இந்தியா

பழங்குடியின சிறுமி கல்லால் அடித்து கொடூர கொலை.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!

முந்திரி பண்ணையை பராமரிப்பதற்காக சென்ற பழங்குடியின சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கல்லால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழங்குடியின சிறுமி கல்லால் அடித்து கொடூர கொலை.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் வசித்து வரும் 16 வயதுடைய பழங்குடியின சிறுமி, எப்போதும் தனது வீட்டின் அருகில் இருக்கும் மாம்பழம் மற்றும் முந்திரி பண்ணையை பராமரித்து வருவது வழக்கம். அவ்வாறாக கடந்த செவ்வாய்க்கிழமை பண்ணைக்கு சென்ற சிறுமி இரவாகியும் வீடுதிரும்பவில்லை.

இதையடுத்து மறுநாள் மாலை அந்த முந்திரி தோப்பு வழியே சென்ற சில வழிப்போக்கர்கள், அங்கு ஒரு குழியில் சிதைக்கப்பட்ட முகத்துடன் சிறுமியின் சடலம் இருப்பதை பார்த்தனர். பின்னர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பழங்குடியின சிறுமி கல்லால் அடித்து கொடூர கொலை.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!

பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் ஒருவர் கூறுகையில், அந்த சிறுமி, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு, முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 19 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பழங்குடியின சிறுமி கல்லால் அடித்து கொடூர கொலை.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!

மேலும் அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், அந்த சிறுமி தனியே செல்வதை பார்த்தவர்கள், அவரை பின் தொடர்ந்து வழியிலேயே பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் அந்த சிறுமியின் முகத்தை கல்லால் அடித்து சிதைத்து கொலை செய்து, சடலத்தை குழியில் வீசி அதை கற்கள் மற்றும் புல்லால் மூடியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அவர்கள் இருவரும் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். பழங்குடியின சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories