இந்தியா

150 மீட்டர் தூரத்திற்கு ரோட்டில் பெண்ணை இழுத்துச் சென்ற கொள்ளையர்கள்... அதிர்ச்சி வீடியோ!

டெல்லியில், பெண் ஒருவரைக் கொள்ளையர்கள் சாலையில் இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

150 மீட்டர் தூரத்திற்கு ரோட்டில் பெண்ணை இழுத்துச் சென்ற கொள்ளையர்கள்... அதிர்ச்சி வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லி ஷாலிமார்பாக் பகுதியில், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போனை பறித்துக்கொண்டு அவரை 150 அடி தூரம் வரை சாலையில் இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் வியாழனன்று நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக உள்ளார். இவர் அன்று மாலை வேலையை முடித்துவிட்டு, சாலையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், அவரது செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது அந்தப் பெண் அவர்களைப் பிடித்து இழுத்துள்ளார். இதையடுத்து அந்த மர்ம நபர்கள் அந்தப் பெண்ணை சாலையில் 150 மீட்டர் தொலைவுக்கு இருசக்கர வாகனத்தில் இழுத்துச் சென்றுள்ளனர்.

இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, அவர்களைப் பிடிக்க முயன்றனர். பிறகு அந்தப் பெண்ணை அவர்கள் சாலையில் விட்டுவிட்டு வாகனத்தில் தப்பிச் சென்றனர். பிறகு பாதிக்கப்பட்ட பெண்ணை பொதுமக்கள் மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து செல்போனை கொள்ளையடித்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories