இந்தியா

தனுஷ் பட பாணியில் ஏமாற்றி காசு பறிக்க முயற்சி; கூண்டோடு சிக்கிய மோசடி கும்பல்; கர்நாடக போலிஸ் அதிரடி!

தொண்டையில் ஆப்ரேஷன் காசு வேணும் என புதுப்பேட்டை படத்தில் வரும் காட்சி போல் கர்நாடகாவில் தாயாருக்கு உடல்நலம் சரியில்லை எனக் கூறி மோசடியில் ஈடுபட இருந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

தனுஷ் பட பாணியில் ஏமாற்றி காசு பறிக்க முயற்சி; கூண்டோடு சிக்கிய மோசடி கும்பல்; கர்நாடக போலிஸ் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பித்தளை காசுகளுக்கு தங்கமுலாம் பூசி விற்பனை செய்ய முயன்ற நபர் உட்பட நால்வரை கர்நாடகாவின் விஜயநகர் மாவட்ட போலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. அவருக்கு வைத்தியம் பார்க்க பணம் இல்லை. என்னிடம் இருக்கும் தங்கக் காசுகளை வைத்துக் கொண்டு 50 ஆயிரம் பணமாக கொடுக்கும்படி ஹரப்பனஹள்ளி தாலுகாவைச் சேர்ந்த நிரஞ்சன் (23) என்ற இளைஞர் கோட்டை பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவரிடம் கேட்டிருக்கிறார்.

தனுஷ் பட பாணியில் ஏமாற்றி காசு பறிக்க முயற்சி; கூண்டோடு சிக்கிய மோசடி கும்பல்; கர்நாடக போலிஸ் அதிரடி!

மோசடி வேலையாக இருக்குமோ என சுதாரித்துக் கொண்ட ராஜன், தன்னிடம் இருந்த 1000 ரூபாயை கொடுத்துவிட்டு மீதி பணத்தை ஏடிஎம் போய் எடுத்து வருவதாகக் கூறி அப்பகுதி போலிஸாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து உடனடியாக விரைந்த குடுகோடி போலிஸார் நிரஞ்சனை பிடித்து விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள். அப்போது ராஜன் சந்தேகமடைந்ததை போன்று ஏமாற்றி பணம் பறிக்கவே நிரஞ்சன் எத்தனித்திருக்கிறார் என தெரிய வந்தது.

மேலும், நிரஞ்சனிடம் இருந்த பித்தளை காசுகள், அரை கிலோ நாணயங்களை பறிமுதல் செய்த போலிஸார் இந்த மோசடிக்காக நிரஞ்சனுக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர்கள் கிரண், ராமன்னா, அபிஷேக் ஆகியோரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories