இந்தியா

வருங்கால கணவனை மோசடி வழக்கில் சிறை வைத்த பெண் போலிஸ்.. ஒரு மாதம் கழித்து திடீர் கைது!

அசாமில், மோசடி வழக்கில் வருங்கால கணவரைச் சிறையில் அடைத்த பெண் காவல் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருங்கால கணவனை மோசடி வழக்கில் சிறை வைத்த பெண் போலிஸ்.. ஒரு மாதம் கழித்து திடீர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜூன்கோனி ரபா. இவர் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ராணா போஹாட் என்பவருடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. இதையடுத்து ஜுன்மோனிக்கு ஒரு தொலைபேசி வந்துள்ளது. அதில் 'நீங்கள் திருமணம் செய்யப் போகும் ராணா போஹாட் ஒரு மோசடியாளர்' என கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இதனால் ராணா மீது ஜுன்மோனிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது வேலைபற்றி அவரிடம் கேட்டபோது ராணா முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதையடுத்து அவருக்கு தெரியாமலே ராணா குறித்து ரகசியமாக விசாரணை நடத்தியுள்ளார். அப்போது ஓ.என்.ஜி.சி அரசு நிறுவனத்தின் உயர் அதிகாரி எனக் கூறி கொண்டு, பலரிடம் வேலை வாங்கி தருவதாகக் கோடிக் கணக்கில் பண மோசடி செய்தது தெரியவந்தது.

பின்னர், தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டவர் என்றும் பாராமல் ராணா போஹாடை அதிரடியாகக் கைது செய்துள்ளார். வருங்கால கணவர் என்றும் பாராமல் கைது செய்த உதவி காவல் ஆய்வாளர் ஜுன்மோனி ரபாவுக்கு காவல்துறையின் உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து ஒருமாதம் கழித்து மோசடி வழக்கில் வருங்கால கணவரைச் சிறையில் அடைத்த போலிஸ் அதிகாரி ஜூன்கோனி ரபா கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருங்கால கணவனை மோசடி வழக்கில் சிறை வைத்த பெண் போலிஸ்.. ஒரு மாதம் கழித்து திடீர் கைது!

போலிஸ் அதிகாரி ஜூன்கோனி ரபா தனது வருங்கால கணவர் ராணா போஹாடுடன் சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக மஜூலி காவல்நிலையத்திற்குப் புகார்கள் வந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அதில், ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் ஒப்பந்த பணிகள் பெற்றுக் கொடுப்பதாகக் கூறி ஒப்பந்ததாரர்கள் ராம் அபத்ரா சர்மா, அஜித் போரா ஆகியோரிடம் பணம் கேட்டுள்ளார். பிறகு இருவரும் கேட்ட பணத்தை ராணா போஹாடிடம் கொடுத்தது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் அடிப்படையில்தான் போலிஸார் ஜூன்கோனி ரபாவை கைது செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories