இந்தியா

“எனது பதிவுகளைத் திரும்பப் பெறவோ; மன்னிப்பு கேட்கவோ நான் விரும்பவில்லை” : நடிகர் குணால் கம்ரா உறுதி!

எனது ட்வீட்களைத் திரும்பப் பெறவோ அல்லது மன்னிப்பு கேட்கவோ நான் விரும்பவில்லை என உச்சநீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக நடிகர் குணால் கம்ரா தெரிவித்துள்ளார்.

“எனது பதிவுகளைத் திரும்பப் பெறவோ; மன்னிப்பு கேட்கவோ நான் விரும்பவில்லை” : நடிகர் குணால் கம்ரா உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய அரசுக்கு அனுசரணையாகவும், பா.ஜ.கவினருக்கு ஆதரவாகவும் உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புகள் இருப்பதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் பா.ஜ.கவிற்கு ஆதரவாக மட்டும் செயல்படும் பா.ஜ.க-வுக்கு நெருக்கமான அர்னாப் கோஸ்வாமி போன்றோர்க்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அலிபாக்கை சேர்ந்த கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வய் நாயக் மற்றும் அவரது தாயார் கடந்த 2018-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டனர். பிரபல ஆங்கில டி.வி. சேனலான ரிபப்ளிக் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, அன்வய் நாயக்கிற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்காததால், இந்த இரட்டை தற்கொலை நடந்ததாக கூறப்பட்டது.

இதனையடுட்து அன்வாய் நாயக்கை என்பவரை தற்கொலைக்கு தூண்டியதால், அன்வய் நாயக்கின் மகள் அளித்த புகாரின்பேரில் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலிஸ் கைது செய்தது. இந்தநிலையில் இடைக்கால ஜாமீன் கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில், அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேரும் மனு தாக்கல் செய்தனர்.

“எனது பதிவுகளைத் திரும்பப் பெறவோ; மன்னிப்பு கேட்கவோ நான் விரும்பவில்லை” : நடிகர் குணால் கம்ரா உறுதி!

அப்போது அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். இதற்கிடையே அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேரும் அலிபாக் செசன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர் அதுவும் மறுக்கபட்டது.

இதை தொடர்ந்து அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றம் நாடினார். தாக்கல் செய்த மனுவை, உச்சநீதிமன்றம் ஒரேநாளில் விசாரித்து, எதிர்பார்த்தபடியே அவருக்கு புதனன்று இடைக்கால ஜாமீன் வழங்கியது.

அன்வாய் நாயக்கை, அர்னாப் நேரடியாக தற்கொலைக்குத் தூண்டவில்லை என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர். பா.ஜ.க தலைவர்கள் மற்றும் பா.ஜ.கவுக்கு நெருக்கமானவர்களுக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஆதரவாக இருக்கின்றன என்ற விமர்சனத்தை, இந்த தீர்ப்பு மேலும் வலுப்படுத்தியது.

“எனது பதிவுகளைத் திரும்பப் பெறவோ; மன்னிப்பு கேட்கவோ நான் விரும்பவில்லை” : நடிகர் குணால் கம்ரா உறுதி!

இந்நிலையில்தான், பிரபல பாலிவுட் காமெடி நடிகர் குணால் கம்ரா, அர்னாப் ஜாமீன் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மீது கடும் விமர்சனங்களை வைத்துள்ளார். இதுதொடார்பாக நடிகர் குணால் கம்ரா தனது முகநூல் வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டின் மிக உயர்ந்த உச்சநீதிமன்றம் மிக உயர்ந்த நகைச்சுவையாகிவிட்டது.

தேசிய நலன்கள் விஷயங்களில் உச்சநீதிமன்றம் செயல்படும் வேகத்தைப் பார்க்கையில் விரைவிலேயே மகாத்மா காந்தியின் புகைப் படம் மாற்றப்பட்டு, அந்த இடத்தில் அர்னாப் தரப்பு வழக்கறிஞர் ஹரிஷ்சால்வேயின் புகைப்படம் இடம் பெறும் என நினைக்கிறேன்” எனப் பதிவிட்டு, உச்சநீதிமன்றம் காவிமயமாகி விட்டது என்று குறிப்பிடும் வகையில், காவி நிறத்தில் உச்ச நீதிமன்றம் இருப்பது போல புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ள அவர், உச்ச நீதிமன்ற கட்டத்தில் பா.ஜ.க கொடி பறப்பது போல அந்த புகைப்படத்தை அமைத்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கடுமையான சர்ச்சையையும் எழுப்பியது.

இந்நிலையில் இதுதொடர்பாக நடிகர் குணால் கம்ரா வெளியிட்டுள்ள பதிவில், “வழக்கறிஞர் இல்லை.. மன்னிப்பு இல்லை.. அபராதம் இல்லை.. இடத்தை வீணடிக்க வேண்டாம்!

அன்புள்ள நீதிபதிகள், திரு கே.கே.வேணுகோபால்,

நான் சமீபத்தில் வெளியிட்ட ட்வீட்டுகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நான் ட்வீட் செய்ததெல்லாம் இந்திய உச்சநீதிமன்றம் ஒரு பிரைம் டைம் ஒலிபெருக்கிக்கு ஆதரவாக ஒரு பகுதி முடிவை வழங்குவதைப் பற்றிய எனது பார்வைதான் இது.

“எனது பதிவுகளைத் திரும்பப் பெறவோ; மன்னிப்பு கேட்கவோ நான் விரும்பவில்லை” : நடிகர் குணால் கம்ரா உறுதி!

நீதிமன்றத்தின் சிறைப்பிடிக்கப்பட்ட பார்வையாளர்களுடன் ஒரு மேடையை அனுபவிப்பதையும் நான் மிகவும் விரும்புகிறேன். இதில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நாட்டின் மிக உயர்ந்த சட்ட அதிகாரிகளின் பார்வையாளர்கள். எனது பார்வை மாறவில்லை, ஏனென்றால் மற்றவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் தொடர்பான விஷயங்களில் இந்திய உச்சநீதிமன்றத்தின் அமைதி,விமர்சிக்கப்படாது.

எனது ட்வீட்களைத் திரும்பப் பெறவோ அல்லது மன்னிப்பு கேட்கவோ நான் விரும்பவில்லை. அவர்கள் தமக்காகவே பேசுகிறார்கள் என்று நான் நம்புகிறேன். னது அவமதிப்பு மனுவின் விசாரணைக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை தன்னார்வத் தொண்டு செய்ய விரும்புகிறேன். அதுவும் குறைந்தபட்சம் 20 மணிநேரம், பிரசாந்த் பூஷனின் விசாரணை வரிசையில் இடம் பெறுவதால், நான் அதிர்ஷ்டசாலி.

“எனது பதிவுகளைத் திரும்பப் பெறவோ; மன்னிப்பு கேட்கவோ நான் விரும்பவில்லை” : நடிகர் குணால் கம்ரா உறுதி!

இன்னும் பல மனுவை நான் பரிந்துரைக்கிறேன். குறிப்பாக ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பாக, தேர்தல் பத்திரங்களின் சட்டபூர்வமான விஷயம் மற்றும் தகுதியான எண்ணற்ற பிற விஷயங்கள் பேசுகிறேன்.

இந்திய உச்சநீதிமன்றம் எனது ட்வீட்களை இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை, ஆனால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் நீதிமன்ற அவமதிப்பு என்று அறிவிப்பதற்கு முன்பு அவர்கள் ஒரு சிறிய சிரிப்பைக் கொண்டிருக்கலாம் என்று நம்புகிறேன்.

எனது ஒரு ட்வீட்டில் இந்திய உச்சநீதிமன்றத்தில் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை ஹரிஷ் சால்வேவுடன் மாற்றுமாறு கேட்டுக் கொண்டேன். பண்டிட் நேரு புகைப்படத்தையும் மகேஷ் ஜெத்மலானியுடன் மாற்ற வேண்டும் என்று சேர்க்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories