இந்தியா

தாயை விட கேமராமேனுக்கு முக்கியத்துவம் கொடுத்தாரா மோடி? : இணையத்தில் வைரலாகும் சர்ச்சை வீடியோ!

குஜராத்தில் தனது தாயை சந்திக்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, கேமராமேன் வரும்வரை காரிலேயே காத்திருந்தது இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

தாயை விட கேமராமேனுக்கு முக்கியத்துவம் கொடுத்தாரா மோடி? : இணையத்தில் வைரலாகும் சர்ச்சை வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நநேந்திர மோடி தான் பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் அடிக்கடி குஜராத் மாநிலம் காந்திநகரில் வசித்து வரும் தன் தாயார் ஹீராபென்னைை சந்தித்து வருகிறார். அதிலும் பிறந்தநாள், தேர்தல் நேரம் போன்ற அதி முக்கிய தருணங்களில் மோடி தன் தாயாரை பார்க்கச் செல்வதும் பின்னர் அது சமூக வலைத்தளங்களில் டிரண்ட் ஆவதும் வழக்கம்.

அந்த வகையில் தனது தாயாரின் 100-வது பிறந்த நாளில்போது குஜராத் சென்ற மோடி தனது தாயாரை சந்தித்து நலம் விசாரித்து அவருக்கு இனிப்பு ஊட்டினார்.

தாயை விட கேமராமேனுக்கு முக்கியத்துவம் கொடுத்தாரா மோடி? : இணையத்தில் வைரலாகும் சர்ச்சை வீடியோ!

பின்னர் தாயுடன் சேர்ந்து சிறப்பு வழிபாடு செய்த அவர், தாயின் காலை கழுவி அந்த நீரை கண்ணில் தொட்டு பாத பூஜை செய்தார். இந்த நிகழ்வு வழக்கம் போல இணையத்தில் ட்ரெண்ட் ஆனது.

இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. வெளியிட்ட வீடியோ ஒன்று மோடியின் விடியோவை விட இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி காந்திநகரில் உள்ள தனது தாயின் இல்லத்துக்கு சென்ற பிரதமர் மோடி, கார் நின்ற பிறகும் உள்ளேயே அமர்ந்திருக்கிறார். சிறிது நேரம் கழித்து கேமராமேன் அங்கு வந்தவுடனே மோடி காரிலிருந்து இறங்குகிறார்.

இதை வைத்து மோடி தாயை விட கேமராவுக்குதான் அதிக முக்கியத்தும் கொடுக்கிறார். மோடியின் தாய் பாசம் கூட இணையத்தில் ட்ரெண்ட் ஆகவேண்டும் என்பதற்காகதான் என இணையவாசிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories