இந்தியா

டிராக்டர் பேரணி: தேசியக் கொடியை ஏந்தி டெல்லி எல்லைக்குள் நுழைந்த விவசாயிகள்!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைக்குள் நுழைந்து டிராக்டர் பேரணியை தொடங்கிய விவசாயிகள்.

டிராக்டர் பேரணி: தேசியக் கொடியை ஏந்தி டெல்லி எல்லைக்குள் நுழைந்த விவசாயிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியின் எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ஒடிசா என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 62வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

வேளாண் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய மோடி அரசு ஏற்க மறுத்ததால் 11 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. இருப்பினும் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக இருக்கின்றனர்.

டிராக்டர் பேரணி: தேசியக் கொடியை ஏந்தி டெல்லி எல்லைக்குள் நுழைந்த விவசாயிகள்!

இதனிடையே பல்வேறு வகையில் போராட்டங்களில் ஈடுபட்டும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி மடுக்காத காரணத்தால் நாட்டின் 72அது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் டிராக்டர் அணிவகுப்பை பிரமாண்டமாக நடத்தப் போவதாக அறிவித்தனர்.

அந்த வகையில், இன்று காலை முதலே டிராக்டர் பேரணியில் பங்கேற்பதற்காக டெல்லியின் எல்லைக்குள் லட்சக்கணக்கான விவசாயிகள் தேசியக் கொடிகளை ஏந்தியபடி சென்றுக்கொண்டிருக்கிறார்கள்.

டெல்லியின் திக்கிரி மற்றும் சிங்கு எல்லை வழியாக உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் டிராக்டர்களில் வந்த வண்ணம் உள்ளனர். லட்சக்கணக்கான விவசாயிகள் பேரணி மேற்கொள்வதால் மாநில எல்லைகளில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories