று வாகனத்திலிருந்த பேட்டரி வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories