இந்தியா

நாட்டில் 50,000-ஐ கடந்தது கொரோனா பலிகள்.. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிசையில் தொடரும் மோடி அரசின் சாதனைகள்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

நாட்டில் 50,000-ஐ கடந்தது கொரோனா பலிகள்.. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிசையில் தொடரும் மோடி அரசின் சாதனைகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடு முழுவதும் கொரோனாவுக்கு இதுவரையில் 26 லட்சத்து 47 ஆயிரத்து 663 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 57 ஆயிரத்து 981 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரையில் 19 லட்சத்து 19 ஆயிரத்து 842 பேர் கொரோனாவில் இருந்து மீண்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 57 ஆயிரத்து 584 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 50,000-ஐ கடந்தது கொரோனா பலிகள்.. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிசையில் தொடரும் மோடி அரசின் சாதனைகள்!

மேலும், கொரோனாவால் இந்தியாவில் 1.92 சதவிகிதம் பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் எண்ணிக்கை அளவில் நாட்டில் 50 ஆயிரத்தை கடந்துள்ளது கொரோனா பலி. அதன்படி நேற்று ஒரே நாளில் 941 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 50 ஆயிரத்து 921 ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து தற்போது 6 லட்சத்து 76 ஆயிரத்து 900 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இதுவரையில் 3 கோடியே 41 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் நேற்று ஒரு நாளில் 7.31 லட்சத்து 697 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories