இந்தியா

“இந்தியாவில் 98 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு” : தற்பெருமை பேசாமல் நடவடிக்கை எடுக்குமா மோடி அரசு?

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 29,398 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

“இந்தியாவில் 98 லட்சத்தை  நெருங்கும் கொரோனா பாதிப்பு” : தற்பெருமை பேசாமல் நடவடிக்கை எடுக்குமா மோடி அரசு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 29,398 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 97,96,770 ஆக உயர்ந்திருக்கிறது.

ஒரே நாளில் 414 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து 1,42,186 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். மேலும், ஒரே நாளில் 37,528 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 92,90,834ஆக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து, 3,63,749 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குணமடைந்தோர் விகிதம் 94.84% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.45% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 3.71% ஆக குறைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories