இந்தியா

பெண் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்.. மனைவியை ரூ.1.5 லட்சத்திற்கு விற்ற கணவன்: போலிஸ் ஷாக்!

சண்டை போட்டதால் மனைவியை ரூ.1.5 லட்சத்திற்கு கணவன் விற்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

பெண் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்.. மனைவியை ரூ.1.5 லட்சத்திற்கு  விற்ற கணவன்: போலிஸ் ஷாக்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலம், ராம்பூர் கிராமத்தில் பெண் ஒருவர் கடத்தப்பட்டு ராஜஸ்தான் கொண்டு செல்வதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.

அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் பிரிஜாபதி என்றவர்தான் அப்பெண்ணை கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரிடம் விசாரணை செய்தபோது அதிர வைக்கும் உண்மைகள் வெளிவந்துள்ளது.

கடத்த முயன்ற அந்தப் பெண் ஒடிசா மாநிலம், ஜார்சுகுடா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது. அடிக்கடி இவர் கணவருடன் சண்டைபோட்டு வந்துள்ளார்.

இதனால் அவரது கணவர் ரூ.1.5 லட்சத்திற்கு மனைவியை மனோஜ் பிரஜாபதிக்கு விற்றுள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணை கட்டாய திருமணம் செய்ய ராஜஸ்தான் கடத்த முயற்சி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலிஸார் மனோஜ் பிரஜாபதியையும், அவருக்கு உடந்தையாக இருந்த மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் கணவரையும் கைது செய்ய போலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories