இந்தியா

காரை நிறுத்தி கழுகை காப்பாற்ற முயன்ற 2 பேர்.. இடித்துத் தள்ளிய மற்றொரு கார்: அதிர்ச்சி வீடியோ!

மும்பையில், கழுகைகாப்பாற்ற முயன்றபோது கார் மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரை நிறுத்தி கழுகை காப்பாற்ற முயன்ற 2 பேர்.. இடித்துத் தள்ளிய மற்றொரு கார்: அதிர்ச்சி வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மும்பையைச் சேர்ந்தவர் அமர் மணீஷ் ஜரிவாலா. இவர் கடந்த மாதம் 30ம் தேதி காரில் பாந்தரா - வொர்லி கடல் இணைப்பு மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது காருக்கு அடியில் கழுகு ஒன்று சிக்கியுள்ளது. இதைக் கவனித்த கார் ஓட்டுநர் ஷியாம் சுந்தர் காரை நிறுத்தி மணீஷ் ஜரிவாலாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் காரை விட்டு கீழே இறங்கி கழுகை மீட்டக முயன்றனர்.

அப்போது அந்த வழியில் வேகமாக வந்த மற்றொரு கார் இருவர் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் பார்த்தபோது மணீஷ் ஜரிவாலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தெரிந்தது.

இதையடுத்து உயிருக்குப் போராடிய ஓட்டுநர் ஷியாம் சுந்தரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கழுகை காப்பாற்றும் போது இவர்கள் மீது கார் மோதும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories