இந்தியா

பவானிபூர் இடைத்தேர்தல்.. முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து முன்னிலை!

பவானிபூர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

பவானிபூர் இடைத்தேர்தல்.. முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து முன்னிலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலிலின் போது நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். இருப்பினும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

இதனா,ல் மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். பதவியேற்ற ஆறு மாதத்திற்குள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும். இதனால் பவானிபூர் தொகுதி திரிணாமுல் எம்.எல்.ஏ சோபன்தே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து இந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில் பிரியங்கா டிப்ரிவால் களம் இறங்கினார். இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 30ம் தேதி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணியிலிருந்து தொடங்கி எண்ணப்பட்டு வருகிறது. நான்கு சுற்றுகள் முடிவடைந்த நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி 12, 435 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

மேலும் ஜங்கிபூர் மற்றும் சம்சர்கஞ்ச் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்குப்பதிவும் எண்ணப்பட்டு வருகிறது. மேற்குவங்க மாநிலத்தில் எண்ணப்பட்டு வரும் மூன்று தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. இவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர்கள் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். மேலும் வாக்குப் பதிவு மையத்தில் எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்காகப் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories