இந்தியா

"குறித்த நேரத்தில் உரிய சோதனை நடைபெறுவதே தேசத்தைக் காக்கும்” : மதுரை எம்.பி வேதனையோடு எழுதிய கடிதம்!

'குறித்த நேரத்தில், உரிய சோதனை ஒன்றே, கொரோனாவில் இருந்து இந்த தேசத்தைக் காக்கும்', என்ற சூழலில் மதுரை அரசு மருத்துவமனைக்கு 'சோதனை கிட்' எதுவும் வழக்கப்படவில்லை என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

"குறித்த நேரத்தில் உரிய சோதனை நடைபெறுவதே தேசத்தைக் காக்கும்” : மதுரை எம்.பி வேதனையோடு எழுதிய கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதுரை அரசு மருத்துவமனைக்கு கோவிட்-19 சோதனை மையத்துக்கு அனுமதி கொடுத்து 10 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் இப்போதுவரை 'சோதனை கிட்' எதுவும் வழக்கப்படவில்லை என தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்திற்கும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “தேசத்தின் நெருக்கடியான தருணத்தில், உங்கள் பணி மகத்தானது. குறிப்பாக விரைவில் நோய்த்தாக்கத்தை கண்டறியும் சோதனை உபகரணத்தினை நெருக்கடியான காலகட்டத்தில் உடனடியாக பயன்பாட்டுக்கு உங்கள் குழு விஞ்ஞானிகள் கொண்டுவந்தமைக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.

எங்கள் மதுரை நகரில் 2,518 படுக்கை வசதிகளோடு தென்தமிழகத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனை, மற்றும் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. மதுரையைச் சுற்றியுள்ள 6 மாவட்டங்களுக்கு இதுவே முக்கிய மருத்துவமனை. கடந்த 10 நாட்களுக்கு முன்னர், எங்கள் மருத்துவமனைக்கு உங்கள் ஆய்வு மையம், கோவிட்-19 ஐ கண்டறியும் சோதனை மையத்துக்கு அங்கீகாரம் வழங்கியது.

இருந்த போதிலும், இன்றளவிலும் கோவிட்-19 ஐ உறுதிப்படுத்தும் RTPCR 'சோதனை கிட்' உங்களிடமிருந்து வரவில்லை. ஒவ்வொரு நாளும் மதுரை மருத்துவமனையிலிருந்து சோதனை மாதிரிகளை தொலைவில் உள்ள, தேனி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அங்கும் பணி நெருக்கடியால் சோதனை கிட் தீரும் நிலை உருவாகின்றது.

அடுத்தகட்ட மருத்துவத்தை உடனடியாக துவக்க முடியாமல், இந்த சோதனை முடிவு வழிகாட்டுதலுக்காகக் மருத்துவர்கள் காத்திருக்கிறார்கள், இன்னொரு பக்கமோ 'முடிவு என்னவானதோ?' என 24 மணி நேரத்திற்கும் மேலாக நோயாளிகள் காத்திருக்கிறார்கள். மிகுந்த வலிநிறைந்த காத்திருப்பாக இது இருக்கிறது.

'குறித்த நேரத்தில், உரிய சோதனை ஒன்றே, கொரோனாவில் இருந்து இந்த தேசத்தைக் காக்கும்' என்ற சூழலில் இப்போதைய தாமதம், வலியையும் வருத்தத்தையும் உருவாக்குகின்றது.

"குறித்த நேரத்தில் உரிய சோதனை நடைபெறுவதே தேசத்தைக் காக்கும்” : மதுரை எம்.பி வேதனையோடு எழுதிய கடிதம்!

நான் உங்களின் பணி நெருக்கடி அறியாதவன் அல்ல. மதுரை தென்தமிழகத்தின் மையப் புள்ளி; ஏராளமான கிராம நடுத்தர மக்களின் நம்பிக்கை உறைவிடம். நெருக்கடி அதிகரித்துவரும் சூழலில், சோதனையின் முடிவுதான் எம்மக்களை ஆசுவாசப்படுத்தும் ஒரே இடம். ஆதலால், போதிய அளவு சோதனை கிட்களை போர்க்கால அடிப்படையில் எங்களுக்கு அளித்திட வேண்டுகிறேன்”.

இவ்வாறு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories