இந்தியா

வாய்ப்பு கேட்டு வந்த மல்யுத்த வீரருக்கு அடி உதை; உ.பி. பாஜக எம்பியின் செயலால் கொதித்த சக வீரர்கள்!

மல்யுத்த போட்டியில் விளையாட வாய்ப்பு கேட்ட இளைஞரை உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்பி மேடையிலேயே அறைந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வாய்ப்பு கேட்டு வந்த மல்யுத்த வீரருக்கு அடி உதை; உ.பி. பாஜக எம்பியின் செயலால் கொதித்த சக வீரர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 15 வயதுக்குட்பட்டோருக்கான மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்பி பிரிஜ் பூஷன் ஷரன் சிங் பங்கேற்றிருந்தார். இவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் ஆவார்.

அப்போது உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மல்யுத்த வீரர் ஒருவர் போட்டியில் பங்கேற்க தனக்கும் வாய்ப்பளிக்குமாறு விளையாட்டு நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார். இருப்பினும் அந்த இளைஞர் போட்டியில் பங்கேற்க அனுமதிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறார்.

இதனைக் கண்ட பாஜக எம்பி பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மேடையில் வைத்தே அந்த இளைஞரை அடித்திருக்கிறார். இந்த நிகழ்வை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

மேலும் சக மல்யுத்த வீரர்களும் பாஜக எம்பிக்கு எதிராக கண்டனக் குரல்களை கொடுத்துள்ளனர். இதுபோக சமூக வலைதளங்களிள் பதிவிட்ட வீடியோ வைரலான நிலையில் பல தரப்பில் இருந்து பாஜக எம்பிக்கு எதிர்ப்புகள் கிளம்பி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, பாஜக எம்பியின் இந்த அநாகரிகமான செயலுக்கு மோடியும் நட்டாவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories