இந்தியா

“இதுதான் நல்ல நிலையில் இருப்பதா?” - ஆதாரத்துடன் அமித்ஷாவுக்கு கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா நல்ல நிலையில் இருப்பதாக அமித்ஷா தெரிவித்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

“இதுதான் நல்ல நிலையில் இருப்பதா?” - ஆதாரத்துடன் அமித்ஷாவுக்கு கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா நல்ல நிலையில் இருப்பதாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9 லட்சத்தை நெருங்கி வருகிறது. இதுவரை 23 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா நல்ல நிலையில் இருக்கிறது. கொரோனாவை ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன், ஆர்வத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது” எனப் பேசினார்.

இந்நிலையில், ஊரடங்கை உலக நாடுகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தின, இந்தியா எவ்வாறு நடைமுறைப்படுத்தியது என்பது குறித்து ட்விட்டரில் வரைபடங்களை வெளியிட்டு மத்திய அரசின் செயல்பாட்டை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி.

ராகுல் காந்தி வெளியிட்ட அந்த வரைபடத்தில், உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து மார்ச் முதல் ஜூலை வரையிலான காலக்கோடு குறிக்கப்பட்டுள்ளது. அதில் நியூஸிலாந்து, தென் கொரியா நாடுகள் தங்கள் நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளன. அமெரிக்கா, இந்தியாவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து மேல்நோக்கி உயர்ந்து வருகிறது.

இந்த வரைபடத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ராகுல் காந்தி, “கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா நல்ல நிலையில் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories