இந்தியா

'ஜீன்ஸ் பேண்ட் அணியக் கூடாது'.. ஆர்டர் போட்ட கணவனை குத்தி கொலை செய்த மனைவி!

ஜார்க்கண்ட்டில் ஜீன்ஸ் பேண்ட் அணியத் தடைவிதித்தால் கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'ஜீன்ஸ் பேண்ட் அணியக் கூடாது'..   ஆர்டர் போட்ட கணவனை குத்தி கொலை செய்த மனைவி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜார்க்கண்ட் மாநிலம், ஜோர்பிதா கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பா. இளம் பெண்ணான இவருக்கு அண்மையில்தான் திருமணம் நடைபெற்ற பிறகுதான் புஷ்பா இக்கிராமத்திற்கு வந்துள்ளார். இவர் திருமணத்திற்கு முன்புவரை ஜீன்ஸ் உடைகளை விரும்பி அணிந்துவந்துள்ளார். இதையடுத்து திருமணத்திற்கு பிறகு புஷ்பாவின் கணவன் ஜீன்ஸ் பேண்ட் போன்ற உடைகளை அணிய வேண்டாம் என தொடர்ந்து கூறி வந்துள்ளார்.

'ஜீன்ஸ் பேண்ட் அணியக் கூடாது'..   ஆர்டர் போட்ட கணவனை குத்தி கொலை செய்த மனைவி!

இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கிராமத்தில் நடந்த விழாவிற்கு புஷ்பா ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு சென்றுள்ளார். இதை அறிந்த அவரது கணவர் வீட்டிற்கு வந்த மனைவியிடம் 'ஏன் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து சென்றாய்' என வாக்குவாதம் செய்துள்ளார்.

'ஜீன்ஸ் பேண்ட் அணியக் கூடாது'..   ஆர்டர் போட்ட கணவனை குத்தி கொலை செய்த மனைவி!

இதனால் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த புஷ்பா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கணவனை குத்தியுள்ளார். இதில் ரத்தவெள்ளத்திலிருந்த அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் புஷ்பாவின் கணவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories