இந்தியா

பொதுமக்களின் கைரேகை அச்சுகளை வைத்து ரேசன் கடைகளில் மாபெரும் ஊழல் - அம்பலமான குஜராத் ஸ்மார்ட்கார்டு மோசடி!

போலி கைரேகை மூலம் குஜராத்தில் ரேசன் பொருட்களை கொள்ளையடித்து மோசடியில் ஈடுபட்டது சைபர் க்ரைம் போலிஸாரால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பொதுமக்களின் கைரேகை அச்சுகளை வைத்து ரேசன் கடைகளில் மாபெரும் ஊழல் - அம்பலமான குஜராத் ஸ்மார்ட்கார்டு மோசடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒரே நாடு ஒரே மொழி, ஒரே ரேசன், ஒரே மதம் என தொடர்ந்து ‘ஒற்றை’ ஆதிக்கக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை தங்களது மதவாத அரசியலுக்காக செயல்படுத்தி வருகிறது. ஆனால், இதுபோன்ற நடவடிக்கையால் நாட்டில் மேன்மேலும் ஊழல்களும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு நடவடிக்கைகளுமே ஏற்படும் என வல்லுநர்கள் பலர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில், குடும்ப அட்டைக்குப் பதிலாக ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை அறிமுகம் செய்து அதன் மூலம் மக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இது தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தற்போது தொடங்கப்பட்டிருந்தாலும் வடமாநிலங்களில் இந்த ஸ்மார்ட் ரேசன் திட்டம் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வருகிறது.

அந்தவகையில் ஸ்மார்ட் கார்டு திட்டம் குஜராத் மாநிலத்தில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் எவ்வித பாதிப்பும் மக்களுக்கு இருக்காது என பா.ஜ.கவினர் கூறி வந்தனர்.

பொதுமக்களின் கைரேகை அச்சுகளை வைத்து ரேசன் கடைகளில் மாபெரும் ஊழல் - அம்பலமான குஜராத் ஸ்மார்ட்கார்டு மோசடி!

ஆனால், ஸ்மார்ட் கார்டு அடிப்படையில் மக்களின் விரல் ரேகைகளை மட்டும் பதிவு செய்து ரேசன் பொருட்கள் வழங்கி வந்தது சைபர் க்ரைம் போலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட சைபர் க்ரைம் போலிஸாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

அதில், குஜராத்தில் உள்ள ரேசன் கடை பணியாளர்கள், பயனாளர்களின் கைரேகை அச்சுகளை போலியாக உருவாக்கி, சட்டவிரோதமாக ரேசன் பொருட்களை தனியாருக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

இதன் மூலம் சுமார் 1.27 கோடி ஸ்மார்ட் கார்டு பயனாளர்களின் கைரேகைகளை வைத்து கோடிக் கணக்கில் கொள்ளையடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் கைரேகை அச்சுகளை வைத்து ரேசன் கடைகளில் மாபெரும் ஊழல் - அம்பலமான குஜராத் ஸ்மார்ட்கார்டு மோசடி!

இதனையடுத்து சூரத் நகரில் உள்ள நியாய விலைக் கடையில் இருந்து சுமார் 1,100 பேரில் கைரேகை அச்சுகளை சைபர் க்ரைம் போலிஸார் கைப்பற்றியுள்ளனர். பிரதமர் மோடியின் சகோதரரான பிரகாலாத் மோடியே குஜராத் மாநிலத்தின் ரேசன் கடை உரிமையாளர் சங்கத் தலைவர்களில் ஒருவராக உள்ளார்.

இந்த கைரேகை அச்சுகளை போலியாக உருவாக்கி ரேசன் பொருட்கள் மட்டுமல்லாது மக்களின் பண பரிவர்த்தனை, ரகசிய கோப்புகள் என பலவற்றையும் சுலபமாக திருடி தனியாருக்கு விற்க முடியும் என ஏற்கெனவே மும்பையைச் சேர்ந்த ஜூட் டிசோசா என்ற தடயவியல் அதிகாரி எச்சரித்திருந்தார்.

தற்போது அது பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலேயே நடந்திருப்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட் கார்டு மூலமாகவே ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை கொண்டு வர மோடி அரசு முயற்சித்து வருகிறது. இந்நிலையில், இதுபோன்ற முறைகேடுகள் மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

banner

Related Stories

Related Stories