இந்தியா

மூச்சுக் குழாயில் பூஞ்சை.. எப்படி இருக்கிறார் சோனியா காந்தி? - மருத்துவர்கள் சொல்வது என்ன ?

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சோனியா காந்திக்கு, மூச்சுக் குழாயில் பூஞ்சை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூச்சுக் குழாயில் பூஞ்சை.. எப்படி இருக்கிறார் சோனியா காந்தி? - மருத்துவர்கள் சொல்வது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். முதலில் வீட்டில் தனிமையில் இருந்த அவர், உடல்நிலை மோசமானதால் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூச்சுக் குழாயில் பூஞ்சை.. எப்படி இருக்கிறார் சோனியா காந்தி? - மருத்துவர்கள் சொல்வது என்ன ?

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சோனியா காந்தி உடல்நிலை குறித்து காங்கிரஸ் கட்சி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்ததாவது,

”கொரோனா பாதிப்பால் ஜூன் 12-ம் தேதி சோனியாவுக்கு மூக்கில் இருந்து அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சோனியா காந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சோனியா காந்தியின் சுவாச மண்டலத்தில் பூஞ்சை தொற்று பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை தரப்படுகிறது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சோனியா காந்திக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று குறிப்பிட்டிருந்தது.

banner

Related Stories

Related Stories