இந்தியா

“மனிதாபிமானமற்றது RSS கூட்டம்... இனி அவர்களை சங் பரிவார் என அழைக்கமாட்டேன்” - ராகுல்காந்தி ஆவேசம்!

கேரள கன்னியாஸ்திரிகளிடம் வேண்டுமென்றே தகறாறில் ஈடுபட்ட ஏ.பி.வி.பி அமைப்பினரின் செயலுக்கு ராகுல் காந்தி கண்டித்துள்ளார்.

“மனிதாபிமானமற்றது RSS கூட்டம்... இனி அவர்களை சங் பரிவார் என அழைக்கமாட்டேன்” - ராகுல்காந்தி ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்திர பிரதேச மாநிலத்தில், சமீபகாலமாகப் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் மற்றும் கொலைகள் அதிகரித்துள்ள சூழலில், கன்னியாஸ்திரிகள் இரண்டு பேர் ஏ.பி.வி.பி அமைப்பினரால் ஓடும் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி பகுதி அருகே கடந்த வெள்ளியன்று இரண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் இருவர் ரயிலில் பயணம் செய்தனர். அப்போது அதே ரயிலில் பா.ஜ.கவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி அமைப்பினரும் பயணித்துள்ளனர்.

அப்போது ஏ.பி.வி.பி அமைப்பினர், கன்னியாஸ்திரிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் இருவரையும் ரயிலில் மதமாற்றம் செய்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் ஒருகட்டத்தில் ஓடும் ரயிலில் இருந்து இருவரையும் இறக்கிவிட்டுள்ளனர்.

இதனையடுத்து கன்னியாஸ்திரிகளிடம் ரயில்வே போலிஸார் விசாரித்தபோது மதமாற்ற பணிகளில் அவர்கள் ஈடுபடவில்லை என்பது உறுதியானது. ஆனாலும் ஏ.பி.வி.பி அமைப்பினர் அவர்களை பயணம் செய்ய அனுமதிக்காததால் அவர்கள் திரும்பிச் சென்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதைத் தொடர்ந்து பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டித்து, உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறி மத்திய உள்துறைக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி ஏ.பி.வி.பி அமைப்பினரின் செயலைக் குறிப்பிட்டு, இது சிறுபான்மையினருக்கு எதிராக, மற்ற சமூகத்தினரைத் தூண்டிவிடும் விஷமத்தனமாக பிரச்சாரத்தின் விளைவு எனக் கண்டித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "பரிவார் என்றால் குடும்பம், குடும்பத்தில் பெண்கள் இருப்பார்கள், முதியவர்களுக்கு மரியாதை இருக்கும், இரக்கம், பாசம் போன்ற குணங்கள் இருக்கும். ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இவை இல்லை. ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் மற்றும் அதன் கூட்டணி அமைப்புகளை இனி சங்’பரிவார்’ என அழைக்கப்போவதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories