இந்தியா

சிகிச்சைக்குப் பணம் கொடுக்க மறுத்த தந்தை.. விரக்தியில் விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவர்!

தந்தை பணம் கொடுக்காததால் கல்லூரி மாணவன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிகிச்சைக்குப் பணம் கொடுக்க மறுத்த தந்தை.. விரக்தியில் விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தவர் சாய்குமார். இவர் கல்லூரியில் பணியாற்றுபவரின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.

அப்போது விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில் இருசக்கர வாகனம் சேதடைந்துள்ளது. மேலும் வாகனம் மோதியதில் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் காயமடைந்தவர்கள் சாய்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் நடந்த சம்பவத்தை சாய்குமார் தந்தையிடம் கூறி இருசக்கர வாகனத்தை சரி செய்யவும், காயமடைந்த இளைஞர்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் பணம் கொடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.

அப்போது அவரது தந்தை பணம் கொடுக்க முடியாது எனக் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சாய்குமார் என்ன செய்வது என்று தெரியாமல் கல்லூரியின் மூன்றாவது தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories