இந்தியா

46 மாவட்டங்களில் பாதிப்பு தீவிரம் : இந்தியாவில் துவங்கிவிட்டதா கொரோனா 3.0? - எச்சரிக்கும் ஒன்றிய அரசு !

இந்தியாவில் 46 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், அங்கு அதிக கட்டுப்பாடுகளை விதிக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

46 மாவட்டங்களில் பாதிப்பு தீவிரம் : இந்தியாவில் துவங்கிவிட்டதா கொரோனா 3.0? - எச்சரிக்கும் ஒன்றிய அரசு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தற்போது படிப்படியாகக் குறைந்து வந்ததையடுத்து பல மாநிலங்களில் ஊரடங்குகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து நாட்டில் குறைந்து வந்த கொரோனா தொற்று சில நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இன்று ஒரே நாளில் 41,831 பேருக்குப் புதிதாகத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதேபோல், மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் குறைந்திருந்த கொரோனா தொற்று சற்று அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் சில பகுதிகளில் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் தீவிரப்பட்டுத்தியுள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் 46 மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக 10% கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. எனவே இந்தப்பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விதித்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை வேண்டும் என்றும், மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு அதிகப் படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவது மூன்றாவது அலை பரவி வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories