இந்தியா

லாரி மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார் : பிறந்தநாள் பார்ட்டி முடித்துவிட்டு திரும்பிய 5 பேர் பலி!

கர்நாடக மாநிலம் கொப்பால் அருகே பிறந்தநாள் கொண்டாட்டம் முடித்துவிட்டு வீடு திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லாரி மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார் : பிறந்தநாள் பார்ட்டி முடித்துவிட்டு திரும்பிய 5 பேர் பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கர்நாடக மாநிலம் கொப்பால் மாவட்டம் எலபுர்கா தாலுகா பின்னாலா கிராமத்தைச் சேர்ந்தவர் தேவப்பா. இவரது குடும்பத்தை சேர்ந்த 9 பேர் அங்கு பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு பின்னர் நேற்று இரவு சொந்த கிராமத்திற்கு சொகுசு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது பானுபுரா கிராமத்தில் எதிரில் வந்த லாரி மோதியதில் ஸ்கார்ப்பியோ கார் சுக்குநூறாக நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயங்களுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லாரி மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார் : பிறந்தநாள் பார்ட்டி முடித்துவிட்டு திரும்பிய 5 பேர் பலி!

இதில் சம்பவ இடத்திலேயே தேவப்பா, அவரது மருமகள் கிரிஜாம்மா, அண்ணன் மகள்களான சாந்தம்மா, பாரர்வதம்மா மற்றும் உறவினரான கஸ்தூரம்மா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஓட்டுனர் ஹர்ஷவர்தன குழந்தைகள் பஸ்ராஜ், புட்டராஜ் , பூமிகா உட்பட நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிறந்தநாள் விழா முடித்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பும்போது குடும்பத்தினர் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளதாக போலிஸார் தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories