இந்தியா

அதிகாலையில் பயங்கரம்.. சிறுவன் ஓட்டிச் சென்ற காரால் கொடூர சம்பவம்: நடந்தது என்ன?

தெலங்கானாவில் குடிசைக்குள் கார் புகுந்ததில் 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாலையில் பயங்கரம்.. சிறுவன் ஓட்டிச் சென்ற காரால் கொடூர சம்பவம்: நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலங்கானா மாநிலம், கரீம்நகர் புறநகர்ப் பகுதியில் சாலையோரம் குடிசை அமைத்து கூலித்தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கூலி வேலைக்குச் சென்று விட்டு இரவில் குடிசையில் தங்கி வருகின்றனர்.

இந்நிலையில் வழக்கம்போல் நேற்று கூலி வேலைக்குச் சென்று விட்டு இரவு குடிசையில் அனைவரும் தூங்கியுள்ளனர். அதையடுத்து இன்று அதிகாலை கார் ஒன்று கூலித் தொழிலாளியின் குடிசைக்குள் புகுந்துள்ளது.

இந்த விபத்தில் நான்கு பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் உயிரிழந்தவர்கள் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தியதில் சிறுவன் கார் ஓட்டி வந்ததில் இந்த விபத்து நடந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் காரில் சிறுவனுடன் சேர்த்து மூன்று பேர் இருந்துள்ளனர்.

இவர்கள் விபத்து நடந்த உடனே காரில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories