இந்தியா

“கழிவுநீரைச் சுத்தம் செய்ய தவறிய ஒப்பந்ததாரர் தலையில் குப்பை கொட்டிய எம்.எல்.ஏ” - அதிர்ச்சி சம்பவம் !

மும்பையில் குப்பைகளைச் சுத்தம் செய்யத் தவறியதாகக் கூறி, ஒப்பந்ததாரரைக் கழிவு நீரில் அமரவைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“கழிவுநீரைச் சுத்தம் செய்ய தவறிய ஒப்பந்ததாரர் தலையில் குப்பை கொட்டிய எம்.எல்.ஏ” - அதிர்ச்சி சம்பவம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மும்பை மாநகரில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மழைநீருடன் கழிவு நீர் சேர்ந்து சாலைகளில் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.

இந்நிலையில், வடக்கு மும்பைக்கு உட்பட்ட கண்டிவாலா தொகுதியில் சாலைகளில் கழிவு நீர் தேங்கியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், தொகுதி எம்.எல்.ஏ திலீப் லண்டேவிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சிவசோனவை சேர்ந்த எம்.எல்.ஏ திலீப் லண்டே, கழிவுநீரை அகற்றும் ஒப்பந்ததாரரை அழைத்து, கழிவுநீரைச் சுத்தம் செய்ய தவறியதாக கூறி, அவரை சாக்கடை நீரில் அமரவைத்துள்ளார். அப்போது, அவரின் ஆதரவாளர்கள் ஒப்பந்ததார் தலையில் கும்பைகளை கொட்டியுள்ளனர்.

இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், திலீப் லண்டேவின் செயலுக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இவரின் இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, கடமை செய்ய தவறியதால் இப்படியான தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று திலீப் லண்டே விளக்கம் கொடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories