இந்தியா

தூக்குத் தண்டனை நிறைவேற்றம் : நாட்டையே உலுக்கிய ‘நிர்பயா வழக்கு’ கடந்து வந்த பாதை!

கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்ற நிர்பயா வழக்கு கடந்து வந்த பாதையின் தொகுப்பு...

தூக்குத் தண்டனை நிறைவேற்றம் : நாட்டையே உலுக்கிய ‘நிர்பயா வழக்கு’ கடந்து வந்த பாதை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நிர்பயா கொலைக் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு, டிசம்பர் 16-ந் தேதி இரவில் 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா தனது நண்பருடன் பேருந்தில் சென்றபோது, 6 பேர் கொண்ட ஒரு கும்பல் மாணவி நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்து நடு ரோட்டில் வீசியது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட நிர்பயா, சிகிச்சை பலனின்றி 13 நாட்கள் கழித்து டிசம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார். இந்தக் கோரச் சம்பவம், நாட்டையே உலுக்கியது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கு கடந்து வந்த பாதையின் தொகுப்பு...

தூக்குத் தண்டனை நிறைவேற்றம் : நாட்டையே உலுக்கிய ‘நிர்பயா வழக்கு’ கடந்து வந்த பாதை!

டிச., 16, 2012: டெல்லியில் மருத்துவ மாணவி, 'நிர்பயா' தன் நண்பருடன் இரவில், தனியார் பஸ்சில் பயணம் செய்த போது, ஆறு பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டார்; நண்பரும் தாக்கப்பட்டார்.

டிச., 17: டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் நிர்பயா சேர்க்கப்பட்டார்.

டிச., 17: குற்றவாளியான பஸ் டிரைவர், ராம் சிங், அவரது சகோதரர், முகேஷ் சிங், ராஜஸ்தானிலும், வினய் சர்மா, பவன் குப்தா, 17 வயது சிறுவன், டெல்லியிலும். அக்ஷய் குமார் சிங், அவுரங்காபாதிலும் கைது செய்யப்பட்டார்.

டிச., 21: சப்தர்ஜங் மருத்துவமனையில், மாஜிஸ்திரேட்டிடம், நிர்பயா வாக்குமூலம் அளித்தார்.

தூக்குத் தண்டனை நிறைவேற்றம் : நாட்டையே உலுக்கிய ‘நிர்பயா வழக்கு’ கடந்து வந்த பாதை!

டிச., 26: குற்றவாளிகளை துாக்கிலிட வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டம்.

டிச., 27: நிர்பயா மேல் சிகிச்சைக்காக, சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

டிச., 29: 13 நாட்கள் கழித்து சிகிச்சை பலனின்றி நிர்பயா, அதிகாலை, 2:15 மணிக்கு உயிரிழந்தார். பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல்.

ஜன., 03, 2013: பாலியல் பலாத்காரம், கொலை, கடத்தல், ஆவணங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளில், ஐந்து குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆறு பேரில், மைனர் குற்றவாளி வழக்கு மட்டும் சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.

தூக்குத் தண்டனை நிறைவேற்றம் : நாட்டையே உலுக்கிய ‘நிர்பயா வழக்கு’ கடந்து வந்த பாதை!

ஜன., 17: டெல்லி சாகேட் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை துவங்கியது.

மார்ச் 11: திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய குற்றவாளியான ராம் சிங் துாக்கிட்டு தற்கொலை. மற்ற ஐந்து பேர் மீதான விசாரணை தொடர்ந்தது.

ஆக., 31: குற்றம் நிரூபிக்கப்பட்ட மைனர் குற்றவாளிக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை.

செப்., 10: குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என, நீதிமன்றம் தீர்ப்பு. 13 பிரிவுகளில் இவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டது.

தூக்குத் தண்டனை நிறைவேற்றம் : நாட்டையே உலுக்கிய ‘நிர்பயா வழக்கு’ கடந்து வந்த பாதை!

செப்., 13: நால்வருக்கும் மரண தண்டனை வழங்கி, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

ஜன., 03, 2014: சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்.

ஜூன் 02: குற்றவாளிகள் இருவர், இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.

ஜூலை 14: குற்றவாளிகளின் துாக்கு தண்டனைக்கு இடைக்கால தடை.

டிச., 2015: மைனர் குற்றவாளியை விடுவிக்கக் கூடாது என, பா.ஜ.க-வின் சுப்பிரமணியன் சாமி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு.

தூக்குத் தண்டனை நிறைவேற்றம் : நாட்டையே உலுக்கிய ‘நிர்பயா வழக்கு’ கடந்து வந்த பாதை!

டிச., 18: இம்மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டிச., 20: மூன்று ஆண்டு சிறை தண்டனை முடிந்ததால், மைனர் குற்றவாளி விடுதலை.

ஏப்., 03, 2016: உச்சநீதிமன்றத்தில் விசாரணை துவக்கம்.

மே.,05, 2017: அக் ஷய் குமார் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் மரண தண்டனை விதித்த டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை, உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

நவ., 13: தீர்ப்பை எதிர்த்து, அக் ஷய் குமார் தவிர, மற்ற மூவரும் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு.

ஜூலை 09: சீராய்வு மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அக்., 29, 2019: கருணை மனு தாக்கல் செய்ய, குற்றவாளிகளுக்கு திஹார் ஜெயில் நிர்வாகம், ஏழு நாள் காலக்கெடு விதித்தது.

நவ., 08: டெல்லி அரசிடம் வினய் சர்மா கருணை மனு.

நவ., 30: இதை தள்ளுபடி செய்த டெல்லி உள்துறை அமைச்சர், டெல்லி துணைநிலை கவர்னருக்கு மாற்றினார்.

டிச., 02: கவர்னரும் மனுவை தள்ளுபடி செய்து, டெல்லி அரசு முடிவெடுக்க அனுமதி.

டிச., 06: கருணை மனுவை, உள்துறை அமைச்சகம் ஜனாதிபதிக்கு மாற்றியது. மனுவை தள்ளுபடி செய்ய, டெல்லி அரசு பரிந்துரை.

தூக்குத் தண்டனை நிறைவேற்றம் : நாட்டையே உலுக்கிய ‘நிர்பயா வழக்கு’ கடந்து வந்த பாதை!

டிச., 10: அக்ஷய் குமார் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு.

டிச., 18: மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், மூன்று வாரங்களுக்குள் ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்ய உத்தரவு.

ஜன., 07, 2020: நான்கு குற்றவாளிகளையும், ஜன., 22 காலை, 7:00 மணிக்கு துாக்கிலிட, திஹார் ஜெயில் நிர்வாகத்துக்கு, டெல்லி நீதிமன்றம்நோட்டீஸ்.

ஜன., 17: முகேஷ் சிங் கருணை மனுவை, குடியரசுத் தலைவர் ராம்நாத் நிராகரிப்பு.

ஜன., 30: துாக்கு தண்டனையை நிறுத்தி வைக்க்க கோரிய அக்ஷய் குமார் மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தூக்குத் தண்டனை நிறைவேற்றம் : நாட்டையே உலுக்கிய ‘நிர்பயா வழக்கு’ கடந்து வந்த பாதை!

பிப்., 01: வினய் சர்மா கருணை மனுவை ஜனாதிபதி நிராகரிப்பு.

பிப்., 17: நான்கு பேரையும், மார்ச், 3ம் தேதி காலை, 6:00 மணிக்கு துாக்கிலிட, டெல்லி நீதிமன்றம் புது, 'வாரன்ட்' பிறப்பித்தது.

மார்ச் 05: பவன் குப்தா கருணை மனுவை ஜனாதிபதி நிராகரிப்பு.

மார்ச் 19: முகேஷ் சிங் மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்றம் நிராகரிப்பு. நான்கு பேரையும் இன்று காலை, 5:30 மணிக்குள் துாக்கிலிட உத்தரவு. நள்ளிரவில் குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

மார்ச் 20: சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு அவசர வழக்காக அதிகாலை 2.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த மனுவையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ய, 4 பேரின் தூக்கும் உறுதி செய்யப்பட்டது.

மார்ச் 20: அதிகாலை 5.30 மணி: குற்றவாளிகள் 4 பேரும் திஹார் சிறையின், 3ம் எண் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.

தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட டீ மற்றும் தண்ணீரை அவர்கள் ஏற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories