இந்தியா

பள்ளிக்குச் சென்ற சிறுவன்.. விரட்டி விரட்டி துரத்திய தெரு நாய்கள்: காரணம் என்ன?

புதுச்சேரியில் பள்ளிக்குச் சென்ற சிறுவனைத் தெரு நாய்கள் துரத்தும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்குச் சென்ற சிறுவன்.. விரட்டி விரட்டி துரத்திய தெரு நாய்கள்: காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியில் தெருநாய்கள் அதிக அளவு சுற்றித் திரிந்து வருகின்றன. இதனால் அப்பதி மக்கள் மற்றும் சுற்றுலாத்துறையினருக்குப் பெரிய அச்சமாக உள்ளது.

இதனால் தெருநாய்களைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்குச் சென்ற சிறுவனைத் தெருநாய்கள் துரத்திய சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்குச் சென்ற சிறுவன்.. விரட்டி விரட்டி துரத்திய தெரு நாய்கள்: காரணம் என்ன?

திருபட்டினம் பெரிய மரக்கையார் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு வந்து கொண்டிருந்த சிறுவனை மூன்று நாய்கள் கடிப்பதுபோல் துரத்தியுள்ளது.

இதனால் பதற்றமடைந்த சிறுவன் அங்கிருந்து ஓடியுள்ளார். இருப்பினும் தெரு நாய்கள் சிறுவனை விடாமல் துரத்தியுள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் நாயைக் கல்லால் அடித்துத் துரத்தியுள்ளனர்.

பள்ளிக்குச் சென்ற சிறுவன்.. விரட்டி விரட்டி துரத்திய தெரு நாய்கள்: காரணம் என்ன?

இது சம்மதமான வீடியோவும் வெளியாகப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து உடனே தெருநாயைப் பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

banner

Related Stories

Related Stories