இந்தியா

LIC பங்கை தனியாருக்கு விற்பதா? என்ன நியாயம் இது? - பொங்கும் தென் மண்டல ஊழியர் சங்கம்: ஸ்ட்ரைக் அறிவிப்பு!

மத்திய பட்ஜெட்டின் போது எல்.ஐ.சி பங்குகளை விற்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.

LIC பங்கை தனியாருக்கு விற்பதா? என்ன நியாயம் இது? - பொங்கும் தென் மண்டல ஊழியர் சங்கம்: ஸ்ட்ரைக் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எல்.ஐ.சி பங்குகளை விற்பது என்ற பட்ஜெட் முன்மொழிவு படு பாதக பொருளாதார பாதையின் உச்சம் என தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு கண்டித்துள்ளது. இதுதொடர்பாக அதன் பொதுச் செயலாளர் டி.செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கை விடுத்துள்ளார்.

அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

என்ன நியாயம் இது?

முதலில் தனியார் மயத்திற்கு காரணம் நட்டத்தில் பொதுத்துறை இயங்குவதே என்றார்கள். திறமையற்ற நிர்வாகம், சேவை என்றார்கள். மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்கிறார்கள். இப்படி எந்தவொரு குற்றச்சாட்டையாவது எல்.ஐ.சி மீது இந்த அரசாங்கத்தால் சொல்ல முடியுமா?

எல்.ஐ.சி கடந்த நிதியாண்டில் டிவிடெண்ட் ஆக மட்டும் அரசுக்கு தந்த தொகை ரூ.2,611 கோடி. 1956ம் ஆண்டில் வெறும் 5 கோடி அரசு முதலீட்டில் தொடங்கப்பட்ட எல்.ஐ.சிக்கு, அதற்கு பின்னர் கூடுதல் முதலீடே தேவைப்படவில்லை. பங்கு சந்தைக்கு இழுத்து வருவதற்காகவே சட்ட நுணுக்கங்களை காரணம் காட்டி ரூ.100 கோடியாக மூலதனத்தை உயர்த்தினார்கள்.

LIC பங்கை தனியாருக்கு விற்பதா? என்ன நியாயம் இது? - பொங்கும் தென் மண்டல ஊழியர் சங்கம்: ஸ்ட்ரைக் அறிவிப்பு!

இந்த தொகையும் அரசு ஆண்டு தோறும் எல்.ஐ.சியிடமிருந்து பெறுகிற டிவிடென்டில் மிகச்சிறிய பகுதியேயாகும். வெல்லப் பிள்ளையாரை கிள்ளி அவருக்கே நைவேத்தியம் செய்வது போலத்தான். இப்படி தற்சார்பு கொண்ட நிறுவனத்தை தனியார் மயமாக்க முனைவதற்கு என்ன நியாயம் இருக்கிறது?

இது அமுத சுரபி

இந்திய பொருளாதாரத்திற்கு எல்.ஐ.சி ஓர் அமுத சுரபியாக திகழ்கிறது. 11வது ஐந்தாண்டு (2012 -17) திட்டத்திற்கு எல்.ஐ.சியின் பங்களிப்பு ரூ 14,23,055 கோடிகள். சராசரியாக ஆண்டிற்கு ரூ 2,84,000 கோடிகள். 12வது ஐந்தாண்டு திட்டத்தின் முதல் இரண்டு ஆண்டுகளிலேயே (2017-19) அரசுக்கு தந்திருப்பது 7,01,483 கோடிகள். ஆண்டு சராசரி 3,50,000 கோடியாக உயர்ந்துள்ளது.

எல்.ஐ.சியின் சொத்து மதிப்பு ரூ.32 லட்சம் கோடிகள். ரயில்வே, நெடுஞ்சாலை, துறைமுக மேம்பாடு, மின்சாரம், நீர்ப்பாசனம், குடிநீர் என அரசின் ஆதாரத் திட்டங்களுக்காகவும், சமூக நலனுக்காகவும், அரசின் பத்திரங்களிலும் முதலீடு செய்துள்ள தொகை ரூ 28,84,331 கோடிகள். அரசின் பட்ஜெட் மதிப்பீடுகள் எல்லாம் பொய்த்து போகிற சூழலில் கூட எல்.ஐ.சி மீதான நம்பிக்கை, எதிர்பார்ப்பு மட்டும் பொய்த்ததே இல்லை என்பதை மறுக்க முடியுமா? நிர்வாகத் திறமைக்கு இதைவிட சான்று என்னவாக இருக்க முடியும்!

LIC பங்கை தனியாருக்கு விற்பதா? என்ன நியாயம் இது? - பொங்கும் தென் மண்டல ஊழியர் சங்கம்: ஸ்ட்ரைக் அறிவிப்பு!

கடைசி மனிதனுக்கும் இன்சூரன்ஸ்

1956ல் 245 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தேசிய மயமாக்கப்பட்ட போது "மூலை முடுக்குக்கெல்லாம் இன்சூரன்ஸ் பாதுகாப்பை கொண்டு போய் சேர்ப்பதே லட்சியம்" என அறிவிக்கப்பட்டது. என்ன பொருள்! தனியார்களால் 245 நிறுவனங்கள் இருந்தும் செய்ய முடியவில்லை என்பதுதானே.1,999க்கு பின்னர் மீண்டும் இன்சூரன்ஸ் துறையில் வந்த பன்னாட்டு நிறுவனங்களும் தனியார்களுமாவது சாதாரண மக்களுக்கு இன்சூரன்ஸ் சேவையை விரிவு செய்தார்கள் என்பதற்கு ஏதாவது ஆதாரங்கள் உண்டா? ஆனால் அதை ஒரே நிறுவனமாக எல்.ஐ.சி செய்துள்ளது. 40 கோடி பாலிசிகளை இன்று எல்.ஐ.சி வைத்திருக்கிறது.

இவ்வளவு பாலிசிகளை வைத்துள்ள உலகின் முதல் நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என்றாலே திவால் என்ற நிலைமையை மாற்றி பாலிசித்தாரர்க்கான உரிம பட்டுவாடாவை 98.4 சதவிகிதம் என்கிற அளவில் வைத்துள்ளது. இதுவும் உலகின் நம்பர் 1 சதவிகிதம்.

நம்பிக்கையின் மறு பெயர்

இந்திய இன்சூரன்ஸ் துறையில் உள்ளே வந்த பன்னாட்டு நிறுவனங்கள் சில பத்தாண்டுகளில் இங்கேயிருந்து முதலீடுகளை எடுத்துக்கொண்டு திரும்பி விட்டார்கள். அமெரிக்காவின் ஏ.ஐ.ஜி, ஆஸ்திரேலியாவின் ஏ.எம்.பி ஆகியன உதாரணங்கள். நீண்ட கால சேமிப்புகளை பாதுகாக்க வேண்டிய தனியார் நிறுவனங்கள் 10 ஆண்டுகளில் வெளியேறுகிறார்கள் எனில் இவர்களை நம்பி எப்படி மக்கள் சேமிக்க முடியும்?

LIC பங்கை தனியாருக்கு விற்பதா? என்ன நியாயம் இது? - பொங்கும் தென் மண்டல ஊழியர் சங்கம்: ஸ்ட்ரைக் அறிவிப்பு!

கடந்த 4 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் மட்டுமே அந்நிய முதலீடு, இன்சூரன்ஸ் துறையில் வந்துள்ளது. எல்.ஐ.சி ஓராண்டிற்கு தரும் 3.50 லட்சம் கோடி எங்கே! இவர்கள் கொண்டு வந்துள்ள முதலீடுகள் எங்கே? இப்படி எந்த ஒரு தரவும் இன்றி எல்.ஐ.சியின் தனியார் மயம் அறிவிக்கப்பட்டிருப்பது மக்கள் விரோத செயல். தேச நலனுக்கு எதிரானது என தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.

வெளிநடப்பு வேலைநிறுத்தம்

தமிழகத்தின் மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல மையங்களில் எல்.ஐ.சி ஊழியர்கள் பட்ஜெட் முன்மொழிவை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் பிப்ரவரி 4 அன்று நாடு தழுவிய 1 மணி நேர வெளி நடப்பு வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது. இதர தொழிற்சங்கங்களையும் கலந்தாலோசித்து, இணைத்து இந்த வேலை நிறுத்தம் நடை பெறும் என தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு தெரிவித்துக்கொள்கிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories