இந்தியா

“பா.ஜ.க பாணியை கையில் எடுத்த காங்கிரஸ்”: மணிப்பூரில் ஆட்சி கவிழ்கிறது? - மீண்டும் ஆட்சியமைக்கிறது காங்.?

மணிப்பூரில் 3 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் உட்பட 11 பேர் ராஜினாமா செய்துள்ளதால் அங்கு பா.ஜ.க ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

“பா.ஜ.க பாணியை கையில் எடுத்த காங்கிரஸ்”: மணிப்பூரில் ஆட்சி கவிழ்கிறது? - மீண்டும் ஆட்சியமைக்கிறது காங்.?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 60 சட்டப்பேரவைட் தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரில் கடந்த 2017லில் நடந்த தேர்தலில் 28 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 21 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றது.

காங்கிரஸ் 28 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் இருந்தது போதும் கூட, பா.ஜ.க 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, மற்றும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற லோக் ஜனசக்தி, திரிணாமுல் காங்கிரஸ், சுயேச்சையுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்நிலையில் சமீபகாலமாக நடந்த மோதல் போக்குகாரணமாக விரிசல் ஏற்பட்ட பா.ஜ.க கூட்டனி தற்போது முழுமையாக உடைந்துள்ளது. குறிப்பாக, பா.ஜ.கவைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

“பா.ஜ.க பாணியை கையில் எடுத்த காங்கிரஸ்”: மணிப்பூரில் ஆட்சி கவிழ்கிறது? - மீண்டும் ஆட்சியமைக்கிறது காங்.?

இதனையடுத்து பா.ஜ.கவின் கூட்டணி கட்சி கட்சிகளான தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர், திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர், சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் எனமொத்தம் 9 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க அரசுக்கு தெரிவித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர்.

இதனிடையே ராஜினாமா செய்த எஸ்.சுபாஷ்சந்திர சிங், டி.டி.ஹாகீப் மற்றும் சாமுவேல் ஜெண்டாய் ஆகிய மூன்று எம்.எல்.ஏக்களும் காங்கிரஸில் இணைந்தனர். இதனால் மணிப்பூரில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி கவிழும் நிலை உருவாகியிருக்கிறது. தற்போது காங்கிரஸின் பலமும் 34 ஆக உயர்ந்துள்ளதால் ஆட்சியை அமைப்பதற்கான பெரும்பான்மை இருப்பதால் அமைக்க காங்கிரஸ் தீவிரமாக முயற்சித்து வருகிறது.

banner

Related Stories

Related Stories