இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 31 லட்சத்தை தாண்டியது - மோடி அரசின் தடுப்பு நடவடிக்கை என்ன ஆனது?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 31 லட்சத்தை தாண்டியது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 31 லட்சத்தை தாண்டியது - மோடி அரசின் தடுப்பு நடவடிக்கை என்ன ஆனது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 23,585,422 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 812,517 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 5,874,146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 180,604 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 31 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,06,349 ஆகவும், யிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 57,542 ஆக அதிகரித்துள்ளது. மேலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 23,38,036 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய கணக்குகள் படி குணமடைவோர் 76% ஆக உள்ளது.

கொரோனாவால் நாள்தோறும் 50 ஆயிரம் பேருக்குப் பாதிப்பு என்பது நீடிக்கிறது. அதுமட்டுமல்லாது, கடந்த17 நாட்களில் மட்டும் 11 லட்சம் பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாகத்தான் கொரோனா சோதனைகள் அனைத்து மாநிலங்களிலும் அதிக அளவில் நடத்தப்படுகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சத்துக்கு மேல் சோதனைகள் நடத்தப்பட்டுவருகிறது.

banner

Related Stories

Related Stories