India

#LIVEUpdate | கொரோனா முன்னெச்சரிக்கை : சட்டப்பேரவை நாளையுடன் நிறைவு! #TNAssembly

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

#LIVEUpdate | கொரோனா முன்னெச்சரிக்கை : சட்டப்பேரவை நாளையுடன் நிறைவு! #TNAssembly
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on
23 March 2020, 06:33 AM

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு!

23 March 2020, 04:38 AM

கொரோனா முன்னெச்சரிக்கை: காங்கிரஸ், இந்திய முஸ்லிம் லீக் கட்சிகளும் சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக தி.மு.க, காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் அறிவிப்பு.

23 March 2020, 04:30 AM

சட்டமன்றக் கூட்டத்தொடர் - தி.மு.க புறக்கணிப்பு!

கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக தி.மு.க அறிவிப்பு! - எதிர்க்கட்சிக் கொறடா சக்கரபாணி பேட்டி.

21 March 2020, 05:04 AM

ஆலங்குடி தொகுதி மேற்பனைக்காடு ஊராட்சி, மேலக்காடு புதுக்குடியிருப்பில் மின்மாற்றி அமைக்க அரசு முன்வருமா?

மேலக்காடு புதுக்குடியிருப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக மின்தடை அதிகமாக இருக்கிறது. அதற்காக அங்கு புதிய மின் மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

- ஆலங்குடி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மெய்யநாதன்.

21 March 2020, 05:02 AM

துறையூர் தொகுதி பொன்னம்பலம்பட்டியில் பகுதிநேர நியாய விலை கடை அமைக்க அரசு முன்வருமா.

துறையூர் தொகுதியில் அதிகமாக மலை வாழ் மக்கள் அதிகமாக வசித்து வருகிறார். அங்கு 34 கிராமங்கள் உள்ளது . இந்த கிராமத்தில் உள்ள மக்கள் 45 கிலோ மீட்டர் சென்று கடந்து செல்லவேண்டும் அங்கு பேருந்து வசதிகள் இல்லை.

அதே போல அங்கு கூட்டுறவு கடன் சங்கம் அமைக்க வேண்டும் இல்லை என்றால் கிளை சங்கமாவது அமைக்க வேண்டும். மேலும், செயல்படாமல் இருக்கும் சுய உதவி குழுகள் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- துறையூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின்

21 March 2020, 04:59 AM

தலைமைச் செயலகத்தில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

20 March 2020, 06:46 AM

மக்கள் பீதியில் உள்ள நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுக்காக அந்த தொகுதியில் இருப்பது தான் முறை!

மக்கள் பீதியில் உள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தந்த தொகுதிகளுக்கு சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு அவர்கள் குதியில் இருக்க வேண்டும்.

அதற்காக சட்டசபையை விதிமுறைகளை தளர்த்த வேண்டும். மக்களுக்காக அந்த தொகுதியில் இருப்பது தான் முறை!.

- எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.

20 March 2020, 06:16 AM

வேளச்சேரி - அடையாறு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் நோயாளிகளும் மருத்துவர்களும் பெரிதும் பாதிப்படைகிறார்கள்.

குழந்தைகள் பிறகும் இடத்தில் ஏ.சி இல்லை, ஜெனரேட்டர் இல்லை எனவே சுகாதாரத்துறை அமைச்சர் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

- வேளச்சேரி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர்.

20 March 2020, 06:15 AM

பெரமநல்லூர் ஒன்றியம் பெரியகொழப்பலூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டி 60 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட வேண்டும்.

பொது மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டாலும் அந்த மருத்துவமனைக்கு 500 மீட்டர் அளவில் சுற்றுச்சுவர் எழுப்பி தரவேண்டும்.

- போளூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கே.வி.சேகரன்.

20 March 2020, 06:13 AM

பூந்தமல்லி தொகுதி கொமக்கம்பேடு ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைக்க அரசு முன் வருமா?

முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்தபோது கால்நடை பாதுகாப்பு திட்டம் அமைக்கப்பட்டது. கிராமம் கிராமமாக கால்நடைகளுக்கு வைத்தியம் பார்க்கப்பட்டது.

கலைஞர் ஆட்சியில் திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்பாக செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கால்நடை பாதுகாப்பு திட்டம் குறைந்து வருகிறது அதை தீவிரப்படுத்த வேண்டும்.

- பூந்தமல்லி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி.

20 March 2020, 06:10 AM

இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருவள்ளூரில் பூண்டி ஒன்றியத்தில் அரசு கலைக்கல்லூரி அமைத்திட வேண்டும் என கேள்வி எழுப்பியதற்கு அமைச்சர் வாய்ப்பில்லை என தெரிவித்தார் .

ஆனால் தற்போது திருவள்ளூரில் தொகுதியில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், அதிகமாக உள்ளார்கள். கலைக் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்றால் சென்னை அருகே உள்ள கல்லூரிக்கு சென்று வருகிறார்கள்.

திருவள்ளூரில் பூண்டியில் அரசு நிலம் உள்ளது அங்கு கலைக்கல்லூரி அமைத்தால் மாணவர்களும் மக்களும் மிகவும் பயன் அடைவார்கள்.

- திருவள்ளூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன்

20 March 2020, 06:09 AM

தென்காசி வருவாய் அலுவலகம் திறந்து வைக்கும்போது முதல்வர் ஆலங்குளத்தில் கலைக்கல்லூரி அமைக்கப்படும் என தெரிவித்தார். எங்களுடைய மக்கள் கேட்பதெல்லாம் ஆலங்குளத்தில் கலை கல்லூரியாக இல்லாமல் அறிவியல் கல்லூரியாக அதை அறிவிக்க வேண்டும்.

ஆலடி அருணா அறக்கட்டளை மூலம் இலவச இடம் தர தயாராக இருக்கிறோம். அதேபோல ஆலங்குளம் வணிகர்களும் கட்டமைப்புகளுக்கு நிதி உதவியும் செய்து தரப்படும். அதனால் ஆலங்குளம் மையப்பகுதியில் அறிவியல் கல்லூரி அமைத்தால் மாணவர்களும் மிகவும் பயன் அடைவார்கள்.

- ஆலங்குளம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆலடி அருணா பூங்கோதை.

20 March 2020, 06:07 AM

முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருக்கும்போது பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைத்து கிராம மக்களுக்கும் அளித்திட குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டது.

2011ம் ஆண்டு வரை அனைத்து கிராமங்களிலும் குடிநீர் பாதுகாக்கப்பட்ட நீர்த்தேக்க தொட்டியில் கொடுக்கப்பட்டது. ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாக பழைய நீர்த்தேக்க தொட்டிக்கு புதுப்பிக்கப்பட்ட தொட்டி யாக மாற்றி அமைக்க ப்பட்டுகிறது.

இதனால் பழைய பைப்புகளில் குடிநீர் வருகிறது. இங்குள்ள மக்கள் கேட்பதெல்லாம் புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படவேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் அமைத்து தர வேண்டும்.

- ஆலந்தூர் தி.முக சட்டமன்ற உறுப்பினர் தாமு அன்பரசன்.

20 March 2020, 06:05 AM

விருதுநகர் ஒன்றியம் முத்துலிங்காபுரம் கிராமத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட அரசு முன்வர வேண்டும் .

பட்டாசு தொழில் அதிகமாக செய்யும் தொழிலாளர்கள் இருக்கும் அந்தப் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. எனவே புதிய நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர வேண்டும்.

விருதுநகர் தொகுதியில் உள்ள சங்கரலிங்கம் பகுதியில் குடிநீர் தொட்டி மிகவும் பழுதடைந்து உள்ளது. மாணவர்கள் அதற்கு கீழ் விளையாடுவதால் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே அதை பராமரித்து புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டி தரவேண்டும்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதல்வராக இருந்தபோது அனைத்து கிராமங்களுக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டது. அதேபோல் இன்று அமைச்சர் ஆய்வு செய்து குடிநீருக்காக நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும்.

- விருதுநகர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்.

19 March 2020, 09:53 AM

தி.மு.க வெளிநடப்பு!

மயிலம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மாசிலாமணி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசவிடாமல், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடர்ந்து பேசியதால் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரை பேசவிடாமல் இருந்ததற்கு திமுக வெளிநடப்பு செய்தனர்.

19 March 2020, 09:26 AM

கொரோனா வைரஸ் காரணமாக பிலிப்பைன்ஸ், ஈரான் நாடுகளில் சிக்கியுள்ள உள்ள மீனவர்களையும், மாணவர்களையும் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின்

19 March 2020, 07:08 AM

கொரோனாவால் கூலி வேலை செய்பவர்களுக்கு வருமானம் இல்லாததால் 500 ரூபாய் அரசு உதவி தொகை தர வேண்டும். வியாபாரிகளுக்கு 6 மாதங்களுக்கு அரசு tax holiday அறிவிக்க வேண்டும்.

- எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன்

19 March 2020, 06:25 AM

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா வைரஸ் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம்!

சிறு - குறு நடுத்தர தொழில் மூடுவதால் மிகப்பெரிய அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலை இழப்பு, வருமான இழப்பு, தொழில் இழப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது .

பிரிட்டன் பொருளாதார எமர்ஜென்சி கொண்டுவந்துள்ளது. அந்த நாட்டில் பிசினஸ் பேக்கேஜ் ரொக்க மானியமாக அளிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் தொழில் மானியம், வாடகை, மின்கட்டணம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்தாலி, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் சிறு தொழில் மானியம் அளிக்கப்பட்டுள்ளது. வரி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் ஒடிசா அரசு கொரோனா வைரஸை தடுக்க புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை தாங்களாகவே அரசிடம் பதிவு செய்து , தங்களை தானாகவே தனிமைப் படுத்திக் கொண்டால் 15 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. தமிழக அரசும் பொருளாதார சுகாதார பொது இழப்பை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவேண்டும்.

- எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்

19 March 2020, 06:11 AM

கொரோனா வைரஸ் ஆய்வுக்கு (test)தனியார் மருத்துவமனையில் 5,000 ரூபாய் வாங்கப்படுகிறது. இந்த ஆய்வுக்கு அரசு காப்பீட்டுத் திட்டத்திலோ அல்லது இன்சூரன்ஸ் வழங்கப்படுமா?

பதினைந்து நாட்கள் அனுமதிக்கப்படும் கொரோனா வைரஸ் ஆய்வில் இருப்பவர்களிடம் அரசு பணம் வாங்குகிறதா ?

- எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன்

19 March 2020, 06:02 AM

கீழ்பெண்ணாத்தூர் தேசிய நெடுஞ்சாலை உள்ள தாலுகா மருத்துவமனையின் தரம் உயர்த்தப்பட வேண்டும். அந்த மருத்துவமணையில் நாய் கடிக்கு ஊசி இல்லை என்று கூறிகிறார்கள். அந்த கிராமத்தில் அதிகமாக நாய் கடி ஏற்படுகிறது. எனவே நாய் கடி மருந்துகள் அதிகமாக இருப்பு வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கீழ்பெண்ணாத்தூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி

19 March 2020, 05:59 AM

உயர்கல்வி அமைச்சர் மானியக் கோரிக்கையின் போது சுழற்சி முறையில் கல்லூரி மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். அந்த அடிப்படையில் பாரதி மகளிர் கல்லூரியில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கிறார்கள்.

சுழற்சி முறையில் மேற்கொள்ளும் போது 10க்கு மேற்பட்ட வகுப்பறைகளும் கட்டித் தர வேண்டும்.அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

- தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி.

19 March 2020, 05:58 AM

கும்பகோணத்தில் மகளிர் கல்லூரி மிகவும் பழமை வாய்ந்தது. அண்ணா காலத்தில் தொடங்கப்பட்டது. இதில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

மிகவும் பழமை வாய்ந்த அந்தக் கல்லூரியில், நூலகம் இல்லாமல் இருக்கிறது. அதேபோல் அங்கு படிக்கும் மாணவர்கள் தங்கும் விடுதியில் கூடுதல் படுக்கையறை ஏற்படுத்தித் தர வேண்டும். நூலகத்திற்கு தனியாக கட்டிடம் கட்டித் தர வேண்டும்.

- கும்பகோணம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன்.

19 March 2020, 05:12 AM

துறைமுகம் தொகுதியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகளை அரசு அமைத்துத் தரவேண்டும்.

துறைமுகம் தொகுதியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் பேராசிரியர் துறைமுக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போது பல்வேறு கட்டமைப்பு வசதிகள் செய்து தந்துள்ளார்.

தற்போது இந்த பழமையான பாரதி மகளிர் கல்லூரியில் இரண்டு பிரிவு கட்டிடமாக இருக்கிறது. ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவுக்கு கடக்க வேண்டுமென்றால் சாலையை கடக்க வேண்டும். அதனால் விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் உடனடியாக நடை மேம்பாலம் கட்டி தர அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் பி.கே சேகர்பாபு

19 March 2020, 05:10 AM

தூத்துக்குடி தொகுதியில் உள்ள பழைய மீன்பிடி துறைமுகத்தில் LED மின் விளக்குகள் பொருத்த அரசு முன்வருமா?

அதேபோல், மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் பயன்பெறும் வகையில் சைக்கிள் ஷெட் அமைத்து தரவேண்டும்.

திரேஸ்புரத்தில் படகை கட்டி வைக்கும் இடத்தில் மண் திட்டுகள் ஏற்படுவதால் அதை சீர் செய்து ஆழப்படுத்தி, அதற்கான அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல இனிகோ கடற்கரையோரத்தில் தூண்டில் வலைகள் அமைத்து தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார் அரசு அமைத்து தர வேண்டும்.

- தூத்துக்குடி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன்.

19 March 2020, 05:07 AM

பழனி ஊராட்சி ஒன்றியத்தில் பாலசமுத்திரம் பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கூடுதல் கட்டிடம் கட்ட அரசு முன் வருமா?

அந்த பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இருக்கிறது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதல்வராக இருந்தபோது அனைவருக்கும் கல்வி திட்டத்தில் 3 வகுப்பறைகள் தரம் உயர்த்தப்பட்டது. தற்போது மீதியுள்ள வகுப்பறைகளில் 1930 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அது ஓட்டு கட்டிடமாக இருக்கிறது. எனவே மாணவர்கள் நலம்பெறும் வகையில் அந்த கட்டிடத்தை பெரிய கட்டிடமாக அமைத்து தர வேண்டும்.

பழனி நகராட்சி மையப்பகுதியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 500 மாணவர்கள் படிக்கும் பள்ளி உள்ளது. இது 1918 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டிடம். அதாவது 12 ஏக்கர் பரப்பளவு கொண்ட பள்ளி 10 ஏக்கர் பரப்பளவு இருந்தால் மினி ஸ்டேடியம் கட்டலாம் என்று சொல்லப்படுகிறது. அதனால் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இந்த பள்ளியில் மினி ஸ்டேடியத்தை அரசு கட்டி தர வேண்டும்.

- பழனி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில்குமார்.

19 March 2020, 05:04 AM

கூடலூர் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

கூடலூரில் வனப்பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக மின்சாரம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு மின்விநியோகம் அளிக்கப்பட வேண்டும்.

- கூடலூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி.

19 March 2020, 05:02 AM

நத்தம் தொகுதி சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம் ராஜக்காபட்டி ஊராட்சி குமாரபாளையத்தில் நூலகம் அமைக்க அரசு முன்வருமா?

சுமார் அங்கு ஐந்து சென்ட் நிலம் உள்ளது. அது இல்லை என்றாலும் தனியார் வாடகை கட்டிடமாக இருந்தாலும் மக்கள் அதை தர தயாராக உள்ளார்கள். அதனால் அரசு நூலகம் அமைக்க ஆவணம் செய்ய வேண்டும்.

- நத்தம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம்.

18 March 2020, 02:35 PM

கேரள-தமிழக முதல்வர்கள் பேசினால் நதிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்!

தண்ணீர் பிரச்னையில் தீர்வு எட்டப்படவில்லை. பிரச்னை வளர்ந்துகொண்டே போகிறது. நதிநீர் பிரச்னைக்கு பல குழுக்கள் அமைத்து பலமுறை பேசினாலும் அந்த பிரச்னை தொடர்ந்து கொண்டே போகிறது.

சிறுவாணி தண்ணீர் கோவைக்கு தரவேண்டும் என முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்தபோது கேரள அதிகாரிகளுடன் பலமுறை பேசியும்‌ பயன் அளிக்கவில்லை. அப்போது இருந்த கேரள முதலமைச்சர் நேரடியாக கலைஞரை சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, கோவைக்கு சிறுவாணித் தண்ணீர் வந்தது.

அதேபோல் தற்போது இரு மாநில முதல்வர்களும் பேசி நதிநீர் பிரச்னையைத் தீர்க்க வேண்டும். தற்போதைய கேரள முதல்வர் அமைதியானவர். அதனால் இரு முதல்வர்களும் பேசினால் நதிநீர் பிரச்னை ஒரு முடிவுக்கு வரும்.

- எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்

18 March 2020, 02:28 PM

பொதுப்பணித் துறையில் என்.எம்.ஆர் பணியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் வேலை செய்து வருவோரை பணி நிரந்தரம் செய்யவேண்டும்.

காட்பாடி தொகுதிக்குட்பட்ட காங்கேயநல்லூரில் சாலைகள் இரண்டு ஆண்டுகளாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை எந்த ஒரு சாலையும் போடப்படவில்லை. அந்தப் பணிகளை விரைந்து செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

காட்பாடியில் பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கு 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த பணிகளையும் மேற்கொள்ளப்படவில்லை. அதை விரைந்து தொடங்க வேண்டும்.

- எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்

18 March 2020, 07:06 AM

கடந்த 4 ஆண்டுகளாக முதல்வருக்கு கீழ் வரும் பொதுப்பணித்துறை குறித்து எந்த கேள்வியும் கேட்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது!

- தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு

18 March 2020, 05:38 AM

எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி : ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அமெரிக்காவில் மருந்து கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. அரசுக்கு இந்த செய்தி தெரியுமா? இதுகுறித்து அமைச்சர் விளக்கம் அளிப்பாரா?

அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் : இதுதொடர்பாக நேற்று எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட சர்வதேச கருத்தரங்கில் உலகம் முழுவதிலிருந்து 82 மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மருந்து கண்டுபிடிப்பதற்கான அந்த ஆராய்ச்சியின் தற்போதைய நிலை நிலை குறித்து தெரிவித்தனர்.

மேலும், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போது வரை தமிழகத்தில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் இவை அனைத்திற்கும் சேர்த்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் குணம் அடைந்துள்ளார். மேலும், தமிழக மருத்துவர்கள் ஒரு சில மருத்துவர்களுடன் இணைந்து கொரானா வைரஸுக்கு உரிய மருந்துகள் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும், கிங் இன்ஸ்டிடியூட், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று ஒரு கூட்டு ஆலோசனை குழு கூட்டம் நடைபெற உள்ளது. பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதன் விளைவாக விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்.

18 March 2020, 05:31 AM

ஆண்டிபட்டி தொகுதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட தொகுதி. இப்போது அந்தத் தொகுதியில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவிவரும் நிலையில் கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அங்கு கைகழுவக் கூட தண்ணீர் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. வருகின்ற தண்ணீரிலும் கூட கழிவுநீர் கலந்து உள்ளது.

தொகுதிக்குள் சென்றால் மக்கள் உள்ளே விடமாட்டார்கள். கூட்டுக் குடிநீர் மூலம் ஆண்டிப்பட்டி தொகுதியில் தண்ணீர் விட வேண்டும். தொகுதி மக்கள் கேள்வி கேட்காதவாறு ஆண்டிப்பட்டி தொகுதியில் தண்ணீர் பஞ்சத்தை போக்க அரசு முன்வருமா?

- ஆண்டிபட்டி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன்

18 March 2020, 05:09 AM

ராஜபாளையம் பகுதியில் மீனாட்சிபுரம் ஊராட்சியில் தேவி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும். அதற்காக பல முறை கோரிக்கைவிடுத்தும் இன்னும் அந்த குறுக்கு பாலம் அமைக்கப்படவில்லை அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதேபோல் ராஜபாளையம் இணைப்பு சாலை குறித்து 2016 சட்டமன்ற பேரவையில் நெடுஞ்சாலை துறை மானிய‌ கோரிக்கையின் போது முதலமைச்சர் கூறினார்.

ஆனால் இதுவரை அந்த அறிவிப்பு அறிவிப்பாகவே இருக்கிறது. இதனால் பல ஊர்களுக்கு செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் உடனே அங்கு இணைப்புச் சாலை அமைக்கப்பட வேண்டும்.

- ராஜபாளையம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் செள.தங்கபாண்டியன்

18 March 2020, 05:06 AM

சோழிங்கநல்லூர் தொகுதி கந்தன்சாவடி சந்தியப்பன் சாலை பகுதியில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே பழுதடைந்த மின் மாற்றிக்கு மாற்றாக புதிய மின் மாற்றி அமைக்க வேண்டும்.

அதேபோல், கந்தன்சாவடி பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதியில் குடியிருப்புகள் அதிகமாகி உள்ளதால், அந்த பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க, அப்பகுதி மக்களின் சார்பில் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

இது தொடர்பாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கோரிக்கை வைத்திருந்தேன். எனவே துணை மின் நிலையம் அமைக்க அமைச்சர் முன்வருவாரா?

- சோழிங்கநல்லூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ்

18 March 2020, 05:04 AM

செங்கல்பட்டு தொகுதிக்கு உட்பட்ட காட்டாங்குளத்தூர் கீரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நடுநிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தர கடந்த ஆண்டு கோரிக்கை விடுத்திருந்தேன். அதற்கான நிதியையும் ஒதுக்கி விட்டார்கள். இந்த ஆண்டாவது அந்த நடுநிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தர அமைச்சர் முன் வருவாரா

- செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கேள்வி

18 March 2020, 05:02 AM

உலகம் முழுவதும் மாரத்தான் போட்டிகள் அந்த நாடுகளின் முக்கிய பகுதிகளில் நடைபெறும். தமிழகத்தை பொறுத்தவரை மெரினா கடற்கரையில் மாரத்தான் போட்டி தி.மு.க ஆட்சி காலத்தில் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் மைதீன்கான் செயல்பாட்டில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

2017 ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு மெரினா கடற்கரையில் மாரத்தான் போட்டி நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. வெளிநாட்டில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் பல்வேறு மாரத்தான் வீரர்கள் மெரினா கடற்கரையின் அழகை ரசித்துக்கொண்டே மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக வருங்காலங்களில் மாரத்தான் போட்டிகள் நடத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் முன் வருவாரா ?

- சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் கேள்வி

17 March 2020, 10:20 AM

வேலையில்லா பட்டதாரிகள் தற்போது தமிழகத்தில் அதிகரித்து வருகின்றனர். அவர்கள் வேலைவாய்ப்பு பெற தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர்களுக்கு மானியத்துடன் கூடிய கால்நடைகளை கொடுத்து கால்நடை பராமரிப்பை ஊக்கப்படுத்தி வேலைவாய்ப்பை வழங்கவேண்டும். தற்போது வேலை கிடைப்பதற்கும் உத்தரவாதம் இல்லை. அதற்கு உதாரணம் தற்போது நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி முறைகேடு.

- சங்கராபுரம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன்

17 March 2020, 10:16 AM

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே சின்னசேலம் மற்றும் சங்கராபுரம் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசு முன்வர வேண்டும்.

அதேபோல் சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள் அமைக்கவேண்டும்.

- சங்கராபுரம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன்

17 March 2020, 07:58 AM

டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டிற்கு பொறுப்பேற்று அமைச்சர் ஜெயக்குமார் ராஜினாமா செய்யவேண்டும். முதலமைச்சர் அவர் ராஜினாமா செய்ய வலியுறுத்த வேண்டும்.

- தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன்

17 March 2020, 07:56 AM

தென் கடலோரப் பகுதிகளில் கடல் அரிப்பு அதிகமாக ஏற்படுகிறது. இந்த 4 வருடத்தில் தென் கடலோரப்பகுதி மீனவர்களை எப்போதாவது மீனவ துறை அமைச்சர் பார்க்க வந்துள்ளாரா?

எப்போது பார்த்தாலும் மைக்கை பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டுதான் இருக்கிறாரே தவிர அவர் துறை பற்றி பேசுவதும் இல்லை. மீனவர்கள் பாதிப்புக்குள்ளான பகுதிக்கு வந்ததும் இல்லை.

- தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன்

17 March 2020, 07:54 AM

முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்தபோது தொழில் வளத்தைப் பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதேபோல் குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ ஏவுகணை தளம் அமைக்க டெல்லியில் வலியுறுத்தி உள்ளோம். மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அவர்களும் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார். இஸ்ரோ ஏவுதளத்தை குலசேகரப்பட்டினத்தில் அமைத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி பெருகும். அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

- தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன்.

17 March 2020, 07:52 AM

வடக்கும் தேய்கிறது; தெற்கும் தேய்கிறது!

கால்நடை, பால் வளம், மீன்வளம் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், திருச்செந்தூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்றுப் பேசினார்.

அவர் பேசும்போது “உடன்குடியில் 13 சிறு பேருந்துகள் மட்டுமே உள்ளது. அரசுப் பேருந்துகள் அதிகப்படுத்தப்பட வேண்டும். திருச்செந்தூர் அரசு மருத்துவமனையை 80 பேர் படுக்கை கொண்டதாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருச்செந்தூர் செந்தில் முருகன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஓட்டுக் கட்டிடமாக இடியும் நிலையில் உள்ளது. அதை மாடி கட்டிடமாக அமைக்கவேண்டும்.

கடம்பா குளத்தை தூர்வாரி, ஆழப்படுத்தி விவசாயிகள் பயன் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வ.உ.சி துறைமுகம் இருக்கிறது. 4 வழிச்சாலை இருக்கிறது. ஆனால் இதுவரை தூத்துக்குடி மாவட்டம் தொழில் வளம் பெறவே இல்லை. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று சொல்வார்கள் ஆனால் தமிழகத்தில் வடக்கும் தேய்கிறது, தெற்கும் தேய்கிறது. தொழில் ரீதியாக எதுவுமே வளரவில்லை.” எனத் தெரிவித்தார்.

17 March 2020, 07:46 AM

வெடிகுண்டு கலாச்சாரம் அபாயகரமானது!

தமிழகத்தில் இரண்டு இடங்களில் வெடிகுண்டு வீசப்பட்டு மீண்டும் வெடிகுண்டு கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது. மதுரையில் முன்னாள் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. அதேபோல் எங்கள் மாவட்ட அமைச்சர் வீரமணி வீட்டிலும் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இது எவ்வளவு அபாயகரமானது என்பதை இந்த அரசு உணர வேண்டும். இந்த கலாச்சாரம் தொடர்ந்து நடப்பது வருந்தத்தக்கது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

- எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்

17 March 2020, 07:44 AM

சட்டமன்றத்தை தொடர்ந்து நடத்த வேண்டுமா என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

17 March 2020, 06:14 AM

முகக் கவசங்கள், போதுமான மருந்துகள் உள்ளிட்டவை மருத்துவர்களுக்கு வழங்கிட உறுதிப்படுத்த வேண்டும்.

போக்குவரத்து காவலர்கள் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

17 March 2020, 06:13 AM

நோய் கண்டறியும் ஆய்வகங்களை அதிகரிக்க வேண்டும்!

கொரோனா பிரச்னை தொடர்பாக அரசின் அறிவிப்பை வரவேற்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

“தி.மு.க சார்பில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறேன். நோய் கண்டறியும் ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

தனியார் ஆய்வகங்களை அதிகரித்து ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அதற்குரிய கட்டணங்களை அரசே நிர்ணயிக்க வேண்டும்.”

- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

17 March 2020, 06:11 AM

நேரமில்லா நேரத்தில் தி.மு.க சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.

17 March 2020, 06:11 AM

கேள்வி நேரம் நிறைவடைந்தது.

17 March 2020, 06:11 AM

வேப்பனஹள்ளி தொகுதியில் சூளகிரி ஒன்றியம் சூழலிலிருந்து உலகம் கிராமம் வரை விரைவுப் பேருந்து இயக்க அரசு முன் வருமா? அதேபோல சூளகிரியில் இருந்து ராயக்கோட்டைக்கு மாலை 6 மணிக்கு மேல் பேருந்து இல்லை. அதனால் அதைச் சுற்றியுள்ள 30 கிராம மக்கள் பெரும் பாதிப்படைகிறார்கள். எனவே இரவு 10 மணி வரை பேருந்துகள் இயக்கவேண்டும்.

சூளகிரியில் இருந்து சென்னைக்கு முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்தபோது விரைவுப் பேருந்து இயங்கி வந்தது. ஆனால் தற்போது அது குறைந்துள்ளதால் அதை இயக்க வேண்டும்.

- வேப்பனஹள்ளி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பி.முருகன்

17 March 2020, 06:07 AM

வந்தவாசி - சென்னை வழித்தடத்தில் சாதாரண பேருந்துகள் இயங்கி வருகின்றன. வந்தவாசியில் இருந்து தாம்பரத்திற்கும் இடையே 90 கி.மீ தொலைவு. இந்த பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் நெசவாளர்கள் அதிகமாக சென்னை வரும் காரணத்தால் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குளிர்சாதன பேருந்தை இயக்குவதற்கு அரசு முன் வருமா?

- வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார்

17 March 2020, 06:05 AM

பரமத்திவேலூர் தொகுதி மோகனூர் ஊராட்சி ஒன்றியம், மாடகாசம்பட்டி ஊராட்சி, எம்.ராசம்பாளையத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் 250 உறுப்பினர்கள் கொண்ட சங்கமாகும். 1974 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கூட்டுறவு சங்க கட்டிடம் 47 ஆண்டுகளுக்கு மேலாக மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாளொன்றுக்கு 300 லிட்டர் காலையும் மாலையும் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. மிகப் பழமையான கட்டடத்தில் இயங்கி வருவதால் இந்த கூட்டுறவு சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர அரசு முன் வருமா? அந்தப் பகுதியில் புதிய கட்டிடம் கட்ட போதுமான இடமும் உள்ள காரணத்தால் உடனடியாக அரசு பரிசீலிக்க வேண்டும்.

- பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி.

17 March 2020, 06:01 AM

பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி..

பரமத்தி வேலூர் தொகுதி மோகனூர் ஊராட்சி ஒன்றியம், மாடகாசம்பட்டி ஊராட்சி, எம்.ராசம்பாளையத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு 250 உறுப்பினர்கள் கொண்ட சங்கமாகும்... 1974 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கூட்டுறவு சங்க கட்டிடம் 47 ஆண்டுகளுக்கு மேலாக மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.. நாளொன்றுக்கு 300 லிட்டர் காலையும் மாலையும் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.. மிகப் பழமையான கட்டடத்தில் இயங்கி வருவதால் இந்த கூட்டுறவு சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர அரசு முன் வருமா என கேள்வி எழுப்பினார்.. அந்தப் பகுதியில் புதிய கட்டிடம் கட்ட போதுமான இடமும் உள்ள காரணத்தால் உடனடியாக அரசு பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தினார்..

17 March 2020, 06:00 AM

நெசவாளர்களுக்கு தொழில் பூங்கா

சுதந்திரம் பெற்றபோது குடியாத்தம் நெசவாளர்கள்தான் தேசியக்கொடியைச் செய்து செங்கோட்டைக்கு அனுப்பி வைத்த பெருமைக்குரிய நெசவாளர்கள். அந்த குடியாத்தம் பகுதியில் நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. அந்த நெசவாளர்களுக்கு தொழில் பூங்கா அமைப்பதற்கு அரசு முன் வருமா?

- எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி!

17 March 2020, 05:58 AM

திருவெறும்பூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி!

திருவெறும்பூர் தொகுதி கிளியூர் ஊராட்சி கீழவிளாங்குளத்தில் வசிக்கும் விவசாயிகளுக்கு சொந்தமான 100 ஏக்கர் விவசாய நிலத்தை அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அரசு ஆவன செய்யுமா?

17 March 2020, 05:57 AM

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஆனால் திருச்சியில் சாலை பணியைத் தவிர பூங்கா, நடைபாதை, ஜிம், உள்ளிட்ட பணிகள் மட்டுமே நடைபெறுகிறது. சாலைப் பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் சாலைபோடுவதற்கு அந்தத் திட்டத்தில் இடம் இல்லை என்று தெரிவிக்கின்றனர். எனவே திருச்சி தொகுதியில் பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக மாற்றித் தர அமைச்சர் முன் வருவரவேண்டும்.

- தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு

17 March 2020, 05:55 AM

தாம்பரம் தொகுதி சிட்லபாக்கம் பேரூராட்சி 15-ஆவது வார்டு சுந்தரம் காலனியில் உள்ள மின்மாற்றியை தரம் உயர்த்த வேண்டும். அதேபோல் சிட்லபாக்கம் பகுதியில் பல மின்மாற்றிகள் மாற்றும் பணி மிகவும் மந்தமாக நடந்து வருகிறது.

முதலமைச்சர் 110 விதியின் கீழ் தாம்பரம் மற்றும் பல்லாவரம் செயற்பொறியாளர் அலுவலகத்தை பிரித்து தாம்பரத்திற்கு தனியாக செயற்பொறியாளர் அலுவலகம் அமைப்பதாக அறிவித்தார். அதை விரைந்து தொடங்க வேண்டும். மக்களின் குறைகளை தெரிவிக்க வசதியாக விரைந்து நடவடிக்கை எடுக்க அரசு முன்வருமா?

- தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா.

17 March 2020, 05:53 AM

மன்னார்குடி தொகுதி வடபாதியில் உள்ள நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த அரசு ஆவன செய்யுமா? ஏனென்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வாழும் பகுதி, அவர்களில் மிகவும் படித்தவர்கள் நிறைந்த பகுதியாகவும் உள்ள காரணத்தால் அந்த நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். இதேபோல் கள்ளிக்கோட்டை மற்றும் நீடாமங்கலம் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் நடுநிலைப் பள்ளிகளில் வகுப்பறையில் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகின்றன. ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயின்று வருவதால் உடனடியாக புதிய கட்டிடங்களை கட்டித் தர அரசு முன் வருமா?

- மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா.

16 March 2020, 10:23 AM

எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்வி!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக LKG முதல் 5 வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் சேவைகளில் இருக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கு இந்த விடுமுறை பெருந்துமானதா?

முதல்வர் பதில்: இன்று‌ மாலை 4 மணிக்கு சட்டபேரவை முடிந்த பிறகு. சுகாதார துறை அமைச்சர், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்த பிறகு இதுக்குறித்து கூறப்படும்.

16 March 2020, 10:20 AM

மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய சிங்காநல்லூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் 2010ம் ஆண்டு தி.மு.க மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அந்த பணிகள் அப்படியே முடங்கி கிடக்கிறது. 2020ம் ஆண்டு வந்துவிட்டு இன்னும் அப்பணிகள் தொடங்காப்பட்டவிலை.

அதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர், ரயில் மேம்பாலம் என்பதால் நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சினை இருப்பதால் அதுவும் நீதிமன்றத்தில் வழக்கு இப்போது தான் முடிவடைந்தது. விரைவில் பணிகள் முடிக்கப்படும் என்றார்.

16 March 2020, 08:09 AM

தமிழகம் முழுவதும் தரம் இல்லாத குப்பைத்தொட்டியை கொள்முதல் செய்த காரணத்தால் அரசுக்கு 92கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

- எதிர்க்கட்சி கொறடா சக்கரபாணி குற்றச்சாட்டு

16 March 2020, 08:03 AM

LED விளக்குகள் 5 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் 3 மாதங்களில் பழுது அடைக்கிறது. பல கிராமங்களில், ஊராட்சி மன்றங்களிலும் ஒன்றியத்தில் பல இடங்களில் LED விளக்கு இல்லாமல் இருட்டாக இருக்கிறது. LED விளக்கு ஒப்பந்தம் ஒரே நிறுவனத்திற்கு அரசு தந்துள்ளது.

- எதிர்க்கட்சி கொறடா சக்கரபாணி

16 March 2020, 08:00 AM

100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு ஊதியங்கள் வங்கி மூலமாக செலுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 100 நாள் வேலை திட்டத்தில் பணி புரிபவர்கள் கிராமத்து பெண்கள், முதியவர்கள்.

அவர்களுக்கு வங்கியில் சென்று பணம் எடுப்பது எப்படி என்று தெரியாது. அன்னாடம் காட்சிகளாக இருக்கும் அவர்களுக்கு வங்கிகளில் பணம் செலுத்தாமல், கையில் கொடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்

16 March 2020, 07:58 AM

உள்ளாட்சித் துறை அமைச்சரும், முதலமைச்சரும் திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திண்டுக்கல் புறவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. முறையாக நிதி ஒதுக்காத காரணத்தால் பாதியில் நிற்கும் அந்தப் பணியின் காரணமாக பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு 10-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். எனவே அந்தப் பணியை விரைந்து அமைத்து தர வேண்டும்.

- எதிர்க்கட்சி கொறடா சக்கரபாணி கோரிக்கை

16 March 2020, 07:51 AM

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் நகரப் பகுதியில் கடந்த 9ம் தேதி முதல் வாந்தி, பேதி உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவி வந்துள்ளது.

திருவாரூர் நகர பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் குடிநீர் பருகியதால் தான் இந்த நோய்த்தொற்று ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் இந்த நோய் தொற்றை தடுப்பதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

- திருவாரூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் நேரம் இல்லா நேரத்தில் கேள்வி எழுப்பினார்.

16 March 2020, 07:49 AM

கொரோனா விஸ்வரூபமெடுத்து எல்லா மாவட்டத்திலும் பரவியுள்ளது. எல்லா இடத்திலும் இதே பேச்சாக உள்ளது. கேரள சட்டமன்றத்தில் தள்ளி வைத்துள்ளார்கள்.ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தலை ஆறு மாதம் தள்ளி வைத்து உள்ளார்கள்.

ஆனால், தமிழகத்தில் பள்ளிக் கூடத்திலே விடுமுறை அளிப்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு 14 நாட்கள் தங்கவைத்து பரிசோதனை செய்து அனுப்ப வேண்டும். சென்னையில் மட்டும் செய்யாமல் கிராமங்களிலும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

- எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்.

16 March 2020, 07:47 AM

“இஸ்லாமியத் தலைவர்களை மட்டும் தலைமைச் செயலாளர் அழைத்துப் பேசியிருப்பது, ஒரு கேள்விக்குறியாக அமைந்திருக்கிறது. ஏனென்றால் CAA-வால் பாதிக்கப்படக் கூடியது இஸ்லாமியப் பெருமக்கள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த மக்கள்.

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் இந்த சட்டத்தால் பல்வேறு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதலமைச்சர் கூட்டி, CAA, NRC, NPR குறித்து விவாதித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.”

- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

16 March 2020, 07:45 AM

இந்திய குடியுரிமை சட்டம் குறித்த அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் வலியுறுத்தல்!

16 March 2020, 07:40 AM

“ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு தனிச் சிறப்பு உண்டு, அதேபோல தமிழகத்தில் கலை சிற்பம் நிறைந்த கோயில்கள் அதிகமாக உண்டு. அந்த இடங்களில் தனி சுற்றுலா அமைக்க சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும். பெரும்பாலான மக்களுக்கு கலை சிற்பங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கும் வெளிநாட்டினர் கோவில்களுக்கு வரும்போது இதுகுறித்து அறிந்துகொள்வதற்கும் வசதியாக தனி சுற்றுலா ஏற்படுத்தவேண்டும்.”

- திருச்சுழி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு

16 March 2020, 07:38 AM

துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் டேவிட்சன் சாலையில் அமைந்துள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடத்தில் உள்ளதால் அந்த கட்டிடம் சிதலமடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் விபத்து ஏற்படக்கூடிய சூழலில் உள்ளது.

கடந்த ஆண்டு இது தொடர்பாக தெரிவித்த போது அமைச்சர் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். வேண்டுமானால் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை ஒதுக்கி தர தயாராக உள்ளோம். சார்பதிவாளர் அலுவலகத்தை புதிதாக கட்டித்தர அமைச்சர் முன் வருவாரா?

- துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு

16 March 2020, 07:34 AM

அவுரி தழை பதப்படுத்தும் ஆய்வகம் வேண்டும்!

செஞ்சி தொகுதிகள் விவசாயிகள் நிறைந்த பகுதிகளில், குறைந்த நீர் கொண்டு 3000 ஏக்கர் பரப்பில் மருத்துவ குணம் கொண்ட அவுரி தழை பயிரிட்டு வருகிறார்கள். அவுரி தழை பதப்படுத்தும் ஆய்வகம் அமைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் அதிகரிக்கும்.

தமிழகத்தில் அவுரி தழை பதப்படுத்தும் ஆய்வகம் இல்லை. எனவே பதப்படுத்தும் ஆய்வகம் கொண்டு வர வேண்டும்.

- செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மஸ்தான்

16 March 2020, 07:33 AM

திருநெல்வேலி அரசு மருத்துவமனையை மேம்படுத்தவேண்டும்!

திருநெல்வேலி மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் குடிநீர் மற்றும் பொது சுகாதார வளாக வசதி இல்லாததால் நோயாளிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

மகப்பேறு பிரிவில் உறவினர்கள் தங்கும் இடத்திலும் கழிப்பறை வசதி என்பது ஏற்படுத்தித் தர அரசு முன் வருமா?

இதேபோல் அரசு மருத்துவமனையில் வெந்நீர் கிடைப்பது மிகவும் கஷ்டமாக இருக்கக்கூடிய சூழல் உள்ளது. பேட்டரி கார் அந்த மருத்துவமனையில் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது.

என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளேன். அமைச்சர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையை கூடுதலாக கவனம் செலுத்தி மேம்படுத்துவதற்கு முன்வருவாரா?

- பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டி.பி.எம்.மைதீன்கான் கேள்வி!

16 March 2020, 07:31 AM

நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட முன்வரவேண்டும்!

“ஒரத்தநாடு தொகுதி, ஒரத்தநாடு வட்டம் பரங்கிவெட்டிக்காடு கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட அரசு முன்வரவேண்டும்.

முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்தபோது இலவச மின்சாரம் தந்து கொண்டிருந்தபோது நெல் கொள்முதல் கழகம் என அமைக்கப்பட்டு பல ஆயிரம் விவசாயிகள் பயனடைந்தார்கள்.

ஆனால் தற்போது பல்வேறு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லை. அதற்கான சொந்த கட்டிடம் கட்டினால் விவசாயிகள் இழப்பீடு இல்லாமல், விவசாயிகள் கஷ்டப்படாமல் இருப்பார்கள். எனவே உடனடியாக அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து தர வேண்டும்.”

- ஒரத்தநாடு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன்

16 March 2020, 07:29 AM

“கே.வி.குப்பம் தொகுதி என்னுடைய பழைய தொகுதி. என் சொந்த ஊரும் கூட. கே.வி.குப்பத்தில் இருந்து காட்பாடி குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்றால் 30 கிலோமீட்டர் தொலைவிற்கு செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

நான் கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது பத்துக்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளை கொண்டு வந்தேன்.‌ தற்போதைய வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்துள்ள நிலையில் கே.வி.குப்பம் தொகுதிக்கு என தனியாக ஒரு கல்லூரி அமைக்க வேண்டும். ஏனென்றால் பெரும்பாலான பெண் பிள்ளைகள் மேல்நிலைப் பள்ளி படிப்பை முடித்தவுடன் 30 கிலோ மீட்டர் சென்று கல்லூரிக்குச் செல்வது முடியாத சூழல் உள்ளதால் அரசு கல்லூரி அமைத்துத் தர வேண்டும்” என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனத் தெரிவித்தார்.

மீண்டும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், “கே‌.வி.குப்பத்தில் இருந்து வாலாஜா செல்வதற்கு 30 கிலோமீட்டர், குடியாத்தம் செல்வதற்கு 70 கிலோமீட்டர். இப்படியான சூழல் உள்ளதால் அமைச்சர் ஒரு நேர்மறையான பதிலை தெரிவிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

16 March 2020, 07:25 AM

கடந்த வாரம் சட்டப்பேரவையில் கொரோனா வைரஸ் குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசுகையில் சட்டப்பேரவையில் முறையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரினார்.

இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகம் முழுவதும் லைசால் கலந்த தண்ணீரை அடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து இன்று சட்டப்பேரவை வளாகத்தின் நுழைவாயிலில் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு காய்ச்சல் இருக்கிறதா என சுகாதார துறை சார்பில் பரிசோதனை நடத்தினர்.

16 March 2020, 05:46 AM

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை!

கொரோனா வைரஸ் பரவி வருகின்ற சூழலில், தமிழக சுகாதாரத்துறை சார்பில் தலைமைச் செயலக சட்டமன்ற நுழைவு வாயிலில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் , எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது.

16 March 2020, 05:44 AM

மின்மாற்றி அமைக்க அரசு முன் வருமா?

திருவள்ளூர் தொகுதி திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம் அரிச்சந்திராபுரம் தீன் நகரில் தனியாக மின்மாற்றி அமைக்க அரசு முன் வருமா?

திருவாலங்காட்டில் உள்ள சக்கரை ஆலை பகுதியில் 110 கேள்வியில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தீர்கள். ஆனால் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை.

இதேபோல் திருவாலங்காடு சுற்றியுள்ள ஊராட்சியில் பல்வேறு இடங்களில் அடிக்கடி பழுது ஏற்படும் மின்மாற்றிகளை மாற்றி அமைக்க அரசு முன் வருமா?

- திருவள்ளூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் கேள்வி!

16 March 2020, 05:40 AM

இன்றைய மானிய கோரிக்கை..

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சிறப்பு திட்ட செயலாக்கத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் தி.மு.க சார்பில் எதிர்க்கட்சி கொறடா சக்கரபாணி மற்றும் ராணிப்பேட்டை காந்தி ஆகியோர் விவாதத்தில் பங்கேற்கின்றனர்.

13 March 2020, 08:41 AM

அ.தி.மு.க அரசின் மது விலக்கு கொள்கை இதுதானா?

13 March 2020, 08:36 AM

பெரும் குற்றங்கள் நடைபெறுவதற்கு முதல் காரணம் மது பானம் தான். மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு என வாசகங்கள் எழுதிவிட்டு தமிழ்நாடு அரசே மதுபானங்களை விற்பனை செய்வது என்னும் கொள்கையை கொண்டு வந்தது அ.தி.மு.க அரசு.

13 March 2020, 06:50 AM

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் பங்கேற்பு!

13 March 2020, 06:48 AM

சட்டமன்றத்தில் ஏன் தெரிவிக்கவில்லை?

சட்டமன்றம் நடக்கும் போது சட்டமன்றத்தில் தெரிவிக்க வேண்டிய கருத்தை அமைச்சர் ஏன் வெளியில் சொல்கிறார் ? சட்டமன்றத்தில் ஏன் தெரிவிக்கவில்லை?

மூன்று தினங்களுக்கு முன்னரே மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என ஏன் அவர் விளக்கம் அளிக்கவில்லை? - எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி!

13 March 2020, 06:30 AM

என்.பி.ஆர் நிறுத்தி வைக்கவேண்டும் என்று பல முறை வலியுறுத்தியும் ஏன் இந்த அரசு கொண்டு வர தயக்கம் காட்டுக்கிறது! - மு.க.ஸ்டாலின் கேள்வி

“ஏப்ரல் 1ம் தேதி முதல் NPR கணக்கெடுப்பை தொடங்கவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் திடீரென தற்காலிகமாக NPR கணக்கெடுப்பை நிறுத்தி வைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார். எனில், சட்டமன்றத்தில் NPR-க்கு எதிராக ஒரு தீர்மானத்தை ஏன் கொண்டுவரக்கூடாது என்பதே எங்களுடைய கேள்வி. - சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்

13 March 2020, 05:09 AM

பேரவையில் தி.மு.க வலியுறுத்தல்!

செஞ்சியில் உள்ள கஞ்சம்பட்டி, அனந்தபுர பெண்கள் நடுநிலை பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த எப்போது அரசு முன்வரும்?

- தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மஸ்தான் பேரவையில் கேள்வி.

பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறி வருகிறது. அதனை சீரமைக்க அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும்?

- தி.மு.க எம்.எல்.ஏ. இ.கருணாநிதி கேள்வி

13 March 2020, 05:03 AM

இன்றைய கூட்டத்தொடரில் மதுவிலக்கு மீது விவாதம்!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான இரண்டாவது அமர்வின் கூட்டத்தொடர் தொடங்கியது. இன்றைய கூட்டத்தொடரில் மதுவிலக்கு, மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

12 March 2020, 01:14 PM

பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு தங்கம் தென்னரசு பதிலடி!

இன்றைய கல்வி முறையில் ஒருவர் கூட சிறந்த மருத்துவராகவோ பொறியாளராகவோ ஆகமுடியவில்லையே என இந்தியாவே தமிழகத்தை திரும்பிப் பார்க்கிறது என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

12 March 2020, 12:21 PM

ஒரு புத்தகத்தை எடுக்கவே ஆசிரியர்களுக்கு நாட்கள் போதாது!

+2 வகுப்பில் கணக்கு புத்தகங்களில் இரண்டு பிரிவுகளாக உள்ளது. ஒரு கணக்கு புத்தகத்தை எடுப்பதற்கு 147 வகுப்புகள் தேவை. ஒரு புத்தகத்தை எடுக்கவே ஆசிரியர்களுக்கு நாட்கள் போதாதே என ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் கேள்வி எழுப்பினார்.

12 March 2020, 10:48 AM

RSS-ஐ சார்ந்தவர்களை நியமிப்பது நியாயமா?

12 March 2020, 08:17 AM

உங்களுடைய நிலை என்ன என்றுதான் கேட்கிறோம்! - எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

12 March 2020, 08:02 AM

சட்டப்பேரவையில் கொரோனா வைரஸை தடுக்க என்ன நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

12 March 2020, 07:32 AM

கொரோனா வைரஸ் குறித்து தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்!

கொரோனா வைரஸ் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் கொண்டு வந்தனர்.

தி.மு.க சார்பில் பேசிய தி.மு.க திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், “டோக்கியோவில் 1,300 பேர் கொண்ட கப்பலில் சிக்கியவர்களில் இதில் 6 பேர் இந்தியர்கள், இரண்டு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆனால், அவர்களுக்கு பாதிப்பு இல்லாத போதும் அவர்களின் குடும்பத்தார் அச்சம் ஏற்பட்டு என்னிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி அவர்களை மீட்க எடுத்த முயற்சி எடுத்தார். மிழகத்தில் முதல் முறையாக கொரானாவிற்கு எதிராக குரல் கொடுத்தது தி.மு.க தான்” என்று தெரிவித்தார்.

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க முகக் கவசங்களின் விலையை கட்டுப்படுத்த அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். பிரச்னையின் காரணமாக பல்வேறு தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்காக சீனாவில் படிக்கும் மாணவர்களின் நிலை என்ன என்பதைக் குறித்து விளக்கம் அளிக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

12 March 2020, 07:23 AM

மர டிப்போ அமைக்க அரசு முன் வர வேண்டும்!

கரும்புச் சக்கை கொண்டு காகிதம் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் தொடங்கினோம். பின்பு சவுக்குக் கூழை வைத்து ஆலைகள் இயங்கி வந்தன.

கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு திருவண்ணாமலையில் சவுக்கு வைத்து காகித ஆலைகள் இருந்தாலும் டீசல் அதிகமாக செலவு ஏற்படுகிறது. எனவே கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மையப்பகுதியில் மர டிப்போ அமைக்க அரசு முன்வரவேண்டும். இதனால் விவசாயிகள் பயன் அடைவார்கள்.

- தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு

12 March 2020, 07:20 AM

தமிழக அரசு புதிதாக காகித ஆலை அமைக்க அரசு முன்வருமா?

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்துக்கும் மேற்பட்ட தனியார் காகித ஆலைகள் மடத்துக்குளம் பகுதியில் இயங்கி வந்தன. மத்திய அரசின் ஜி.எஸ்.டி, பண மதிப்பிழப்பு, காகித இறக்குமதி, வங்கி நடைமுறைகள் என பலவிதங்களில் பாதிப்பு ஏற்பட்டு இன்றைக்கு பல நிறுவனங்கள் மூடப்பட்டு தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். எனவே அந்தத் தொழிலாளர்களை காக்கும் வண்ணம் தமிழக அரசு புதிதாக காகித ஆலை அமைக்க அரசு முன்வருமா?

- மடத்துக்குளம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் கேள்வி

12 March 2020, 06:51 AM

கொல்லிமலையில் மகளிர் விடுதி!

கொல்லிமலையில் மகளிர் விடுதி மட்டும் இல்லாமல் தமிழக அரசு தங்கும் விடுதிகள் அமைக்க வேண்டும் என எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர், முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.

12 March 2020, 06:48 AM

மீன்களில் பார்மலின் என்ற ரசாயனப் பொருள் கலக்கப்படுவதா?

செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 16 மீனவர்கள் கிராமங்கள் உள்ளன. ஏழை எளிய மீனவர்கள் வாழும் இப்பகுதியில் ஒரு மீன் இறங்கும் தளமும் அதேபோல் கடல் அரிப்பு அதிகமாக ஏற்படுவதால் அவர்களின் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

அதுமட்டுமல்லாமல் அங்கு விற்கப்படும் மீன்களில் பார்மலின் என்ற ரசாயனப் பொருள் கலக்கப்படுவதாக ஒரு தகவல் வந்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் விளக்கம் அளிப்பாரா ? - செய்யூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசு.

12 March 2020, 06:45 AM

இனிகோ நகர் கடல் அரிப்பு - தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்!

தூத்துக்குடி இனிகோ நகர் கடல் அரிப்பு அதிகமாக இருப்பதாகவும், மீனவர்களுடைய படகுகள் சேதம் அடைவதாக, அங்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்றும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் கோரிக்கை

12 March 2020, 06:44 AM

பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கட்டித் தர அரசு முன் வருமா?

நத்தம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு உள்ளது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் மரத்தடியில் பயிலும் சூழல் உருவாகியுள்ளது. அதேபோல் நத்தம் வட்டார கல்வி அலுவலகம் இடியும் சூழ்நிலையில் உள்ளதால் இந்த இரு கட்டிடங்களையும் கட்டித் தர அரசு முன் வருமா? - நத்தம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம்

12 March 2020, 06:44 AM

மாநகராட்சி மூலதன நிதியிலிருந்து அரசு பள்ளிகளுக்கு நிதி வழங்கவேண்டும்!

சென்னையில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளுக்கு மாநகராட்சி நிதி நிலையிலிருந்தே மூலதன நிதியில் கட்டடங்கள் கட்டப்படுவது தொடர்ந்து நடைமுறையில் இருந்தது.

ஆனால் தற்போது அந்தந்த சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டிடங்களை கட்டுவதற்கு நிதி ஒதுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. முன்பு இருந்தது போலவே மாநகராட்சி மூலதன நிதியிலிருந்து அரசு பள்ளிகளுக்கு நிதி வழங்குவதற்கு அமைச்சர் முன் வருவாரா? - சைதாப்பேட்டை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன்.

12 March 2020, 06:40 AM

பகுதி நேர நியாய விலை கடைகள் மலைப்பகுதிகளில் திறக்க அரசு முன் வருமா?

ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரணாம்பட்டு ஒன்றியம் மற்றும் மாதனூர் ஒன்றிய பகுதிகளில் மலைவாழ் மக்கள் மலைப் பகுதியில் அதிகமாக வசிக்கின்றனர். மலைவாழ் மக்கள் நான்கு கிலோ மீட்டர் தூரம் வந்து நியாயவிலைக் கடையில் பொருட்களை வாங்கும் சூழல் ஏற்படுவதால் மலைவாழ் பகுதியில் உள்ள மக்கள் பயன்பெற பகுதி நேர நியாய விலை கடைகள் மலைப்பகுதிகளில் திறக்க அரசு முன் வருமா? - ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன்.

12 March 2020, 06:36 AM

பொது வினியோக கடைகளில் மாதத்தில் அனைத்து நாட்களும் பொருட்கள் கிடைப்பதற்கு இந்த அரசு ஆவன செய்யுமா?

பொது வினியோக கடைகளில் அரிசி மற்றும் இதர பொருட்களை 100 சதவிகிதத்திற்கு 70 சதவிகித பொருட்கள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் மாதத்தில் முப்பது நாட்களில் மூன்று முதல் ஐந்து நாட்கள் மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகிறது. 90 சதவீத பொருட்களை கொடுப்பதற்கும், மாதத்தில் அனைத்து நாட்களும் பொருட்கள் கிடைப்பதற்கு இந்த அரசு ஆவன செய்யுமா? - திருவிடைமருதூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கோவி செழியன்

12 March 2020, 06:36 AM

நியாய விலைக் கடையை பிரிக்க அரசு ஆவன செய்யுமா ?

தர்மபுரி தொகுதி சீவலகாரன்கொட்டாய் பகுதியில் 641 குடும்ப அட்டைகள் உள்ளது. அதை சுற்றியுள்ள மக்கள் மூன்று கிலோமீட்டருக்கு தூரம் நடந்து வரும் காரணத்தால் இந்த கடையை பிரித்து அந்த பகுதி மக்கள் பயன் பெற நியாய விலைக் கடையை பிரிக்க அரசு ஆவன செய்யுமா ? - தர்மபுரி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி

12 March 2020, 04:35 AM

சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது!

11 March 2020, 07:29 AM

எனது தோட்டத்தில் புகுந்த 15 யானைகள்!

யானைகள் வருவது என்பது எல்லா ஊர்களிலும் வாடிக்கையாகிவிட்டது. வேலூர் மாவட்டத்தில் எனது தோட்டத்தில் 15 யானைகள் புகுந்து தோட்டத்தில் இருந்த அனைத்து செடிகளையும் மரங்களையும் உரித்து விட்டுச் சென்றுவிட்டன. தொடர்ந்து இதுபோல் நடப்பதால் பயிர்கள் நாசமாகிறது.

நியாயப்படி தமிழக அரசு எனக்குத்தான் அதிகப்படியான நஷ்டஈடு கொடுக்க வேண்டும். இதுபோல் யானைகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.

11 March 2020, 06:52 AM

1,583 யானைகள் இறந்தது ஏன்?

2020-2021 வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் மானிய கோரிக்கை விவாதத்தில் தி.மு.க சார்பில் தா.மோ.அன்பரசன் பேசுகையில்,"ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆதம்பாக்கம் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி 3.48 கோடி ரூபாய் செலவில் ஏரியை தூய்மைப்படுத்தி பூங்கா அமைத்து நடைபாதை அமைக்க நிதி ஒதுக்கியும் இதுவரை அந்த பணி தொடங்கப்படாமல் உள்ளது.

இதேபோல், வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டு நங்கநல்லூர் அருகே 600 மீட்டர் பணி மட்டுமே முடிவடையாத சூழலில் இருந்தது.

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டு காலம் ஆகியும் இன்னும் அந்த பணி தொடங்கப்படாமல் உள்ளது. உடனடியாக அந்தப் பணியைத் தொடங்கி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்" என வலியுறுத்தினார்.

மேலும் வனத்துறை தொடர்பாக பேசிய அவர், 2012 ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் தமிழகத்தில் இயற்கையைக் காக்கும் வகையில் 19 ஆயிரத்து 75 ஏக்கர் பரப்பளவில் 38 கோடி ரூபாய் செலவில் தேக்கு மரம் நடப்படும் எனவும் அறிவித்தார்.‌ தற்போது எத்தனை மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளது என்பதை அமைச்சர் தெரிவிப்பாரா என கேள்வி எழுப்பினார்.

இதே போல் யானைகள் கணக்கெடுப்பில் 2005 ஆம் ஆண்டு 3867 யானைகள் இருப்பதாக கொள்கை விளக்க புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது 2019ஆம் ஆண்டு 2767 யானைகள் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1583 யானைகள் இறந்தது ஏன் ? சமூக விரோதிகள் வனப் பகுதியில் முகாமிட்டு உள்ளதாகவும், போதிய உணவு மற்றும் நீர் இல்லாத காரணத்தினாலும் ரயில்களில் மோதி அடிபட்டதால் யானைகள் இறப்பதாக தெரிகிறது.

விபத்துகளில் யானைகள் இழப்பது என்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் யானைகள் முகாம் நடத்தி காப்பாற்றும் தமிழக அரசு, யானை மீது கவனம் செலுத்தாதது அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். எனவே சமூக விரோதிகளை தடுத்து நிறுத்தி யானைகளை காப்பாற்ற அரசு முன்வர வேண்டும்". என தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட திருப்போரூர் பகுதியில் வன சாலைகள் சீர் குலைந்த இருப்பதாகவும், அந்தப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களும் இந்த சாலையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என வனத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

11 March 2020, 06:46 AM

தமீம் அன்சாரி தர்ணா போராட்டம்!

சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டம் எதிராக தீர்மானம் நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து மனித நேய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினர் தமீம் அன்சாரி சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டம்.

11 March 2020, 06:44 AM

#CAA, #NRC எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரி பேரவையிலிருந்து தி.மு.க வெளிநடப்பு!

#LIVEUpdate | கொரோனா முன்னெச்சரிக்கை : சட்டப்பேரவை நாளையுடன் நிறைவு! #TNAssembly
11 March 2020, 06:31 AM

காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி வெளிநடப்பு.

11 March 2020, 06:29 AM

NPR க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாததைக் கண்டித்து தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு!

11 March 2020, 06:29 AM

தமிழகத்தில் NPR செயல்படுத்தப்படாது என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா?

#LIVEUpdate | கொரோனா முன்னெச்சரிக்கை : சட்டப்பேரவை நாளையுடன் நிறைவு! #TNAssembly

தமிழகத்தில் NPR செயல்படுத்தப்படாது என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

11 March 2020, 05:53 AM

குளிர்பதனக் கிடங்கை அமைக்க அரசு முன் வருமா?

திண்டுக்கல் மாவட்டம் என்பது தமிழகத்தில் மிகப் பெரிய காய்கறி மார்க்கெட் உள்ள பகுதியாகும். இந்த காய்கறி சந்தையில் இருந்து அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், போன்ற மாநிலங்களுக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் கொண்டுவரும் காய்கறிகளை லாரிகளில் அனுப்பி வருகின்றனர்.

விவசாயிகளுக்கு கட்டுப்படி இல்லாத விலை ஏற்படும்போது காய்கறிகளை அழிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே திண்டுக்கல் மாவட்ட சந்தை அருகே 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கை அமைக்க அரசு முன் வருமா?

- தி.மு.க எதிர்க்கட்சி கொரடா சக்கரபாணி கேள்வி!

11 March 2020, 05:49 AM

நியாய விலைக் கடை திறக்க வேண்டும்!

கூட்டுறவுத் துறை சார்பில் மூன்று வருடத்துக்கு முன்னர் சென்னகுணம் ஊராட்சி பகுதியில் நியாய விலைக் கடை திறக்க வேண்டுமென அமைச்சரிடமும் ஆட்சியரிடம் இதே சட்டமன்றத்திலும் வலியுறுத்தி வருகிறேன். 3 வருடமாக அந்த கடை திறக்கப்படாமல் உள்ளது.

அதேபோல, அந்தப் பகுதியில் பகுதிநேர நியாய விலை கடை திறக்க அரசு முன்வர வேண்டும். அந்த பகுதி மக்கள் உணவுப் பொருட்கள் கிடைக்காமல் அல்லல் பட்டுக்கொண்டு இருப்பதால் எனது இரண்டு கோரிக்கைகள் குறித்தும் சட்டமன்றத்திலேயே அறிவிப்பு வெளியிட அமைச்சர் முன் வருவாரா? - திருக்கோவிலூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி கேள்வி

11 March 2020, 05:43 AM

மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் நடத்தப்படுமா?

பல்லாவரம் தொகுதியில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையர் அலுவலகம் அமைக்க அரசு முன்வருமா?

மத்திய அரசு கொண்டு வந்த ஒரே நாடு, ஒரே ரேஷன், கார்டு திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் எப்போது தொடங்கப்படும்?

நுகர்பொருள் வழங்கல் துறை சார்பில் பெயர் நீக்கல், சேர்த்தல், இட மாறுதல் உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்த முகாம்கள் நடத்தப்படும். ஆனால் கடந்த 6 மாதத்துக்கு மேலாக இந்த முகாம்கள் நடத்தப்படாமல் உள்ளது.‌ தி.மு.க ஆட்சியைப் போல் தொடர்ந்து மக்களின் குறைகளை தீர்க்க இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுமா ?

- பல்லாவரம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி.

11 March 2020, 05:37 AM

தொழிற்சாலைகளும் கல்லூரிகளும் அமைக்க நிதி ஒதுக்க வேண்டும்!

திண்டிவனம் பின் தங்கிய மாவட்டம். இங்கு அரசு சார்ந்த தொழில் நிறுவனங்களும் கல்லூரிகளும் இல்லை. அதனால் இந்த தொழிற்சாலைகளும் கல்லூரிகளும் அமைக்க இந்த நிதியாண்டிலேயே நிதி ஒதுக்க வேண்டும்.

திண்டிவனம் தொகுதி மரக்காணம் பகுதியில் அயோடின் கலந்த உப்பு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க அரசு முன்வருமா?அதனால் பின்தங்கிய மக்களுக்கு வேலை வாய்ப்பு, வாழ்வாதாரம் பெருகும், மக்களுக்கு சுகாதாரமான உப்பு கிடைக்கும் என திண்டிவனம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பெ.சீத்தாபதி கோரிக்கை விடுத்தார்.

11 March 2020, 05:34 AM

புதிய மேல்நிலைத் தொட்டிகள் கட்டி தர அரசு முன்வருமா?

திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 18-வது வார்டு வி.எம் நகரில் தற்போது விரிவடைந்து பல வீடுகள் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க அரசு முன் வருமா என கேள்வி எழுப்பினர்.

அதேபோல் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி சில மேல்நிலை குடிநீர் தொட்டிகள் பழுதடைந்துள்ளது. அதை அகற்ற பலமுறை மாவட்ட ஆட்சியர் மனு கொடுத்தும் இதுவரை அகற்றப்படாமல் அச்சுறுத்தும் நிலையில் இருப்பதால் அதை இடித்துவிட்டு புதிய மேல்நிலைத் தொட்டிகள் கட்டி தர அரசு முன்வருமா?

- திருவள்ளூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன்.

11 March 2020, 05:31 AM

மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க அரசு முன்வருமா?

அனைத்து சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும் குடிநீர் கருத்தரங்கம் நடத்தி எந்த இடங்களில் எந்த கிராமங்களில் எந்த ஊராட்சிகளில் குடிநீர் தேவை இருக்குமோ அந்த இடங்களில் மேல் நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்து அதன் மூலமாக குடிநீர் வழங்க வேண்டும்.

அதேபோல் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 217 கிராமங்களில் எந்த பகுதியில் நீர் ஆதாரம் உள்ளதோ அந்த பகுதியை தேர்ந்தெடுத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டியை குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக அமைக்க அரசு முன்வருமா?

- சங்கராபுரம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன்.

11 March 2020, 05:26 AM

குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக குடிநீர் தொட்டிகளை அமைக்க அரசு முன்வருமா?

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக தமிழகம் முழுவதும் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது உள்ளாட்சி துறை சார்பில் குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணி நடைபெறுவதால் காலதாமதம் ஏற்படுகிறது.

எனவே பழைய முறையைப் போலவே குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக குடிநீர் தொட்டிகளை அமைக்க அரசு முன் வருமா? என ஒரத்தநாடு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

11 March 2020, 05:24 AM

சோலார் மின்சார தயாரிப்பில் தமிழகம் பின்தங்கியுள்ளது!

கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 33 கிலோ வாட் துணை மின் நிலையம் தான் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அதை 110 கிலோ வாட் துணை மின் நிலையமாக அமைத்து தர வேண்டும்.

அதேபோல் சோலார் திட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் 20 ஆயிரம் ஏக்கரில் திட்டங்கள் பயன்படுத்தப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் கடலாடி திட்டத்தை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. சோலார் மின்சார தயாரிப்பில் தமிழகம் பின்தங்கியுள்ளது. எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமா?

- கீழ்பெண்ணாத்தூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி கேள்வி!

11 March 2020, 05:22 AM

சீரான மின்சாரம் கிடைக்க அமைச்சர் ஆவன செய்வாரா?

புதுக்கோட்டை தொகுதி கருக்காக்குறிச்சியில் 110 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்க அரசு முன் வருமா?

அதேபோல், புதுக்கோட்டை நகர பகுதியில் உயர் அழுத்த மின்சாரம் வருவதால் வீட்டிலுள்ள மின்சாரப் பொருட்கள் பழுது அடைந்து வருகிறது. சீரான மின்சாரம் கிடைக்க அமைச்சர் ஆவன செய்வாரா?

- புதுக்கோட்டை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு கேள்வி!

11 March 2020, 05:20 AM

மானிய கோரிக்கை விவாதத்தில் தி.மு.க பங்கேற்பு!

இன்று சட்டப்பேரவையில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் மானிய கோரிக்கை விவாதத்தில் தி.மு.க சார்பில் தா.மோ.அன்பரசன் மற்றும் ரகுபதி ஆகியோர் பேச உள்ளனர்.

20 February 2020, 10:07 AM

தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு!

20 February 2020, 09:02 AM

நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க தி.மு.க உறுப்பினர்கள் தயார்! - மு.க.ஸ்டாலின்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “முதலமைச்சர் 10.02.2020 அன்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியதாக தெரிவித்துள்ளார். அந்த கடிதத்திற்கான பதில் என்ன என்பதை அறிய விரும்புகிறேன்.

காவிரிப்படுகையில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு மாநில அரசு அனுமதி வழங்கலாம் என்பது இந்த சட்டத்தில் கொண்டு வந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்கள் பாதிக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் துறைமுகம் பைப் லைன், உள்ளிட்டவை இந்த சட்டத்தில் கட்டுப்படாது என்பதையும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் இந்த சட்டத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்கள் வராது என்பதில் என்ன நிச்சயம்?

இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மாவட்டங்கள் குறிப்பிட்டுள்ளது. அதில் திருச்சி, கரூர், அரியலூர் விடுபட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்? அதேபோல விவசாய பிரதிநிதிகள் 3 பேர் நியமிக்கப்படுவார்கள் என்று சொல்லப்பட்டது. அவர்கள் யார் என்பது தெரிவிக்கப்படவில்லை. ஏற்கனவே விவசாய நிலங்களை விற்று விடுகிறார்கள். ஆனால் அந்த விவசாய நிலங்களை விற்பதற்கு தடை ஏதும் இந்த சட்ட முன்வடிவில் கூறப்பட்டு இருக்கிறதா?

நடைமுறையில் உள்ள பழைய ஹைட்ரோகார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். குஜராத் மாநிலத்தில் பெட்ரோல், காஸ் நிறுவனங்கள் அமைப்பது குறித்த வழக்கில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லப்பட்டது.

அதேபோல் தற்போது இந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு சட்டரீதியாக, சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்ததாக தெரியவில்லை. விவசாயிகளுக்கு பாதுகாப்பான உண்மையான வேளாண் மண்டலமாக சட்ட முன் வடிவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும் என திமுக சார்பில் தெரிவிக்கிறோம்.” என பேசினார். என்றார்.

மேலும் பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க தி.மு.க உறுப்பினர்கள் தயாராக உள்ளார்கள் என்று நேற்றே அறிவித்தேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. இதை தேர்வுக் குழுவிற்கு அனுப்பினால் மட்டுமே பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்பதால் மீண்டும் அதை நான் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்தார்.

20 February 2020, 07:27 AM

NPR பிரச்சினைக்காக தொடர்பாக தி.மு.க வெளிநடப்பு!

#LIVEUpdate | கொரோனா முன்னெச்சரிக்கை : சட்டப்பேரவை நாளையுடன் நிறைவு! #TNAssembly

#NPR குறித்து அரசு முறையாக விளக்கம் அளிக்காததைக் கண்டித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தி.மு.கவைத் தொடர்ந்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

20 February 2020, 07:19 AM

ஹிட்லர் போல அகதிகளாக நம்மையும் அடைப்பார்கள் - எச்சரிக்கும் துரைமுருகன்

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசுகையில், “என்.பி.ஆர் படிவத்தில் அப்பா, அம்மா, பாட்டி பெயர் கேட்கப்படுகிறது. அப்படி தெரியவில்லை என்றால் என்ன பண்டிகை கொண்டாடினீர்கள் என கேட்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல் என்றால் விட்டுவிடுவார்கள். ஆனால் ரம்ஜான், பக்ரீத் என்றால் விடமாட்டார்கள்.

அசாம் மாநிலத்தில் 19 லட்சம் பேரை ஹிட்லர் போல அகதிகளாக அடைத்து வைத்திருக்கிறார்கள். இப்படி நம்மையும் கொண்டு போய் நாளை அங்கு அடைத்து விடுவார்கள். அன்றைக்கு நீங்கள் இருப்பீர்கள். அவர்களின் நிலை என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், “இந்தியாவில் பல்வேறு உயர் பதவிகளை வகித்த குடும்பத்தினருக்கே இந்த சட்டத்தினால் பிரச்னை ஏற்படும் போது, சாதாரண மக்களின் நிலை என்னவாகும்.

அதுமட்டுமின்றி, அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்று தெரியாமல் அந்த சமுதாய மக்கள் உயிரை கையில் பிடித்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில், போராடும் மக்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் வாக்கு வங்கிக்காக சிலர் தூண்டுதலின் பேரில் போராடுகிறார்கள் என அமைச்சர் தெரிவிப்பது நியாயமா?” என துரைமுருகன் கண்டனம் தெரிவித்தார்.

20 February 2020, 06:55 AM

NPR கணக்கெடுப்பை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என அறிவீப்பீர்களா? - மு.க.ஸ்டாலின் கேள்வி?

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “குடியுரிமை சட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. இந்த சட்டத்தை திரும்பப் பெறவேண்டும். சிறுபான்மை மக்களும் ஈழத் தமிழர்களும் இந்த குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிப்படைந்துள்ளனர்.

குறிப்பாக தற்போது என்.பி.ஆரின் புதிய படிவத்தில் பெற்றோர் ஊர், பிறந்த தேதி, சான்றிதழ் தர வேண்டும். அதன்பிறகு அவர்கள் கொண்டாடும் பண்டிகை குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தந்த மக்கள் கொண்டாடப்படும் பண்டிகைகளில் இஸ்லாமியர்கள் உடைய பண்டிகையை குறிப்பிடவில்லை. இதிலேயே மதத்தை பிரிவினை செய்யும் போக்கு இருக்கிறது. இந்த தகவல்களைத் தரவில்லை என்றால் அவர்கள் சந்தேகத்திற்குரியவர்களாக சொல்லப்படும்.

என்பிஆர் மூலம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படப்போகிறது. என்.பி.ஆர் கணக்கெடுப்பை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் அறிவிப்பாரா” என கேள்வி எழுப்பினார்.

20 February 2020, 07:19 AM

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு!

20 February 2020, 06:49 AM

என்.பி.ஆர் கணக்கெடுப்பை என்பது தமிழகத்தில் அனுமதிக்கப்படாது என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்! - தி.மு.க தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின்

20 February 2020, 06:46 AM

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கேள்வி?

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி பேசுகையில், “பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் 1927 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடத்தின் வாடகை.

14 கிராமங்கள் உள்ளடக்கிய சட்டமன்ற தொகுதி என்பதால் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அதிகப்படியான மக்கள் வருகிறார்கள். எனவே புதிய சார்பதிவாளர் கட்டிடம் கட்டித்தர அரசு முன் வருமா” என கேள்வி எழுப்பினர்

20 February 2020, 06:44 AM

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கேள்வி?

துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் பேசுகையில், “துறையூர் தாலுகா மருத்துவமனை என்பதை மிகவும் பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. கர்ப்பிணி பெண்கள், விபத்தில் பாதிக்கப்படும் நோயாளிகள் உள்ளிட்டோர் துறையூர் தாலுகா மருத்துவமனையில் பரிந்துரைக்கப்படுகிறது.

மேல் சிகிச்சைக்கு 55 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதால் துறையூர் தாலுகா மருத்துவமனையை மேம்படுத்தப்பட்ட நவீன மருத்துவ மனையாக மாற்ற அரசு முன் வருமா?” என கேள்வி எழுப்பினர்.

20 February 2020, 06:43 AM

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கேள்வி?

திருத்துறைப்பூண்டி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன் பேசுகையில், “திருத்துறைப்பூண்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் போதுமான வசதிகள் இல்லாததால் அந்த சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தப்பட வேண்டும், அவசர சிகிச்சைக்கு அங்கு வசதிகள் செய்து தரப்பட வேண்டுமா” என்றும் கேள்வி எழுப்பினார்.

20 February 2020, 06:41 AM

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கேள்வி?

ஒட்டபிடாரம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பேசுகையில், “ஒட்டப்பிடாரம் வட்டம் ஒட்டர நத்தம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படவேண்டும். அங்கு மருத்துவ உபகரணங்கள் எதுவும் இல்லை, சுகாதார நிலையத்தில் போதிய படுக்கை வசதிகளும் இல்லை.

ரத்த வங்கி உபகரணங்களை உடனடியாக உபகரணங்களும் அந்த மருத்துவர்களும் செவிலியர்களும் பணியில் அமர்த்தப்பட வேண்டும். அங்கு 108 அவசரகால ஊர்திகளுக்கு மணி நேரத்திற்கு பிறகு தான் வருகிறது” என கேள்வி எழுப்பினார்.

20 February 2020, 06:40 AM

கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு முன்வருமா?

திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் ஏ.வ.வேலு பேசுகையில், “உயர்கல்வித் துறையில் அரசு கலைக் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 15 ஆயிரம் ரூபாய் என்ற குறைந்த ஊதியத்தில் பணி புரிந்து வருகின்றனர்.

பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்தில் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி 57 ஆயிரம் ரூபாய் தருகிறார்கள், பாண்டிச்சேரியில் ஐம்பதாயிரம் ரூபாய் தருகிறார்கள், தமிழகத்தில் சட்டக்கல்லூரியில் கூட 50 ஆயிரம் ரூபாய் தருகிறார்கள்.

ஆனால் அரசு கல்லூரியில் 15 ஆயிரம் ரூபாய் என்பது மிகவும் குறைவாக உள்ளது. ஆசிரியர்கள் நல்ல மனநிலையில் இருந்தால் தான் நல்ல கல்வி மாணவர்களுக்கு கிடைக்கும். கடந்த ஆண்டு நீங்கள் அறிவித்தது போல் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு அரசு முன்வருமா” என கேள்வி எழுப்பினார்..

20 February 2020, 06:37 AM

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் பதில்!

கிருஷ்ணகிரி திமுக சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் பேசுகையில், “கிருஷ்ணகிரியில் அதிகமாக தொழிற்சாலைகள் இருக்கிறது. அங்கே தொழிலாளர் அதிகமாக இருப்பதால் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தொழிலாளர் நீதிமன்றம் அமைக்க வேண்டும்” என கேள்வி எழுப்பினார்

அதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தொழிலாளர் நீதிமன்றம் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

20 February 2020, 06:34 AM

தாலுகா நீதிமன்றம் அமைக்க வேண்டும்! - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், “திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி என்பது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சியின் போது தாலுகாவாக அறிவிக்கப்பட்டது.

தாலுகாவாக அறிவிக்கப்பட்ட மருத்துவமனை உள்ளது. ஆனால் தாலுகா நீதிமன்றம் என்பது இன்னும் அமைக்கப்படவில்லை. அந்த மக்கள் பயன்பெறும் வகையில் தாலுகா நீதிமன்றம் அமைக்க அரசு முன் வருவாரா? என கேள்வி எழுப்பினர்.

20 February 2020, 06:32 AM

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்!

எழும்பூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் பேசுகையில், “எழும்பூர் தொகுதியில் மின் மயானம் இருக்கிறது ஒரு வருட காலமாக அந்த மின் மயானம் பழுதடைந்துள்ளது. அங்கு உடல் எரிக்கப்படும் புகை மண்டலம் அதிகமாக இருப்பதால், அங்கு வசிக்கும் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய் ஏற்படுகிறது. இதனால் மின் மயானத்தை நவீனமயமாக்கப்பட்ட வேண்டும்” என கேள்வி எழுப்பினார்.

அதேப்போல், எழும்பூர் தொகுதியில் ஒட்டெரி மின் மயானம் மின் மயானத்தை நவீனமயமாக்கப்பட்ட வேண்டும் என எழும்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.

20 February 2020, 06:31 AM

ஸ்மார்ட் சிட்டி நகரில் குப்பை அல்லாப்படாமல் உள்ளது!

வேலூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் பேசுகையில், “வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை போடும்போது சாலைகள் பழுதடைந்து விடுகிறது பைபிளின் குறைந்து விடுகிறது.

ஸ்மார்ட் சிட்டி என்று சொல்லப்படுகின்ற வேலூர் மாநகராட்சி 80 லட்சம் பணியில் தனியார் நிறுவனத்திற்கு குப்பை அள்ளும் பணியில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஒரு சாலைகளிலும் குப்பை அல்லாமல் இருப்பதால் நோய் தொற்று ஏற்படுகிறது. இதனால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்” என கேள்வி எழுப்பினார்.

20 February 2020, 06:29 AM

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கேள்வி?

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா பேசுகையில், “உள்ளாட்சித் துறையில் பயன்படுத்தப்படும் நிதிகளில் சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

குறிப்பாக பழுதடைந்த சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மக்களுக்கு பயன்படும். எங்கள் பகுதியில் நல்லூர் - குருவங்கோட்டை கிராம சாலைகள் கடந்த மூன்று ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்துள்ளது.

பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த சாலையை விரைவாக சரிசெய்ய பலமுறை கடிதம் கொடுத்தும் அந்தப் பணி தொடங்கப்படாமல் உள்ளது. எனவே பழுதடைந்த சாலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து உள்ளாட்சித்துறை நிதியை முறையாக பயன்படுத்த அரசு முன் வருமா” என கேள்வி எழுப்பினார்.

20 February 2020, 06:14 AM

மின் திட்ட நிதி மத்திய அரசுக்கு சென்றதா?

வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பா.ரங்கநாதன் பேசுகையில், “2019-ம் ஆண்டு முதல் மின் திட்டத்தில் நிறைய நிதி வந்ததாகவும் பணிகள் குறித்த நேரத்தில் முடிவடையாத காரணத்தால் அந்த நிதி மத்திய அரசுக்கு சென்று விட்டதாகவும் ஒரு தகவல் வந்துள்ளது. இதை அமைச்சர் தெளிவுபடுத்துவாரா” எனக் கேள்வி எழுப்பினார்.

20 February 2020, 06:13 AM

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் பதில்!

செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசு பேசுகையில், “செய்யூர் தொகுதி சித்தாமூர் ஒன்றியம் சித்தார்காடு கிராமத்திற்கு புதிய மின் மாற்றி அமைக்கவேண்டும். அங்கு 50,000-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கிறது. அதனால் மின்னழுத்தம் அதிகமாக ஏற்படுவதால் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் .

ஜீ.வி. குப்பத்தில் இருளர்கள் பகுதி அதிகமாக உள்ளது. அங்கு மின் வினியோகம் இல்லை அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். செய்யூர் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் ஒரு காலை கல்லூரி தொழிற்சாலை எதுவும் இல்லாமல் இருக்கிறது.

செய்யூர் பகுதியில் 4,000 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் காகித வடிவில் தான் இருக்கிறது. அதை கொண்டு வருவதற்கு அரசு முன் வருமா” என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, 4,000 மெகாவாட் அனல் மின் நிலையம் விரைவில் அமைக்கப்படும் என்றும் இருளர் பகுதி இருக்கும் ஜி.வி.குப்பத்தில் மின் விநியோகம் தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

20 February 2020, 06:11 AM

நியாய விலைக் கடை எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

வேளச்சேரி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வாகை.சந்திரசேகர் பேசுகையில், “வேளச்சேரி பகுதியில் சேவா நகர், இந்திரா நகரில் நியாய விலை கடை திறப்பு விழாவும் நடத்தப்பட்டது. ஆனால் இன்னும் அது பயன்பாட்டுக்கு வரவில்லை. அது எப்போது பயன்பாட்டுக்கு வரும்” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அந்த நியாய விலை கடை விரைவில் திறக்கப்படும் என்றார்.

20 February 2020, 06:09 AM

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

வேப்பனபள்ளி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் முருகன் பேசுகையில், “கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி 1971-ம் ஆண்டு கட்டிய பழைய பள்ளி இன்றும் மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப்படவில்லை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தில் உள்ள மாணவர்கள் கூடுதலாக இருக்கும் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

20 February 2020, 06:07 AM

திரு.வி.க நகரில் நியாய விலை கடை அமைக்க அரசு முன்வர வேண்டும்!

திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி பேசுகையில், “திரு.வி.க நகர் தொகுதி 75 வது வார்டு எஸ்.எஸ் புரம் பகுதியில் நியாய விலை கடை அமைக்க அரசு முன் வருமா என கேள்வி எழுப்பினர்.

இந்தப் பகுதியில் 3 ஆயிரத்து 596 வாக்காளர்கள் உள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அதிகம் உள்ள காரணத்தால் தொலைதூரத்தில் உள்ள நியாய விலை கிடைக்கி செல்வதற்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தாலும் ஆட்டோவில் செல்ல கூடிய நிலை ஏற்படுகிறது.

எனவே அந்தப் பகுதி மக்களின் நலன் கருதி புதிதாக இந்த பகுதியில் நியாய விலை கடை அமைக்க அரசு முன்வர வேண்டும்” என தெரிவித்தார்.

19 February 2020, 06:33 AM

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை விவகாரம் குறித்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு உரிமை மீறல் பிரச்னையை மீண்டும் கொண்டுவந்தார்.

சபாநாயகர் இந்த பிரச்னையில் ஏற்கனவே விவாதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. ஒவ்வொரு முறையும் உரிமைப் பிரச்னையை கொண்டுவரக்கூடாது. அதே அவைத் தலைவரின் பேச்சில் குறுக்கீடு செய்வதற்கு சமம். இந்த பிரச்சினை பற்றி பேச அனுமதியில்லை என அவர் தெரிவித்தார்.

சபாநாயகர் பேச அனுமதி மறுத்த நிலையில் தி.மு.க உறுப்பினர்கள் அடையாள வெளிநடப்பு செய்தனர்.

19 February 2020, 06:30 AM

கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!

“பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு : சட்டமன்ற கூட்டத்தில் சட்ட முன் வரைவு மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்” என சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசிய அவர், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டமன்ற கூட்டத்தில் சட்ட முன் வரைவு மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் அதை தி.மு.க வரவேற்கும்.

நாடாளுமன்றத்தில் திமு.கவினர் குரல் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் தொடர்ந்து பேசிவந்தார். நிச்சயமாக தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்கள் என்பதை முதலமைச்சருக்கு தெரிவிக்கிறேன்.” எனப் பேசினார்.

19 February 2020, 06:28 AM

தவிட்டிலிருந்து எண்ணெய் எடுக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும்!

காஞ்சிபுரம் பகுதியில் பட்டு மற்றும் ஜவுளி நிறுவனம் அதிகமாக உள்ளது. பட்டு மற்றும் ஜவுளித் துறைகள நவீனமயமாக்க அதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் .

அதே போல காஞ்சிபுரம் பகுதியில் அரசி ஆலைகள்‌ அதிகமாக உள்ளது. அதில் உள்ள கழிவுப்பொருளாக தவிடு அதிகமாக உள்ளது அதில் இருந்து எண்ணெய் எடுக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும் என காஞ்சிபுரம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கோரிக்கை வைத்தார்.

19 February 2020, 06:25 AM

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு :

திருச்சி மாநகர ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சாலைகள் எதுவும் போடப்படவில்லை. பூங்காக்களை அமைத்து சாலையோரம் அழகுபடுத்துவது மட்டுமே நடைபெற்று உள்ளது. திருச்சி மேற்கு பகுதியில் எந்த சாலையும் போடப்படவில்லை. அதிகாரிகளிடம் கேட்கும்போது பாதாள சாக்கடை திட்டம் வரப்போகிறது. அதனால் தற்போது சாலைகள் போடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். திருச்சி மாநகரம் சாலைகள் இல்லாமல் கிராமங்களை விட மிகவும் மோசமாக உள்ள காரணத்தால் விரைந்து நடவடிக்கை எடுக்க இந்த அரசு முன் வருமா என கேள்வி எழுப்பினார்.

19 February 2020, 06:22 AM

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் :

தூத்துக்குடி மாநகரத்தில் பாதாள சாக்கடை திட்டம் தி.மு.க ஆட்சியில் 2008ஆம் ஆண்டு நிதி ஒதுக்கி பணி தொடங்கியது. 2011ஆம் ஆண்டு 75 சதவிகிதம் பணி நிறைவடைந்த பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பணி நடைபெறாமல் உள்ளது. எனவே அந்தப் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு இந்த அரசு கொண்டுவருமா என கேள்வி எழுப்பினார்.

19 February 2020, 06:21 AM

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு :

துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 33/11 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் இருக்கும் பகுதியை மாற்றி அமைத்திட கடந்த 2019ஆம் ஆண்டு இதே சட்டமன்றத்தில் முறையிட்டேன். அப்போது அமைச்சர் இந்த கூட்டத்தொடரிலேயே முடித்து தருவதாக அறிவித்தார். ஆனால் இதுவரை எந்தவிதமான மாற்று ஏற்பாடுகளும் செய்யவில்லை. அங்கு பொதுப்பணித்துறையின் இடம் காலியாக இருப்பதால் அங்கு மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மின்சார தேவை என்பதை 110/11 கிலோ வாட் அளவுக்கு உயர்ந்துவிடும். இதேபோல் கொளத்தூர் பகுதியிலும் 2007 ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்ட 33/11 கிலோ வாட் துணை மின் நிலையம் இதுவரை தொடங்கப்படாமல் உள்ளது. வருங்காலங்களில் அந்தத் அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய மின் துறை அதிகாரிகளுடன் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தி காலதாமதம் ஏற்படாமலிருக்க விரைந்து நடவடிக்கை எடுக்க அரசு முன் வருமா எனக் கேள்வி எழுப்பினார்.

19 February 2020, 06:11 AM

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசும்போது, “தமிழகத்தில் இடைநிற்றல் தேர்தல் 2016ல்- 8% 2017- 11% என மத்திய அரசு ஒரு புள்ளிவிவரத்தை தந்திருக்கிறது. ஆனால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இடைநிற்றல் 2015 -3.7% 2016 3.7% 2017-3.7 % என்கிறார். இடைநிற்றல் குறித்து மத்திய அரசு கொடுத்த புள்ளி விவரங்கள் தவறு என்று சொல்லப்பட்டிருக்கிறது.

தமிழக அரசு சுகாதாரத்துறையில் பரிசு பெறும்போது அந்தப் புள்ளி விவரங்கள் சரியாக இருக்கிறது, ஆனால் இடைநிற்றல் புள்ளி விவரங்கள் தவறு என்று சொல்கிறீர்கள். இது என்ன மர்மம்” எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பள்ளிதுறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துப் பேசுகையில், “எங்களுடைய புள்ளிவிவரங்கள் சரியானது. ஆசிரியர்களை வைத்து இந்த இடைநிற்றல் புள்ளிவிவரங்களை நாங்கள் சேகரிப்பதிலை. தற்போது ஆன்லைன் மூலமாக தான் இந்த புள்ளிவிவரங்கள் நாங்கள் சேகரிக்கிறோம். மற்ற மாநிலங்களிலும் புள்ளிவிவரங்கள் வித்தியாசம் அதிகமாக சொல்வதால் எங்களுடைய புள்ளிவிவரங்கள் தான் சரியானது” எனத் தெரிவித்திருக்கிறார்.

19 February 2020, 06:09 AM

எம்.எல்.ஏ நிதியில் இருந்து பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர வழி செய்யவேண்டும்!

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா :

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அரசு உதவிபெறும் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் 75க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. அதிகப்படியான எண்ணிக்கையில் இந்த பள்ளிகளில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிகளுக்கு ஆய்வு செல்லும்போது நிறைய கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.

குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கழிப்பறை வசதி போன்றவை.. சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்க விதி இல்லை. எனவே அந்த விதியைத் தளர்த்தி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து பள்ளிகளுக்கு போதுமான வசதிகளைச் செய்து தர அரசு ஆவன செய்யுமா என கேள்வி எழுப்பினார்.

19 February 2020, 06:06 AM

பள்ளி தரம் உயர்த்தப்படுமா?

குளித்தலை தொகுதி கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் போத்துராவுத்தன்பட்டியிலுள்ள நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அரசு ஆவன செய்யுமா என குளித்தலை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராமர் கேள்வி எழுப்பினார்.

தண்டலம் ஏரிப்போடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மேல்நிலை படிப்பிற்காக வாலாஜா, ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்களுக்கு 12 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்று படிக்க வேண்டியுள்ளதால் இந்தப் பகுதியில் உள்ள பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தர அரசு ஆவன செய்யுமா என தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் காந்தி கேள்வி எழுப்பினார்.

18 February 2020, 09:41 AM

மக்கள் குடிக்கிறார்கள் அதற்காக என்ன செய்ய முடியும்! - அமைச்சர் தங்கமணி அலட்சிய பதில்!

மது விற்பனை மூலம் பல ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மனோதங்கராஜ் எழுப்பிய கேள்விக்கு, மக்கள் குடிக்கிறார்கள் அதற்காக என்ன செய்ய முடியும். படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அமைச்சர் தங்கமணி அலட்சியமாக பதில் அளித்துள்ளார்.

18 February 2020, 07:28 AM

மதுக்கடை வருவாயை நம்பி தான் இந்த அரசு உள்ளதா? - மனோ தங்கராஜ் கேள்வி

மதுவை படிப்படியாக ஒழிப்பேன் என்று தேர்தல் வாக்குறுதியை நீங்கள் கடைபிடித்தீர்களா. ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த அரசு மதுக்கடை வருவாயை நம்பி தான் உள்ளதா என மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பினார்.

18 February 2020, 06:52 AM

தி.மு.க கொறடா சக்கரபாணி கேள்வி?

அ.தி.மு.க அமைச்சர் பேசும் பொழுது தி.மு.க ஆட்சி காலத்தில் தான் பள்ளிகளை மத்திய பட்டியலில் கொண்டு சேர்ந்ததாக தவறான தகவலை தெரிவித்துள்ளார்.

எமர்ஜென்சி காலத்தில் தான் பள்ளிகள் மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்குச் சென்றது. மாணவர்கள் மீது இவ்வளவு அக்கறை உள்ளவர்கள் இரண்டு முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

தமிழக அரசு பல கோடி ரூபாய் செலவு செய்து நீட் பயிற்சிகளை மேற்கொண்டும் கூட தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற முடியவில்லை. இப்படி தமிழக மாணவர்களை வஞ்சித்த மத்திய அரசோடு இணக்கமாக இருக்கும் நீங்கள் அழுத்தம் கொடுக்காமல் அமைதியாக இருப்பது ஏன்? என தி.மு.க கொறடா சக்கரபாணி கேள்வி எழுப்பினார்.

18 February 2020, 06:38 AM

காங்கிரஸ் மற்றும் மனித நேய ஜனநாயக கட்சி வெளிநடப்பு!

இலங்கை தமிழர்கள் இரட்டைக் குடியுரிமை குறித்து முறையான பதிலை தெரிவிக்கவில்லை. சபாநாயகரும் அமைச்சர் சொல்வது தான் சரியானது என்று கூறியதால் காங்கிரஸ் மற்றும் மனித நேய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு.

18 February 2020, 06:36 AM

நீலகிரியில் பசுமை வீடுகள் கட்டித் தரவேண்டும்!

நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு குடியிருப்பு இல்லாமல் தவித்து வருகிறார்கள், அதனால் 100 பசுமை வீடுகள் கட்டித் தரவேண்டும் என நீலகிரி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் வலியுறுத்தினார்.

18 February 2020, 06:34 AM

“ஓ.பி.எஸ் ஜல்லிக்கட்டு நாயகனா? எத்தனை மாடுகளை அடக்கினார்?” - துரைமுருகன் கிண்டல்!

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொரு முறை கேள்வி எழுப்பும் போதும் ஜல்லிக்கட்டு நாயகன் என துணை முதலமைச்சரை அழைக்கிறார்கள்.

என்னுடைய கேள்வி என்னவென்றால், அவை முன்னவர் இதற்கு முன் மாடு பிடித்து வெற்றி பெற்று இந்த பெயர் அவருக்கு வந்ததா அல்லது பெயருக்கு ஏற்றபடி ஒரு மாடு பிடி விழாவினை ஏற்பாடு செய்து எங்களையும் அழைத்து பிடித்து காண்பிப்பாரா? என எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் நகைச்சுவையுடன் கேள்வி எழுப்பினார்.

18 February 2020, 06:33 AM

100 பசுமை வீடுகள் கட்டித் தரவேண்டும்!

நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு குடியிருப்பு இல்லாமல் தவித்து வருகிறார்கள், அதனால் 100 பசுமை வீடுகள் கட்டித் தரவேண்டும் என நீலகிரி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் வலியுறுத்தினார்.

18 February 2020, 06:33 AM

தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு :

அமைச்சர் மாபா.பாண்டியராஜன் விவகாரத்தில் சபாநாயகர் தீர்ப்பை ஏற்க மறுத்து தி.மு.க உறுப்பினர்கள் வெளிடப்பு செய்தனர்.

18 February 2020, 06:18 AM

நகைக்கடன் சட்ட திருத்தம் மூலம் வேளாண்மை வங்கிகள் நலிவுற்று போகும் : சட்டமன்றத்தில் தி.மு.க கொறடா சக்கரபாணி ஆதங்கம்!

தி.மு.க கொறடா சக்கரபாணி பேசுகையில், “நகை கடன் 3 லட்சம் வரை தொடக்க வேளாண்மை வங்கியில் விவசாயிகளுக்கு தரப்படுகிறது. ஆனால் மத்திய அரசு தற்போது மார்ச் மாதம் முதல் நகைக்கடன் சட்ட திருத்தம் கொண்டுவந்துள்ளது. நிலம் பதிவு செய்தால் மட்டுமே நகை கடன் வழங்கப்படும் என்ற தெரிவித்துள்ளது.

குறிப்பாக தொடர் வேளாண்மை வங்கிகள் சிறப்பாக செயல்படும் மாவட்டங்களான திண்டுக்கல், திருநெல்வேலி, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட மாவட்டங்களில் 10 கோடிக்கு மேல் நகைக் கடன் விவசாயிகளுக்கு தரப்படுகிறது. ஆனால் இந்த திருத்த சட்டத்தினால் விவசாயிகள் பெரும் பாதிப்படைவார்கள் அதுமட்டுமல்ல சிறப்பாக செயல்படும் தொடர் வேளாண்மை வங்கிகள் நலிவுற்று போகும் என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு இந்த நகை கடன் மூலம் விவசாயிகள் எந்த பாதிப்பும் அடைய மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

18 February 2020, 04:57 AM

பேரவையில் தி.மு.க. வலியுறுத்தல்

கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட மணக்குடியில் உள்ள சதுப்பு நில காடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. உறுப்பினர் ஆஸ்டின் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.

18 February 2020, 04:54 AM

பட்ஜெட் மீதான விவாரம்: 2வது நாளாக தொடங்கியது

நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் கடந்த வெள்ளியன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்றதை அடுத்து, அதன் மீதான மானியக் கோரிக்கைகள், விவாதங்கள் இரண்டாவது நாளாக தொடங்கியது

17 February 2020, 09:39 AM

பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட புள்ளி விவரம் தான் சரியானது! - அமைச்சர் செங்கோட்டையன்

பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, சமீபத்தில் தமிழகத்தில் இடைநிற்றல் கல்வி என்பது நூறு சதவிகிதம் அதிகரித்திருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை புள்ளிவிவரங்களை வெளியிட்டிருப்பதாகவும், ஆனால் தமிழக அரசு சொல்லும் தகவல் வேறு விதமாக இருப்பதாகவும் இரண்டில் எவற்றை கணக்கில் எடுத்துக்கொள்வது என கேள்வி எழுப்பினார். மேலும் இவ்விவகாரத்தில் தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் எனவும் விஜயதரணி பேசினார்.

அதற்கு பதிலளித்து பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மத்திய அரசு எதன் அடிப்படையில் 2016-2017-10%,2017-2018 -16% அவ்வாறான புள்ளி விவரங்களை வெளியிட்டது என்பது தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருப்பதாகவும், அந்த கடிதத்திற்கு பதில் தற்போதுவரை வரவில்லை எனவும் பதிலளித்தார். மேலும் தமிழக அரசு வெளியிட்ட புள்ளி விவரம் தான் சரியானது எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

17 February 2020, 08:30 AM

வருவாய் எப்படி அதிகரிக்கும் - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கேள்வி!

பட்ஜெட் மீதான விவாதம் குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், “பொதுவாக கடனை முதலீடுக்காக செலவு செய்ய வேண்டும். ஆனால் தமிழக அரசு தவறாக பயன்படுத்தியுள்ளது.

தமிழக அரசு வாங்கிய கடனில் 58% மட்டுமே முதலீட்டு செய்துள்ளது. மிதம்‌ இதர செலவு செய்துள்ளது. தற்போது தமிழக அரசின் ஜி.டி.பி 11% குறைந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு 17% -லிருந்து 18 சதவீதமாக இருந்தது.

முதலீட்டு குறைந்துள்ளது. கடன் அதிகரித்துள்ளது. நிதி பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை. உற்பத்தி சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசிடம் வருமானம் இல்லாததே முக்கிய காரணம்.

அதுமட்டுமின்றி, கடந்த 4, 5 ஆண்டுகளாக வருவாய் சதவீதம் 5 - 8 சதவிதம் தான் உள்ளது. ஆனால் எதிர்கால இலக்கு பற்றி 2020 - 2021ஆண்டு 2021 - 2022ஆண்டு 16 சதவிதம் வருவாய் அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளது.

அது எப்படி ஒரே வருடத்தில் 5% இருந்து 16% சதவிதம் எட்டும் என்றே தெரியவில்லையே. ஆனால் அடுத்த ஆட்சி தி.மு.க தலைவர் தலைமையில் வர இருக்கிறது அதனால் அரசுக்கு வருமானம் வரும் என்பதை முன்பே தெரிவித்துள்ளீர்களா என தெரிவித்தார்.

17 February 2020, 08:17 AM

மீன்வளத்துறை அமைச்சர் ஒரு தவறான தகவலை சபையில் பதிவு செய்துள்ளார் : மு.க.ஸ்டாலின்

வண்ணாரப்பேட்டையில் நடைபெறும் போராட்டத்தை திண்டுக்கல் ஐ.லியோனி தூண்டிவிட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வண்ணாரப்பேட்டையில் உள்ள 16 அமைப்புகள் மற்றும் பள்ளிவாசல் சேர்ந்தவர்கள் டிசம்பர் முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டிசம்பர் முதல் ஒவ்வொரு வீட்டிலும் கருப்புக்கொடி கட்டியும், அமைச்சர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு கொடுத்துள்ளனர்.

அதேப்போல், வண்ணாரப்பேட்டை ரவுண்டானா அருகே ஏற்கனவே ஒருமுறை போராட்டம் நடத்தி அதை காவல்துறை வேறு இடம் தருவதாக அன்றைக்கு வாக்குறுதி கொடுத்தும் உள்ளார்கள்.

இந்நிலையில், வெளியில் இருக்கக்கூடிய ஒரு நபரை அவர் பெயர் சொல்லி குற்றச்சாட்டுகள் பதிவு செய்திருப்பது மரபல்ல எனவே அவர் கூறிய பெயரை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

17 February 2020, 07:13 AM

பட்ஜெட் மீதான விவாதம்: பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கேள்வி!

பட்ஜெட் மீதான விவாதம் குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், தமிழக அரசு எப்போதெல்லாம் புதிய திட்டங்கள் அறிவிக்கிறதோ, அப்போதெல்லாம் உறுதியாக கடன் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

வருவாய் வந்தாலும் அரசுக்கு வட்டி கட்டுவதற்கே போய்க்கொண்டிருக்கிறது. மக்களுக்கு எந்த திட்டங்களும் முறையாக போய் சேருவதில்லை. கடன் சுமையைக் குறைப்பதற்கு என்ன செய்ய போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

17 February 2020, 07:09 AM

நாங்கள் ஒன்றும் மத்திய அரசிடம் ஒட்டி உறவாடவில்லை! - துரைமுருகன் வாதம்

நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை வைத்துள்ள தி.மு.க, வேளாண் மண்டக்லத்துக்கு மத்திய அரசிம் அனுமதி வாங்கி தர வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்ததை தி.மு.க வரவேற்பதாகவும், அதே நேரம் வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் டெல்டா மாவட்டங்களில் எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியப்பிறகு அறிவித்திருந்தால் வரவேற்றிருப்போம் என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், அ.தி.மு.க உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சீட்டை தேய்த்து கொண்டிருக்கிறார்கள் என தி.மு.க-வினர் கடந்த காலங்களில் விமர்சித்தனர். தற்போது தி.மு.க அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளது. அவர்கள் தான் மத்திய அரசிடம் வாதிட்டு, வேளாண் மண்டலத்துக்கு அனுமதி பெற்றுத்தர வேண்டும் என கூறினார்.

அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், நீங்கள் அறிவிப்பீர்கள், நாங்கள் அனுமதி பெற்று தர வேண்டுமா என கேள்வி எழுப்பினார். மேலும் அ.தி.மு.கவை போல நாங்கள் மத்திய அரசிடம் ஒட்டி உறவாட வில்லை, எதிரும் புதிருமாக இருக்கிறோம் என பதிலளித்தார்.

17 February 2020, 06:48 AM

பட்ஜெட் உரை மீதான விவாதம் தொடங்கியது !

தி.மு.க சார்பில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசுகையில்,

மதுரை விமான நிலையத்தில் ரன்வே பகுதியில் போதுமான விளக்குகள் இல்லை என்றும் 400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி அதை விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும். அதை இந்த ஆண்டிலாவது முடித்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உள்ளாட்சி உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினாலும் எந்த திட்டமும் இல்லாமல் செயல்பட்டு வருவதாக பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டினார்.

17 February 2020, 06:42 AM

தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர் வெளிநடப்பு!

முதலமைச்சரின் விளக்கம் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என தி.மு.க வெளிநடப்பைத் தொடர்ந்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

17 February 2020, 06:32 AM

சட்டப்பேரவையிலிருந்து தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு!

முதலமைச்சரின் விளக்கத்தை எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்தை தீர்மானமாக கொண்டு வர வேண்டும் என கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் இல்லாததால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துவிட்டு வெளிநடப்பு செய்தார்.

17 February 2020, 06:20 AM

வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் தடியடி ஏன் நடைபெற்றது? - அபூபக்கர் கேள்வி

இதுவரை பேணிப் பாதுகாக்கப்பட்ட நல்லிணக்கம் இனிமேலும் பேணி பாதுகாக்க வேண்டும். இது முஸ்லிம்களுக்கு மட்டும் பாதிக்கப்படக்கூடிய சட்டமில்லை. ஒட்டுமொத்தமாக இந்திய இறையாண்மைக்கு பாதிக்கக்கூடிய சட்டம்.

அமைதியான வழியில் வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் இந்த தடியடி என்பது ஏன் நடைபெற்றது, அந்த சூழ்நிலையை ஏற்படுத்திய அதிகாரி யார்? - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் கேள்வி

17 February 2020, 06:11 AM

சிஏஏ-வுக்கு எதிராக பேச அனுமதி மறுப்பு!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவது தொடர்பாக பேசுவதற்கு வாய்ப்பில்லை. - சபாநாயகர்

17 February 2020, 06:08 AM

மக்களின் போராட்டத்தை சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம்! - கே.ஆர். ராமசாமி

காங்கிரஸ் சார்பில் பேசிய கே.ஆர். ராமசாமி, “ குடியுரிமை சட்டத்திருத்தத்தை தீர்மானமாக கொண்டு வர காலதாமதம் செய்கிறீர்கள். போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. மக்களின் போராட்டத்தை சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம். மத்திய - மாநில அரசுகள் மக்களின் எண்ணம் என்ன என்று சிந்தித்து செயல்பட வேண்டும்.

சென்னையில் நடந்த தடியடி போல் வேறு எந்த இடத்திலும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக தீர்மானமாக சட்டமன்றத்தில் கொண்டு வர வேண்டும்” என தெரிவித்தார்.

17 February 2020, 06:01 AM

சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்! - மு.க.ஸ்டாலின்

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்..

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினர்.

டெல்லியை போல தமிழகத்திலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக அமைதியான வழியில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் பெண்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வந்த நிலையில் காவல்துறையை தூண்டிவிட்டு தடியடி நடத்தி விட்டு அதற்கு யார் காரணம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

17 February 2020, 05:59 AM

புதிய நியாய விலை கடை அமைக்க வேண்டும்!

கன்னியாகுமரி தொகுதி தடிக்காரன்கோணம் ஊராட்சி வீரபுளி கிராமத்தில் உள்ள மக்கள் நான்கு கிலோமீட்டர் நடந்துதான் பகுதிநேர நியாய விலை கடை செல்ல வேண்டும் என்ற நிலையில் உள்ளனர். இதனால் தமிழக அரசு தனது விதியை தளர்த்தி அங்கே புதிய நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என கன்னியாகுமரி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் கேள்வி கேள்வி நேரத்தின் போது கேட்டுக்கொண்டார்.

17 February 2020, 05:47 AM

பள்ளிகளை தரம் உயர்த்த மக்களிடம் பணம் பெறக் கூடாது!

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசுகையில், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கு பொதுமக்களிடம் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் பெறுவதை விதிவிலக்கு செய்ய வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு மத்திய அரசு சார்பில் நிதி ஒதுக்கப்படுகிறது. அதிலிருந்து நிதியை ஒதுக்கவேண்டும் . தற்போது பள்ளிக்கல்வித் துறைக்கு 36 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களிடமிருந்து பணம் பெறாமல் அரசே அந்த தொகையை ஏற்க முன்வர வேண்டும் எனக் கோரினார்.

17 February 2020, 05:44 AM

உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக மாற்றவேண்டும்!

கீழ்பெண்ணாத்தூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி பேசுகையில், முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் ஓராண்டிலேயே 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக மாற்றினார். பல கிராமங்களில் டவுன்பஸ் அதிகமாக இல்லாததால் அதிகமானவர்கள் நெடுந்தூரம் செல்லவேண்டிய கட்டாயம் இருக்கிறது அதனால் உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக மாற்றுவதற்கு துரிதமாக செயல்பட வேண்டும் எனப் பேசினார்.

17 February 2020, 05:33 AM

காவல்துறை அத்துமீறலைக் கண்டித்து பதாகை!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் காவல்துறை அத்துமீறலைக் கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி பதாகை ஏந்தி நுழைந்தார்.

17 February 2020, 04:31 AM

பட்ஜெட் மீதான விவாதத்தில் தி.மு.க, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு!

பட்ஜெட் மீதான விவாதத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சார்பில் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாதவரம் சுதர்சனம் ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் விஜயதாரணி உள்ளிட்டோர் பேச உள்ளனர்.

17 February 2020, 04:30 AM

தி.மு.க தலைவர் சட்டப்பேரவைக்கு வருகை!

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை வந்தார்.

14 February 2020, 09:26 AM

பேரவை மீண்டும் 17-ம் தேதி கூடும் - சபாநாயகர்

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை நிறைவு செய்தவுடன் பேரவை மீண்டும் 17-ம் தேதி காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

14 February 2020, 07:45 AM

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்காக 1,033 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

14 February 2020, 07:01 AM

தமிழக பட்ஜெட் 2020-2021 : துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

14 February 2020, 06:45 AM

தமிழக பட்ஜெட் 2020-2021 : மகப்பேறு உதவித்தொகை திட்டத்திற்கு ரூ.959.21 கோடி ஒதுக்கீடு!

டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை திட்டத்திற்கு ரூ.959.21 கோடி ஒதுக்கீடு

14 February 2020, 06:09 AM

தமிழக பட்ஜெட் 2020-2021 : துறை வாரியாக நிதி ஒதுக்கீடு

ஊரக வளர்ச்சித் துறை - 23,161 கோடி

நகராட்சி நிர்வாகம் - 18,540 கோடி

பள்ளிக்கல்வித்துறை - 34,181 கோடி

உயர்கல்வித்துறை - 5,502 கோடி

சுகாதாரத்துறை - 15,863 கோடி

உணவுத்துறை - 6,500 கோடி

வேளாண் துறை - 11,894 கோடி

மீன்வளத்துறை - 1,128 கோடி

காவல்துறை - 8,876 கோடி

தமிழ் வளர்ச்சித் துறை - 74 கோடி

14 February 2020, 05:57 AM

மடிக்கணினிக்காக 966.46 கோடி ஒதுக்கீடு!

பள்ளிகல்வி துறையில் மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் மடிக்கணினிக்காக 966.46 நிதி வழங்கப்படும்.

14 February 2020, 05:35 AM

மத்திய அரசு வழங்குமென நம்புகிறோம்!

“2017-18ம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு 4,073 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை உள்ளது. நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் மத்திய அரசு வழங்கும் என நம்புகிறோம்.”

- நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

14 February 2020, 05:35 AM

21 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய்ப் பற்றாக்குறை!

தற்போது சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய்ப் பற்றாக்குறை உள்ளது. 2021-2022 ஆம் நிதி ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.10,970 கோடியாக குறையும்.

தமிழக அரசு நிதி பற்றாக்குறை கடந்த 2018-2019ல் 47,134 கோடி ரூபாய் இருந்தது. தற்போது 2019 -2020 ஆம் நிதி ஆண்டில் பற்றாக்குறை 55,058 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. - நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

14 February 2020, 05:25 AM

அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா!

நிர்பயா நிதித்திட்டத்தின் கீழ் அனைத்து பேருந்துகளிலும் ரூ.75.02 கோடி செலவில் சி.சி.டி.வி கேமரா அமைக்கப்படும்.

- ஓ.பன்னீர்செல்வம்

14 February 2020, 05:12 AM

தமிழக பட்ஜெட் 2020 - 2021 : பள்ளிக்கல்வித்துறை

#LIVEUpdate | கொரோனா முன்னெச்சரிக்கை : சட்டப்பேரவை நாளையுடன் நிறைவு! #TNAssembly
14 February 2020, 05:12 AM

தமிழக பட்ஜெட் 2020 - 2021 : உயர்கல்வித்துறை

#LIVEUpdate | கொரோனா முன்னெச்சரிக்கை : சட்டப்பேரவை நாளையுடன் நிறைவு! #TNAssembly
14 February 2020, 05:12 AM

தமிழக பட்ஜெட் 2020 - 2021 : தமிழ்வளர்ச்சித் துறை

#LIVEUpdate | கொரோனா முன்னெச்சரிக்கை : சட்டப்பேரவை நாளையுடன் நிறைவு! #TNAssembly
14 February 2020, 05:01 AM

தமிழக பட்ஜெட் 2020 - 2021 : பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

14 February 2020, 04:55 AM

தமிழக பட்ஜெட் 2020 - 2021 : தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடி!

தமிழக பட்ஜெட் 2020 - 2021 : 2020-21 ஆம் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும்!

- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

14 February 2020, 04:53 AM

தமிழக பட்ஜெட் 2020 - 2021 : தமிழ் வளர்ச்சித் துறைக்கு 74 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

14 February 2020, 04:51 AM

தமிழக பட்ஜெட் 2020 - 2021 : நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ. 15,850.54 கோடி ஒதுக்கீடு!

14 February 2020, 04:50 AM

எரிசக்தி துறைக்கு ரூ. 20,115.58 கோடி ஒதுக்கீடு!

14 February 2020, 04:49 AM

வேளாண் துறைக்கு ரூ.11,894 கோடி ஒதுக்கீடு!

14 February 2020, 04:46 AM

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு!

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

14 February 2020, 04:44 AM

உணவு மானியத்துக்கு ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கீடு

உணவு மானியத்துக்கு ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

14 February 2020, 04:34 AM

தமிழக பட்ஜெட் 2020 - 2021

14 February 2020, 04:32 AM

ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.

#LIVEUpdate | கொரோனா முன்னெச்சரிக்கை : சட்டப்பேரவை நாளையுடன் நிறைவு! #TNAssembly
14 February 2020, 04:32 AM

சட்டபேரவை கூட்டம் தொடங்கியது.

14 February 2020, 04:32 AM

பல்வேறு பிரச்னைகளை எழுப்ப தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு!

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி நடைபெறும் கூட்டத்தொடரில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு, நீட் தேர்வு, டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு, குடியுரிமைச் சட்டம் போன்ற பல்வேறு பிரச்னைகளை எழுப்ப தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

14 February 2020, 04:30 AM

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை வருகை.

தமிழக சட்டப்பேரவை நடைபெறும் தலைமைச் செயலகத்துக்கு தி.மு.க தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தார்.

14 February 2020, 04:24 AM

தமிழக அரசின் பட்ஜெட்டை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்!

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இன்று காலை 10 மணிக்கு பேரவை கூடியதும், 2020-21-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல் வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

banner

Related Stories

Related Stories