இந்தியா

வாலிபர் காணாமல் போன வழக்கில் ‘திடீர்’ திருப்பம்.. உயிரோடு எரித்து உடலை சாக்கடையில் வீசிய தந்தை, மகன்!

குஜராத்தில் வாலிபரை கொலை செய்து உடலை எரித்த தந்தை மற்றும் மகனை போலிஸார் கைது செய்துள்ளனர்.

வாலிபர் காணாமல் போன வழக்கில் ‘திடீர்’ திருப்பம்.. உயிரோடு எரித்து உடலை சாக்கடையில் வீசிய தந்தை, மகன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குஜராத் மாநிலம், பாவ்டி கிராமத்திற்கு வெளியே எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அங்கு சென்று முற்றிலும் எரிந்த நிலையில் கிடந்த உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து உயிரிழந்தவர் யார் என விசாரணை செய்தபோது, அவர் காணமால் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட ஜெய்ராஜ் போரிச்சா என்பது தெரியவந்தது.

பின்னர் போலிஸார் பாவ்டி கிராமத்தில் உள்ள மக்களிடம் விசாரணை செய்தபோது திலு மற்றும் அவரது தந்தை தேவ்கா ஆகியோர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளனர். இதனால் அவர்கள் மீது போலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை செய்தபோது ஜெய்ராஜை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.

திலுவின் உறவினர் ஒருவரின் மனைவியுடன் ஜெய்ராஜுக்கு தவறான பழக்கம் இருந்துள்ளது. இந்த உறவை கைவிடும்படி திலு அவரிடம் கூறியுள்ளார். ஆனால் ஜெய்ராஜ் அவரது பேச்சைக் கேட்காமல் அந்தப் பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.இதனால் அவரை கொலை செய்ய திலு திட்டமிட்டுள்ளார்.

இதன்படி சம்பவத்தன்று திலு மற்றும் அவரது தந்தை தேவ்கா ஆகிய இரண்டு பேரும் ஜெய்ராஜை பண்ணை வீட்டிற்கு வரவழைத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அந்த பெண்ணுடனான பழக்கத்தை கைவிட முடியாது என கூறியதால் ஆத்திரமடைந்த இருவரும் ஜெய்ராஜை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை எரித்து கிராமத்திற்கு வெளியே உள்ள சாக்கடையில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலிஸார் திலு, அவரது தந்தை தேவ்கா ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் ஒருவரை தந்தையும், மகனும் எரித்து கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories