இந்தியா

“தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக செலவு செய்த தொகை எவ்வளவு?” : ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் கேள்வி !

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு செலவு செய்த தொகை எவ்வளவு? மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக செலவு செய்த தொகை எவ்வளவு?” :  ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

செம்மொழியான தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்ட நிதி எவ்வளவு என ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சகத்திடம் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.

அதன் விவரம் பின்வருமாறு :

* தமிழ் இலக்கியம், காட்சி மற்றும் நிகழ்த்துக் கலைகளின் முன்னேற்றத்துக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் அதற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என கேள்வி எழுப்பினார்.

* செம்மொழியான தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக 2014ம் ஆண்டு முதல் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என கேள்வி எழுப்பினார்.

* கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்ட தொகைகள் எவ்வளவு, மேலும் வழங்கப்பட்ட மானியங்கள் எவ்வளவு என்பதை ஆண்டு வாரியாக பட்டியலிட்டு தெரியப்படுத்தவும் என கேள்வி எழுப்பினார்.

“தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக செலவு செய்த தொகை எவ்வளவு?” :  ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் கேள்வி !

* கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ் மொழியை தவிர்த்து பிற மொழிகளின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்ட தொகைகள் எவ்வளவு, அத்துடன் வழங்கப்பட்ட மானியங்கள் எவ்வளவு என்பதை ஆண்டு மற்றும் மொழி வாரியாக பட்டியலிட்டு தெரியப்படுத்தவும் என கேள்வி எழுப்பினார்.

* பண்டைய தமிழ் கலாச்சார வரலாற்றை காட்சிப்படுத்தவும், அதுகுறித்து ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்ளவும், அத்துடன் தமிழ் மொழியின் ஆய்வு மற்றும் ஆராய்ச்சியின் வளர்ச்சிக்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன எனவும் கேள்வி எழுப்பினார்.

இக்கேள்விகளுக்கு ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் திரு.ஜி.கிஷன் ரெட்டி அவர்கள் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்கள் பின்வருமாறு :

தமிழ் இலக்கியம், காட்சி மற்றும் நிகழ்த்துக் கலைகளின் வளர்ச்சிக்காக ஒன்றிய கலாச்சாரத்துறை, அமைச்சகம் அதன் பல்வேறு அமைப்புகள் மூலம் விழாக்கள், கருத்தரங்குகள், ஆராய்ச்சிப் பணிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது.

“தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக செலவு செய்த தொகை எவ்வளவு?” :  ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் கேள்வி !

ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின்கீழ் உள்ள சாகித்ய அகாதமி என்னும் தன்னாட்சி அமைப்பின் மூலம் தமிழ் மொழியின் இலக்கியம், மொழிபெயர்ப்பு, இலக்கியத்தின் வரலாறு உள்ளிட்ட பதிப்புகளை ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

தமிழ் மொழி உட்பட 24 இந்திய மொழிகளுக்கும் பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச அளவில் கருத்தரங்குகள், எழுத்தாளர்களை சந்தித்தல், மொழிபெயர்ப்பு பயிற்சி வகுப்புகள் போன்ற நிகழ்ச்சிகளை ஒன்றிய அரசு ஒருங்கிணைத்து வருகிறது.

இந்திய இலக்கியக் கலைக்களஞ்சியம் கிட்டத்தட்ட தமிழில் குறிப்பிடத்தக்க அனைத்து எழுத்தாளர்களையும் உள்ளடக்கியுள்ளது. லலித் கலா அகாதமி (LKA), ஒன்றிய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள மற்றொரு தன்னாட்சி அமைப்பாகும். அது காட்சி கலைத் துறையில் ஆய்வு மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கிறது. லலித் கலா அகாதமி ஆண்டுதோறும் வளரும் இளம் கலைஞர்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி அவர்களின் திறமையை வெளிக்கொணர வழி வகுப்பத்துடன் உதவித்தொகை வழங்கியும் ஊக்கப்படுத்துகிறது.

“தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக செலவு செய்த தொகை எவ்வளவு?” :  ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் கேள்வி !

கடந்த ஐந்து ஆண்டுகளில் லலித் கலா அகாதமி மற்றும் ஆர்.சி அமைப்பு இணைந்து காட்சித் துறையில் கலாச்சாரத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 33 நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

சங்கீத நாடக அகாதமி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ்நாட்டின் சார்பாக கரகாட்டம், காவடி ஆட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், தேவராட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்த்துக் கலைகளை காட்சிப்படுத்தியுள்ளது.

தென் மண்டல கலாச்சாரம் மையம் (SZCC), புதுச்சேரி கலை மற்றும் கலாச்சாரத் துறையுடன் இணைந்து, புகழ் பெற்ற தமிழ்க் கவிஞர்கள் பிறந்த நாளையொட்டி பாரதியார் விழா, பாவேந்தர் பாரதிதாசன் விழா, தமிழ் ஒலி விழா, வாணிதாசன் விழா, புதுவை சிவன் விழா என்றும் கவியரங்கம், பாட்டரங்கம், இசையரங்கம், பட்டிமன்றம் என்று பல்வேறு தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது.

இலக்கியம், காட்சி, நிகழ்த்துக் கலைகளின் வளர்ச்சிக்காக நடப்பாண்டிற்கு ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ள மொத்த நிதி ரூபாய் 365.35 கோடி.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT) எனும் தனி நிறுவனத்தை 2009 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு நிறுவியது. அதன் மூலம் கருத்தரங்குகள், பயிலரங்குகள், குறுகிய காலத் திட்டங்கள் என்றும், திருக்குறள் மற்றும் பண்டைய தமிழ் நூல்களை, அட்டவணை மொழிகள் மற்றும் பிற மொழிகளுக்கு மொழிபெயர்த்தல் போன்ற செயல்பாடுகள் மூலம் செம்மொழித் தமிழுக்கான, வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு (CICT) வழங்கப்பட்ட மானியத்தின் விவரங்கள் பின்வருமாறு :

“தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக செலவு செய்த தொகை எவ்வளவு?” :  ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் கேள்வி !

தமிழ் மொழி உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் வளர்ப்பதுதான் இந்திய அரசின் கொள்கையாகும் அதற்காக பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தேசிய கல்விக் கொள்கை 2020 மூலம் குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அவர்தம் தாய்மொழியிலயே கல்வி பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மத்திய நிறுவனம் (CIIL) அட்டவணையில் சேர்க்கப்பட்ட மொழிகள், பட்டியலிடாத மொழிகள், செம்மொழிகள் என அனைத்து மொழிகளையும் மேம்படுத்துவதற்காக செயல்பட்டு வருகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள மானியங்களின் விவரமானது மொழிவாரியாக இல்லாமல், சிந்தி உருது, சமஸ்கிருதம், இந்தி, அட்டவணை மொழிகள், பட்டியலிடாத மொழிகள் என அனைத்து மொழிகளுக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் மூலம் வழங்கிய மானியத்தின் விவரங்கள் ஆகும்.

“தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக செலவு செய்த தொகை எவ்வளவு?” :  ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் கேள்வி !
banner

Related Stories

Related Stories