இந்தியா

தொலைந்துபோன செல்போன்.. விரக்தியில் விபரீத முடிவு எடுத்த பெண்!

செல்போன தொலைந்துபோனதால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பீகாரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொலைந்துபோன செல்போன்.. விரக்தியில் விபரீத முடிவு எடுத்த பெண்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் மாநிலம், கஜாஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் பிட்டு சிங். இவரது மனைவி கணவர் வெளியூர் சென்ற நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அப்போது, வெளியே விளையாட சென்றிருந்த பிட்டு சிங்கின் மகன் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது தாய் தூக்கில் தொங்கியிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் இது குறித்து தந்தைக்குச் சிறுவன் தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த பிட்டு சிங் போலிஸாருக்கு நடந்த வற்றை தெரிவித்துள்ளார். பிறகு போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த தற்கொலை குறித்து போலிஸார் விசாரணை நடத்தினர். இதில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் செல்போன் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது. இதனால் அவர் மிகவும் வருத்தத்துடன் இருந்துள்ளார். இதனால் இவர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் போலிஸார் அந்த பெண்ணின் கணவர் உட்படப் பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories