இந்தியா

32 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு: ஒரே மாதத்தில் 15 லட்சம் பேருக்கு தொற்று.. அன்லாக் 4 தேவைதானா?

ஆகஸ்ட் மாதத்தில் நகரங்களைவிட கிராமங்களில் அதிகளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

32 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு: ஒரே மாதத்தில் 15 லட்சம் பேருக்கு தொற்று.. அன்லாக் 4 தேவைதானா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 32 லட்சத்தை தாண்டியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் 32 லட்சத்து 34 ஆயிரத்து 475 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதில், 24 லட்சத்து 67 ஆயிரத்து 758 பேர் குணமடைந்திருந்தாலும் 59 ஆயிரத்து 449 பேர் கொரொனா தொற்றால் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் வேதனையை அளித்துள்ளது. மேலும், சிகிச்சையில் மட்டுமே 7 லட்சத்து 7,267 பேர் உள்ளனர்.

இப்படி இருக்கையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 67 ஆயிரத்து 151 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல, ஒரே நாளில் 63 ஆயிரத்து 173 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆயினும் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 59 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

32 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு: ஒரே மாதத்தில் 15 லட்சம் பேருக்கு தொற்று.. அன்லாக் 4 தேவைதானா?

இதனையடுத்து ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே 15 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக நகரங்களை விட கிராமப்பகுதிகளிலேயே இந்த மாதத்தில் கூடுதல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பாதிப்பு அதிகமாக உள்ள 584 மாவட்டங்களில் பெரும்பான்மையும் உள்மாவட்டங்கள் என்று தெரியவந்துள்ளது. இதில் 345 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கிறது.

இதனிடையே புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய அன்லாக் 4 அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்பட உள்ளது. பள்ளி, கல்லூரிகள் தவிர்த்து மற்ற துறைகளில் கூடுதல் தளர்வுகளை அனுமதிக்க மத்திய உள்துறை ஆலோசனைகளை நடத்திவருகிறது.

banner

Related Stories

Related Stories