இந்தியா

மூடத்தனத்தை உச்சகட்டம்.. பேய் பிடித்ததாக மகளை அடித்து கொலைசெய்த பெற்றோர் ! நடந்தது என்ன ?

பேய் பிடித்ததாக மகளை அடித்து கொன்ற பெற்றோரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

மூடத்தனத்தை உச்சகட்டம்.. பேய் பிடித்ததாக மகளை அடித்து கொலைசெய்த பெற்றோர் ! நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மராட்டிய மாநிலத்தில் உள்ள சுபாஷ் நகரை சேர்ந்தவர்கள் சித்தார்த் சிம்னி-ரஞ்சனா தம்பதியினர். இவர்களுக்கு 16 மற்றும் 5 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர்.

சித்தார்த் சிம்னி-ரஞ்சனா தம்பதியினர் youtube சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இவர்களின் இரண்டாவது மகள் சிறிது விசித்திரமான நடந்துள்ளார். இதனால் அவருக்கு பேய் பிடித்துள்ளதாக சித்தார்த் நினைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மந்திரித்தால் சரியாகிவிடும் என்று அங்கு இருந்தவர்கள் கூறியுள்ளனர். எனவே தனது மனைவி, மற்றும் பிரியா ஆகியோருடன் சேர்ந்து மகளுக்கு பேய் ஓட்டுவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை சென்றுள்ளனர்.

மூடத்தனத்தை உச்சகட்டம்.. பேய் பிடித்ததாக மகளை அடித்து கொலைசெய்த பெற்றோர் ! நடந்தது என்ன ?

அங்கு அந்த சிறுமிக்கு மாந்திரீகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டுள்ளது. அப்போது சிறுமியிடம் அவரது பெற்றோர் சில கேள்விகள் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு அந்த சிறுமி பதில் சொல்லாமல் அழுதுகொண்டு இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை உடலிலும் கன்னத்திலும் கடுமையாக அடித்துள்ளனர். மேலும் அதனை வீடியோவும் எடுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த நிலையில் சிறுமி மயங்கியுள்ளார்.

மூடத்தனத்தை உச்சகட்டம்.. பேய் பிடித்ததாக மகளை அடித்து கொலைசெய்த பெற்றோர் ! நடந்தது என்ன ?

பின்னர் காலையில் சிறுமியை பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பாக போலிஸில் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் மாந்திரீகத்தில் ஈடுபட்ட பெற்றோர் மற்றும் உறவினர் பிரியா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories