இந்தியா

கிளம்பிய வேகத்திலேயே தரையிறங்கிய Air India விமானம்... உயிர்தப்பிய 100 பேர்... நடந்தது என்ன?

விமானத்தில் திடீரென பழுது ஏற்பட்டதால் அவசர அவசரமாக ஏர் இந்தியா விமானம் தரையிறக்கப்பட்டது.

கிளம்பிய வேகத்திலேயே தரையிறங்கிய Air India விமானம்... உயிர்தப்பிய 100 பேர்... நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அசாம் மாநிலம் கும்பகிராம் விமான நிலையத்திலிருந்து இன்று ஏர்பஸ் ஏ319 என்ற Air India விமானம் கொல்கத்தாவை நோக்கி தனது பயணத்தைத் துவக்கியது. விமானம் பறக்கத் துவங்கிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் சக்கரத்தில் பழுது ஏற்பட்டிருந்ததை விமான ஓட்டுநர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் பதட்டமடைந்த அவர்கள் உடனடியாக கிளம்பிய வேகத்திலேயே மீண்டும் விமானத்தை கும்பகிராம் விமான நிலையத்திலேயே தரையிறக்கினர். இதனால் விமானத்தில் பயணம் செய்த 100 பேர் உயிர்தப்பினர். இதையடுத்து விமான ஓட்டிகளுக்கு பயணிகள் நன்றி கூறி பாராட்டு தெரிவித்தனர்.

கிளம்பிய வேகத்திலேயே தரையிறங்கிய Air India விமானம்... உயிர்தப்பிய 100 பேர்... நடந்தது என்ன?

இந்த ஏர்பஸ் ஏ319 விமானம் கிட்டத்திட்ட 156 பயணிகள் பயணிக்கும் வசதி கொண்டதாகும். விமானத்தில் சக்கரத்தில் கியர் பழுதை கண்டறிந்து உடனே தரையிறங்கியதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஜூன் மாதம், திருவனந்தபுரத்திலிருந்து சவுதி அரேபியாவை நோக்கிச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதைக் கண்டறிந்த விமானிகள், உடனே அவசரமாக அருகே இருந்த விமான நிலையத்தில் தரையிறக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories