இந்தியா

காங்கிரஸில் சேர மறுத்த பிரசாந்த் கிஷோர்.. “என்னை விட காங். கட்சிக்கு தலைமையே தேவை” என ட்வீட்!

காங்கிரஸ் கட்சியில் சேர தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மறுப்பு தெரிவித்துள்ளதாக காங்., செய்தி தொடர்பு பொதுச்செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தகவல்!

காங்கிரஸில் சேர மறுத்த பிரசாந்த் கிஷோர்.. “என்னை விட காங். கட்சிக்கு தலைமையே தேவை” என ட்வீட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“காங்கிரஸ் கட்சிக்கு என்னை விட தலைமையே தேவை” என தேர்தல் வியூக வல்லுநர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோர், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல் தொடங்கி பல கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலை காங்கிரஸ் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அக்கட்சியின் மேலிடத் தலைவர்கள், I-PAC நிறுவனரும் தேர்தல் வியூக வல்லுநருமான பிரஷாந்த் கிஷோருடன் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினர். பிரஷாந்த் கிஷோர் விரைவில் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்று தகவல்கள் பரவின.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேர மறுத்துவிட்டதாக காங்., செய்தி தொடர்பு பொதுச் செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா அறிவித்துள்ளார். காங்கிரஸுக்கு பிரசாந்த் கிஷோர் வழங்கிய ஆலோசனைகளுக்கு கட்சி சார்பில் நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரஷாந்த் கிஷோர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அதிகாரம் பெற்ற செயல் குழுவின் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியில் சேரவும் மற்றும் தேர்தல்களுக்கு பொறுப்பேற்கவும் வழங்கப்பட்ட வாய்ப்பை நான் நிராகரித்தேன்.

எனது தாழ்மையான கருத்துப்படி, என்னை விட கட்சிக்கு தலைமையே தேவை! ஆழமாக வேரூன்றியிருக்கும் கட்டமைப்பு பிரச்சனைகளை மாற்றும் சீர்திருத்தங்கள் மூலம் சரி செய்ய வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories