இந்தியா

கணவனை மிரட்ட விளையாட்டாக விஷம் குடித்த கர்ப்பிணிக்கு ஏற்பட்ட கதி... சோகத்தில் குடும்பம் : நடந்தது என்ன?

விளையாட்டாக விஷம் குடித்ததில் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவனை மிரட்ட விளையாட்டாக விஷம் குடித்த கர்ப்பிணிக்கு ஏற்பட்ட கதி... சோகத்தில் குடும்பம் : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம், கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் ஷண்முகம். இவரது மகள் ஸ்ரீலஷ்மி. இவருக்கு அவினாஷ் என்ற இளைஞருடன் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

பின்னர், திருமணம் முடிந்ததை அடுத்து அவினாஷ் வேலைக்காக துபாய் சென்றார். மூன்று மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி கருவுற்றுள்ளார்.

இதையடுத்து கணவனை மீண்டும் வேலைக்காக துபாய் செல்லும்படி ஸ்ரீலஷ்மி கூறியுள்ளார். இதற்கு அவர் நான் உன்னைப் பார்த்துக் கொள்கிறேன் எனth தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தம்பதிகள் தங்களின் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளனர். அப்போது மனைவி, நீ வேலைக்குச் செல்லவில்லை என்றால் விஷத்தைக் குடித்துவிடுவேன் எனக் கூறி மிரட்டியுள்ளார்.

கணவனை மிரட்ட விளையாட்டாக விஷம் குடித்த கர்ப்பிணிக்கு ஏற்பட்ட கதி... சோகத்தில் குடும்பம் : நடந்தது என்ன?

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவினாஷ், வேலைக்கு செல்வதாக கூறியுள்ளார். ஆனால் தவறுதலாக வாய்க்குள் வைத்திருந்த விஷத்தை ஸ்ரீலஷ்மி விழுங்கியுள்ளார். இதனால் அவர் மயங்கி விழுந்ததைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories